August 04, 2010

பதிவுலகில் நான் ஒரு ........

முஸ்கி : என்னை இந்த தொடரை எழுதச் சொல்லி 18464 போன் கால்ஸ், 76532 sms, 8984 மெயில்,1524 ஃபேக்ஸ்-னு ஒரே தொந்தரவு.... சரி எழுதி தொலைக்கலாம்னு நினச்சிகிட்டு இருக்கும்போது, ”சூரியனின் வலை வாசல்அருண்பிரசாத் ஊருக்கெல்லாம் தெரியுரா மாதிரி டமாரம் அடிச்சி கூப்டுட்டாரு , வேற வழியில்லாம, இவர் கூப்டுதான் இந்த பதிவுன்னு சொல்லவேண்டியதாப் போச்சி.....


1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

 பட்டிகாட்டான் (Jey)

2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?

இல்லை, உண்மையான பெயர் ஜெயக்குமார். வலையுலகம் எனக்கு அறிமுகமான புதுசுல, எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டுட்டு கீழே, இப்படிக்கு ”ஜெயக்குமார்”னு வெள்ளந்தியா போட்டுகிட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது ’ஜெயக்குமார்’ ’ஜெய்’ என்ற பேர்ல ஏற்கனவே பதிவுலகத்துல இருக்காங்கனு. அதனால இங்லீஷ்ல “Jey" னு வச்சிகிட்டேன் (தமிழ்ல பேர் வைக்கக்கூட முடியாத பரிதாபமான நிலை!!!!, நல்ல வேலை, சூப்பரா சமையல் குறிப்பு எழுதுர ஒரு அம்மணி “Jay"னு ஒரு எழுத்து மாத்தி வச்சிருந்தாங்களோ இந்த பேராவது கிடைச்சுது...). அப்புறம் வலைபக்கம் ஆரம்பிக்கலாம்னு நினைக்குரப்போ, சட்டுனுதோனுன பேர்தான் ” பட்டிகாட்டான்(பட்டணத்தில்)” , பட்டிகாட்லேர்ந்து வந்து சென்னைல செட்டில் ஆனதுனால இந்த பேர்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

போன மே மாசம் , இணையதலத்துல எதையோ (இந்த மாதிரி கேள்விக்கு பதில் எழுதுவோம்னு தெரிஞ்சிருந்தா, எதை தேடும்போது, தேடின தேதி எல்லாம் நோட் பண்னி வச்சிருந்திருப்பேன்!!!) தேடிட்டிருக்கும்போது பட்டாபட்டி எழுதுன ஒரு லிங் வந்தது, சரி தமிழ் எழுத்துக்கள் இருக்கேனு அந்த லிங்க கிளிக் பண்ணி படிச்சா, யப்பா மனுஷன் நக்கல் நையாண்டியோட சூப்பரா பல விஷயங்கள குமுறி எடுத்திருந்தாரு, அப்புறம், அவருக்கு ஓட்டுபோட கிளிக் பண்ணினா தமிலிஷ் அறிமுகமாகி , அங்க லிஸ்ட்ல இருந்த பதிவுகள பாத்து மலைச்சி போயிட்டேன்.

 ’அ’ னாலேர்ந்து ’ஃ’ நா வரை எல்லாத்தைபத்தியும் அவங்கவங்க ஸ்டலுல, வெவ்வேரு கண்ணோட்டத்துல எழுதியிருந்தாங்க. குஷியாகி, நெறய பேர் பதிவுகளுக்கு படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு இருந்தப்ப, 14 பேர் எனக்கு ஃபாலோவர் (அதுல ஒருத்தரை மிரட்டியே follower ஆக்கினேன்!!) ஆகி பின்னூட்டம் போடும்போதெல்லாம், எழுதசொல்லி ஒரே தொந்தரவு, நானும் உற்சாகமாகி பதிவு போட்டு...........ம்ஹூம், அப்புறம்தான் தெரிஞ்சது இவங்க பலிகுடுக்க புதுசா ஒரு “ஆடு” தேடிட்டிருந்தபோது , நான் வந்தி சிக்கியிருந்துருக்கேன்னு...


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பதிவு எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் நெறய பேருக்கு, நான் போய் பின்னூட்டமும், ஓட்டும் போட்டுட்டு, பதிலுக்கு எனக்கும் போடச்சொல்லி கண்டிஷனாக் கேக்க ஆரம்பிச்சேன், அதுல பாதி தேரிச்சு,  மீதி பலபேரு  திட்டினாங்க, பலபேர் தொந்தரவு தங்காம, என் வலைபக்கமே வராம எஸ் ஆயிட்டாங்க.
என்னோட முதல் பதிவை ‘வலைச்சரத்துல’   dheva  ஆசிரியரா இருக்கும்போது அறிமுகப்படித்தினதுல நெரய பேருக்கு அறிமுகமாச்சி.
தமிலிஷ்,டமில்-10,உலவு, தமிழ்மனம் நு இணைச்சதுல அறிமுகமில்லாத நெறயப்பேர் வந்து படிச்சிட்டு பின்னூட்டமும் ஒட்டும் போட்டங்க.....,
அதுகப்புறமும் நாம பிரபலம் ஆனாமாறித் தெரியலை, அதனால நானே ‘பிரபலப் பதிவர்’னும், சமீபத்தில ”சூப்பர்ஸ்டார் பதிவர்”னும் பரப்பசொல்லி ஆள் செட்டப் பண்ணிருக்கேன்....அவங்களும் காசு வாங்காமலே நட்புக்காக ஒசில நல்லா கூவிட்டிருக்காங்க... இதுவும் சரிவரலைனா வேற ரோசனையும் இருக்கு.....
(ஆகமொத்துல, உருப்படியா எழுதி பிரபலமாகுறதா ஐடியா இல்லையானு யாரும் கேக்கதீக.... அதெல்லாம் நொம்ப கஷ்டம்)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?


     ஆமங்க, நான் சின்ன வயசுல எருமைமாடு மேய்ச்சதுனால, எப்படி நாலாப்பு பியிலானேனு எழுதிருக்கேன், பத்தாப்பு ஸ்கூல் போட்டொவ போட்ருக்கேன், பூக்குழி மிதிச்சதை எழுதிருக்கேன்...எழுதுனதுல பாதி என் சுய புராணந்தேன்...( ஊர் பேரு, அதுல வர்ற தெரிஞ்சவங்க பேர மட்டும் போடல)


        5.1) ஆம் என்றால் ஏன்?.
              
                     பெரிய பிளானெல்லம் கிடயாது, எல்லாம் வெள்ளந்தியா எழுதுனதுதான்.


        5.2) அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

                 விளைவு!!!!..... அத ஏங்க கேட்டுகிட்டு, ஏதாவது ஆடு சிக்காதானு அலைஞ்சுகிட்டு இருந்த பயபுள்ளக வந்து பின்னூட்டம்ன்ற பேர்ல, கும்மு கும்முனு கும்மிட்டாய்ங்க....

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்கதான் எழுத ஆரம்பிச்சேன், இப்ப என்னடான்னா மொத்த பொழுதும் இங்கயே போயிருமோன்னு பயமாருக்கு..., ஆஃபீஸ்ல ஆணிபிடுங்குறது குறைஞ்சி , பிடுங்க வேண்டிய ஆணி  நெறய குமிஞ்சிருச்சி..., வீட்ல வந்து சிஸ்டத்துக்கு முன்னாடி உக்காந்தா வழக்கமா கிடைக்கிற பூரிக்கட்ட அடி கூட இப்ப பூரி தேய்க்கிற முக்காலி அடியும் சேந்து போச்சி.... சரி வுடுங்க வூட்டுக்கு வூடு வாசப்படி... எவ்வளவோ சமாளிச்சிட்டோம், இத சமாளிக்க மாட்டமா.....

ஆங் நோட் பன்ணிக்குங்க, இங்க எழுத ஆரம்பிச்சி நெறய பேர் ஃபிரண்ட்ஸ் ஆயிருக்காங்க, நெறய பேர் எனக்கு ஃபாலொவரா ஆயிருக்காங்க...., இதுதாங்க இங்க வந்து சம்பாத்தியம்

( அப்பாடி , இந்த ஒருமாசம் பதிவு எழுதி சம்பாறிச்சதுலேர்ந்து, அண்ணா நகர்ல, ஒரு பிளாட் வாங்குனது... அப்புறம், புது காருக்கு அட்வான்ஸ் குடுத்தது... எல்லாத்தையும் சொல்லி இன்கம் டாக்ஸ் காரங்ககிட்ட மாட்டாம தப்பிச்சுட்டோம்..... எப்படியாவது கண்டுபிடிச்சிருவாங்களோ... அலர்ட்டாவே இருப்போம்.)

7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


அது இருக்குங்க நெறய.....சொன்னா நம்பமேட்டீங்க எனக்கு 297 மொழில எழுத படிக்கத் தெரியும், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வலைப்பதிவுன்னு 297 இருக்கு.(ஒரு வேலை நம்பினாலும் நம்பிருவாய்ங்களோ)

தமிழ்ல இந்த வலைபக்கம் மட்டும்தாங்க.

(அறுக்கமாட்டாத அய்யாவுக்கு 62 அருவா எதுக்குன்னேன்.... ஒத்த அருவாவ வச்சி அறுக்குரதுக்கே வெள்ளாமையில்ல பயிரைக்காணோம்......... நல்லா கேக்குராய்ங்கய்யா டீடெய்லு....)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோவம்..... ச்சே நமக்கு கோவமெல்லாம் வர்ரதே இல்லீங்க... ஆங் இருங்க...நான் பதிவு போட்டா, வந்து படிச்சிட்டு புகழ்ந்து நாலுவரி பின்னூட்டம் போடாம, ஓட்டும் போடாம இருக்காங்களே அவங்க மேலதாங்க கொல்லக்கோவம்....

பொறாமை...... அது இருக்குங்க வண்டி வண்டியா...., எல்லாம் என்னைவிட கொல்லப்பேரு நல்லா எழுதுராங்கள்ல அவங்க மேலதான்...இந்த பட்டாபட்டியோட நக்கல் நையாண்டி, மங்குணி அமைச்சரோட குசும்பு, சிரிப்பு போலீஸ் பண்ர ரவுசு, தக்காளி இந்த பிரியமுடன் வசந்த் பண்ற கலாட்டா, ஜெய்லானி ...... யருய்யா அது பதிவு நீளமா போடாதேனு மிரட்டுரது... லிஸ்ட்ல இருக்குரவங்க பேரெல்லாம் சொல்லி தனி பதிவா போட்டுறேன்.( அப்பா ஒரு பதிவு போட மேட்டர் கிடைச்சாச்சு...)

இந்த கவுஜ நமக்கு புரியுரதே இல்லை... இருந்தாலும் நம்மல மட்டமா நினைச்சிரக் கூடாதுன்னு அவங்க பிளாக் பக்கம் போய் , அப்படி இப்படின்னு புரிஞ்சா மாதிரி, பின்னூட்டம் போட்டுட்டு வந்துருவேன், அவங்களும் அதுக்கு பொறுப்பா பதில் சொல்லுவாங்க, எனக்கு சிப்பு சிப்பா வரும்.. (ஐய்ய்யோ உளரிட்டேனே, இனிமே கவுஜ எழுதுரவங்க பிளாக் பக்கம் போய் நல்லாருக்குனு கமெண்ஸ் போட்டாலும் வெரட்டுவாங்களோ!!!!, ச்சே ச்சே நல்லவங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க..).


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

அந்த கூத்து பெரிய கூத்துங்க... செவனேனு மத்தவங்க எழுதுரத படிச்சிகிட்டு பின்னூட்டம் போட்டிட்டிருந்தவன,  இந்த பட்டாபட்டி, முத்து, பன்னிகுட்டி ராமசாமி, மங்குனி அமைச்சர்,ஜெய்லானி, பருப்பு மோகன், சிரிப்பு போலிஸ் ( பேர வச்சிருக்கானுக பாரு....ங்கொய்யாலே) இவய்ங்கெல்லாம் சேந்து  கிட்டதட்ட மிரட்டி எழுத வச்சிட்டானுக.... நம்ம மேல இவ்வளவு நம்பிக்கயானு நினைச்சு சந்தோசம்கூட பட்டேங்க. அப்புறம் தான் தெரிஞ்சது இந்த நாதாரிங்க அவங்க வெட்டி விளையாட ஃபிரஸ்ஸா ஆடு, கிடைக்காம என்னை ஏமாத்தி உள்ளே இழுத்துருக்கானுகனு....

முதன் முதலா பதிவை எப்படி பதிவேத்துரதுன்னு தெரிஞ்சிக்க ’அ’னா ஆ-வன்னா எழுதி டெஸ்ட் பதிவு போட்டேன், அதுக்கே ஆஹா ஓகோனு பாராட்டி கமென்ஸ் போட்டு உசுப்பேதினாங்க...

முதல் பின்னூட்டம் நம்ம சிரிப்பு போலிஷ் போட்டது.. இப்ப நமக்கு கொல்லப்பேரு ஃபிரண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க, அம்மனிககூட நெறய பின்னூட்டம் போடுராங்கன்னா பாத்துக்குங்க...


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இதுவரை என் அனுபவங்கள எழுதுனதை வச்சே கும்மிகிட்டு இருக்காங்க, இதுல இன்னும் சொல்லனுமா...., இதுவரை எழுதுனதுல பாதி பதிவு என்னை பத்திதான்... அட நான் சின்ன வயசுல எருமை மாடி மேய்ச்சதுனால எப்படி நாலாப்பு பெயில் ஆனேன்னுகூட எழுதியிருக்கேங்க..., இன்னும் எதுனா என்னை பத்தி தோனுச்சின்னா பதிவா போடுரேன்.....

டிஸ்கி 1 : ஒருமாசமா தினத்துக்கம் யாராவது இந்த தொடர்பதிவு எழுதிட்டிருக்காங்க, கிட்டத்தட்ட நாந்தா இத எழுதுர கடைசி ஆளோன்னு கூட சந்தேகமா இருக்கு..., எனக்கு அறிமுகமான உரிமையோட கூப்பிடலாம்னு வச்சிருந்த லிஸ்டுல எல்லாரும் எழுட்டாங்க எழுதாதவங்க லீவுல இருக்காங்க... இப்ப யாரை கூப்பிடலாம்.....மூனு பேர் ஞாபகத்துக்கு வருது.... அவங்ககிட்ட சம்மதம் வாங்கல அதனாலே விட்ருங்க... இது என்னோட முடியட்டும், வேற ஏதாவது உருப்படியா அவங்க எழுதட்டும்...

டிஸ்கி 2 : அப்புறம் தலைப்புல பாதிதான் எழுதிருக்கேன் மீதிய ”சூப்பர் ஸ்டார் பதிவர்” அப்படின்னு “ஃபில் அப்” பண்ணிக்குங்க, வேர ஏதும் வில்ல்ங்கமா யோசிச்சி எழுதிராதீக......


90 comments:

senthil velayuthan said...

hey first

Jey said...

முதன்முதல்ல வந்து வடை வாங்கிருக்கீக...:)

senthil velayuthan said...

இதுவரை என் அனுபவங்கள எழுதுனதை வச்சே கும்மிகிட்டு இருக்காங்க, இதுல இன்னும் சொல்லனுமா...., இதுவரை எழுதுனதுல பாதி பதிவு என்னை பத்திதான்... அட நான் சின்ன வயசுல எருமை மாடி மேய்ச்சதுனால எப்படி நாலாப்பு பெயில் ஆனேன்னுகூட எழுதியிருக்கேங்க..., இன்னும் எதுனா என்னை பத்தி தோனுச்சின்னா பதிவா போடுரேன்.....

superuu அப்பு

கருடன் said...

:-)

மசக்கவுண்டன் said...

நல்லா எளுதீருக்கீங்க தோஸ்த்.

Unknown said...

//ஒத்த அருவாவ வச்சி அறுக்குரதுக்கே வெள்ளாமையில்ல பயிலைக்காணோம்.//

எந்த fileஅ காணவில்லை?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாரு பிரதர் இந்த பட்டாபட்டி..?
ரொம்ப தொந்தரவு பண்றானா?...

நீங்க மட்டும் “உம்”னு சொல்லுங்க..போட்டு தள்ளிட்டு வரேன்
ஹி..ஹி



-வெளியூர்காரன்

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
:-)//

தூக்கக்கலக்கத்துல வந்து கமெண்ட்ஸ் போட்டியாலே??????

Jey said...

மசக்கவுண்டன் said...
நல்லா எளுதீருக்கீங்க தோஸ்த்.//

நன்றி. உங்களை விடவா, கொங்கு ப்பஷைல சூப்பரா எழுதுரீங்க சார், இந்த தலைமுறைக்கு தெரியாத, வழக்கத்துல மறைதுபோன பல விஷயங்கள எழுதிருக்கீங்க நன்றி அண்ணே.

Jey said...

கலாநேசன் said...
//ஒத்த அருவாவ வச்சி அறுக்குரதுக்கே வெள்ளாமையில்ல பயிலைக்காணோம்.//

எந்த fileஅ காணவில்லை?//

ஒரு
பயிர்
பயிலாக
மறியிருக்கிறதே
சரிபண்ணிட்டேன்.
----கவிதை நல்லாருக்கா சார்.:)
வேணாம் சார், பேச்சு பேச்சாதான் இருக்கணும், அடிக்கெல்லாம் வரக்கூடாது...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்படியே பதிவ போட்டதும்...

”கில்லி படம்” போங்க...

படம் சூப்பராயிருக்காம்.. விஜய் நடிச்சது..

மறக்காம பார்த்துட்டு சீக்கிரமா(?) விமர்சனம் எழுதுங்க பிரதர்..

உங்க விமர்சன பதிவுக்காக...நாங்க வெயிட்டிங்...

( தக்காளி.. எப்ப கேட்டது..எப்ப போடுது பாரு...)

Jey said...

பட்டாபட்டி.. said...
யாரு பிரதர் இந்த பட்டாபட்டி..?
ரொம்ப தொந்தரவு பண்றானா?...

நீங்க மட்டும் “உம்”னு சொல்லுங்க..போட்டு தள்ளிட்டு வரேன்
ஹி..ஹி

-வெளியூர்காரன்////

சொல்லதேய்யா, செயல்ல.. செயல்ல காட்டனும்....

Unknown said...

தம்பி எழுதுனதிலேயே மிகச்சிறந்த பதிவு இதுதான்..
பட்டா ஓகே வா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கே.ஆர்.பி.செந்தில் said...

தம்பி எழுதுனதிலேயே மிகச்சிறந்த பதிவு இதுதான்..
பட்டா ஓகே வா...
//

சத்தமா சொல்லாதீஙக செந்தில..

அப்புறம் , ”பூக்குழி இறங்கினாலும் இறங்கிடும்”...ஹி..ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

வீட்ல வந்து சிஸ்டத்துக்கு முன்னாடி உக்காந்தா வழக்கமா கிடைக்கிற பூரிக்கட்ட அடி கூட இப்ப பூரி தேய்க்கிற முக்காலி அடியும் சேந்து போச்சி.... சரி வுடுங்க வூட்டுக்கு வூடு வாசப்படி... எவ்வளவோ சமாளிச்சிட்டோம், இத சமாளிக்க மாட்டமா.....///


அது தானே எவ்வளவோ வாங்குறோம் இத வாங்க மாட்டோமா ..

Jey said...

பட்டாபட்டி.. said...
அப்படியே பதிவ போட்டதும்...

”கில்லி படம்” போங்க...

படம் சூப்பராயிருக்காம்.. விஜய் நடிச்சது..

மறக்காம பார்த்துட்டு சீக்கிரமா(?) விமர்சனம் எழுதுங்க பிரதர்..

உங்க விமர்சன பதிவுக்காக...நாங்க வெயிட்டிங்...

( தக்காளி.. எப்ப கேட்டது..எப்ப போடுது பாரு...)///

ங்கொய்யாலே, வேரெங்கயோ போட்ட பின்னூட்டத்த இங்க பேஸ்ட் பன்ணிட்டீரா?

நான், தெலுங்கு “ஒக்கடு” தான் பாத்தேன், “கில்லி” பாககலை

Jey said...

கே.ஆர்.பி.செந்தில் said...
தம்பி எழுதுனதிலேயே மிகச்சிறந்த பதிவு இதுதான்..
பட்டா ஓகே வா...///

ஹி ஹி , ரொம்ப புகழாதீங்கண்ணே, எனக்கு, கூச்சம் ..கூச்சமா இருக்கு.:)

Jey said...

பட்டாபட்டி.. said...
கே.ஆர்.பி.செந்தில் said...

தம்பி எழுதுனதிலேயே மிகச்சிறந்த பதிவு இதுதான்..
பட்டா ஓகே வா...
//

சத்தமா சொல்லாதீஙக செந்தில..

அப்புறம் , ”பூக்குழி இறங்கினாலும் இறங்கிடும்”...ஹி..ஹி///

தள்ளிவிடுரதுக்கு ரெடியா இருக்கியா பட்டா....

சரி இங்க பணப்புழுக்.. ச்சீ பணப்புழக்கம் டல்லா இருக்கு, சிங்கை டாலர் கொஞ்சம் அனுப்பி அதை சரி பன்ணு பட்டா....

Jey said...

வெறும்பய said...
வீட்ல வந்து சிஸ்டத்துக்கு முன்னாடி உக்காந்தா வழக்கமா கிடைக்கிற பூரிக்கட்ட அடி கூட இப்ப பூரி தேய்க்கிற முக்காலி அடியும் சேந்து போச்சி.... சரி வுடுங்க வூட்டுக்கு வூடு வாசப்படி... எவ்வளவோ சமாளிச்சிட்டோம், இத சமாளிக்க மாட்டமா.....///


அது தானே எவ்வளவோ வாங்குறோம் இத வாங்க மாட்டோமா ..///

அதானே...நம்மளப் பத்தி சரியாத் தெரியல....பாவம்.

Karthick Chidambaram said...

:)))))))

சௌந்தர் said...

, அம்மனிககூட நெறய பின்னூட்டம் போடுராங்கன்னா பாத்துக்குங்க...//
வீட்டில் பார்க்க மாட்டார்கள் தைரியமா

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா ஜெய் , எது பதிவு போற்றுக்கேன்னு சொன்ன எங்க ?

மங்குனி அமைச்சர் said...

இம் , கண்டுபுடுச்சிடேன் ஜெய்

திரு ஜெயகுமார் அய்யா சமூகத்திற்கு
தங்களது பதிவு படித்த உடம் என் கண்கள் இருந்தும் கலங்கி விட்டன , எவ்வளவு அருமையாக எழுதி இருக்கீங்க , மெய்சிலித்து விட்டது ,தங்களுது எழுத்து கல்கி , சாண்டில்யன் போன்றவர்களைகூட மிஞ்சி விட்டது . இது போன்ற காவியங்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது . நன்றி ஜெய் , மிக்க நன்றி . தொடருங்க எங்களுக்காக

மங்குனி அமைச்சர் said...

இந்த பட்டாபட்டி, முத்து, பன்னிகுட்டி ராமசாமி, மங்குனி அமைச்சர்,ஜெய்லானி, பருப்பு மோகன், சிரிப்பு போலிஸ் ( பேர வச்சிருக்கானுக பாரு....ங்கொய்யாலே) இவய்ங்கெல்லாம் சேந்து கிட்டதட்ட மிரட்டி எழுத வச்சிட்டானுக...////

இவனுக எதுவும் பிரச்சனை பண்ணினால் சொல்லு ஜெய் , போட்ருவோம்

Jey said...

சௌந்தர் said...
, அம்மனிககூட நெறய பின்னூட்டம் போடுராங்கன்னா பாத்துக்குங்க...//
வீட்டில் பார்க்க மாட்டார்கள் தைரியமா///

அடிவாங்கி பலகிருச்சி...ஹி ஹி .

Jey said...

மங்குனி அமைசர் said...
இம் , கண்டுபுடுச்சிடேன் ஜெய்

திரு ஜெயகுமார் அய்யா சமூகத்திற்கு
தங்களது பதிவு படித்த உடம் என் கண்கள் இருந்தும் கலங்கி விட்டன , எவ்வளவு அருமையாக எழுதி இருக்கீங்க , மெய்சிலித்து விட்டது ,தங்களுது எழுத்து கல்கி , சாண்டில்யன் போன்றவர்களைகூட மிஞ்சி விட்டது . இது போன்ற காவியங்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது . நன்றி ஜெய் , மிக்க நன்றி . தொடருங்க எங்களுக்காக////

வய்யா..வாய்யா.. இத இததான் எதிர்பார்த்தேன்.என் எழுத்துல இவ்வளவு மயங்கிட்டியா மங்கு....உனக்கு லெக் பீசும்,ஒரு ஆப்பும், பார்சல் அனுப்பிருக்கேன் எஞ்சாய்...

Jey said...

மங்குனி அமைசர் said...
இந்த பட்டாபட்டி, முத்து, பன்னிகுட்டி ராமசாமி, மங்குனி அமைச்சர்,ஜெய்லானி, பருப்பு மோகன், சிரிப்பு போலிஸ் ( பேர வச்சிருக்கானுக பாரு....ங்கொய்யாலே) இவய்ங்கெல்லாம் சேந்து கிட்டதட்ட மிரட்டி எழுத வச்சிட்டானுக...////

இவனுக எதுவும் பிரச்சனை பண்ணினால் சொல்லு ஜெய் , போட்ருவோம்///

கொஞ்ச நாளா அடக்கி வாசிக்கிரானுக..., ஏதும் புதுசா பிரச்சினை பன்ணினா சொல்லியனுப்புரேன், வந்து ஒரே போடா போட்ருயா(இவனும் கூட செந்து கும்மிட்டு எகத்தாலத்த பாரு, பன்னாடை.. பன்னாடை..)

மங்குனி அமைச்சர் said...

ஜெய் , ஈரல் பிறை ஒரு பிளேட் அனுப்பேன்
(எங்களுக்கு சீரியஸா எழுத வரும்ல )

மங்குனி அமைச்சர் said...

Jey said...


கொஞ்ச நாளா அடக்கி வாசிக்கிரானுக..., ஏதும் புதுசா பிரச்சினை பன்ணினா சொல்லியனுப்புரேன், வந்து ஒரே போடா போட்ருயா(இவனும் கூட செந்து கும்மிட்டு எகத்தாலத்த பாரு, பன்னாடை.. பன்னாடை..)///

ஆமா உங்க ஊருல திருவிழா எப்ப ? தக்காளி சொந்தா ஊருலே பளிகுடுத்திடலாம் .
சொன்னத மண்ணுக்காக பலியாகுற யாருக்கு கிடைக்காத பாக்கியம்(ஆமா இந்த பாக்கியம் யாரு ?) உனக்கு கிடைச்சிருக்கு ஜெய்

சௌந்தர் said...

அடிவாங்கி பலகிருச்சி...ஹி ஹி//

அடி வாங்கியதில் என்ன வோல்ட் கப் வாங்கியதை போல பெருமை..ஹி ஹா ஹி ஹா

Jey said...

மங்குனி அமைசர் said...
ஜெய் , ஈரல் பிறை ஒரு பிளேட் அனுப்பேன்
(எங்களுக்கு சீரியஸா எழுத வரும்ல )//

அனுப்பினா, நான் கை கை காட்ருரவங்கள போட்டுத்தள்ளுவியா மங்கு

Jey said...

மங்குனி அமைசர் said...
ஜெய் , ஈரல் பிறை ஒரு பிளேட் அனுப்பேன்
(எங்களுக்கு சீரியஸா எழுத வரும்ல )//

அனுப்பினா, நான் கை கை காட்ருரவங்கள போட்டுத்தள்ளுவியா மங்கு

Jey said...

சௌந்தர் said...
அடிவாங்கி பலகிருச்சி...ஹி ஹி//

அடி வாங்கியதில் என்ன வோல்ட் கப் வாங்கியதை போல பெருமை..ஹி ஹா ஹி ஹா ///

நீங்களும் தப்பமுடியாதுடியோவ்....

Jey said...

மங்குனி அமைசர் said...
Jey said...


கொஞ்ச நாளா அடக்கி வாசிக்கிரானுக..., ஏதும் புதுசா பிரச்சினை பன்ணினா சொல்லியனுப்புரேன், வந்து ஒரே போடா போட்ருயா(இவனும் கூட செந்து கும்மிட்டு எகத்தாலத்த பாரு, பன்னாடை.. பன்னாடை..)///

ஆமா உங்க ஊருல திருவிழா எப்ப ? தக்காளி சொந்தா ஊருலே பளிகுடுத்திடலாம் .
சொன்னத மண்ணுக்காக பலியாகுற யாருக்கு கிடைக்காத பாக்கியம்(ஆமா இந்த பாக்கியம் யாரு ?) உனக்கு கிடைச்சிருக்கு ஜெய்///

ஏம்பா, என்கிட்ட ஆர்டர் பண்ணி மொக்கிட்டு, என்னயே பலி கொடுக்க பிளான் பன்றா மாதிரி தெரியுதே....அவ்வ்வ்வ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி அமைசர் said...
ஜெய் , ஈரல் பிறை ஒரு பிளேட் அனுப்பேன்
(எங்களுக்கு சீரியஸா எழுத வரும்ல )//

அனுப்பினா, நான் கை கை காட்ருரவங்கள போட்டுத்தள்ளுவியா மங்கு////


நாங்கல்லாம் புறாவுக்காக போர்தொடுத்தவுங்க , ஈரலுக்காக ஒரு கொலை என்ன பல கொலைகள் பண்ணுவோம் (மங்கு மீண்டும் வேல்லைகொடிக்கு வேலை வந்துவிட்டது )

Jey said...

மங்குனி அமைசர் said...

நாங்கல்லாம் புறாவுக்காக போர்தொடுத்தவுங்க , ஈரலுக்காக ஒரு கொலை என்ன பல கொலைகள் பண்ணுவோம் (மங்கு மீண்டும் வேல்லைகொடிக்கு வேலை வந்துவிட்டது )///

அப்ப மொத வெளியூர போட்டுட்டுவா, அப்புறமா, ஒவ்வொருபேரா சொல்ரேன்...., வரும்போது அப்படியே ஊரலையும் உருவிட்டு வந்துரு..

Anonymous said...

அப்பாடா இம்மா பெரிய பேட்டி பதில் ...ஜெ , நல்ல இருந்தது உங்க சுயபுராணம் ..

Jey said...

sandhya said...
அப்பாடா இம்மா பெரிய பேட்டி பதில் ...ஜெ , நல்ல இருந்தது உங்க சுயபுராணம் ///

உங்களையும் காயத்திரி மேடத்தையும், தொடரச் சொல்லலாம்னு நினைச்சேன், பாவம்னு விட்டுட்டேன்...:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்ப மொத வெளியூர போட்டுட்டுவா, அப்புறமா, ஒவ்வொருபேரா சொல்ரேன்...., வரும்போது அப்படியே ஊரலையும் உருவிட்டு வந்துரு..


//

உகூம்.. சரிவராது..
அப்பு.. அதுகிட்ட ஜாக்கிரதையா இருந்துக்க..

ரத்தமே வராம..கிட்னிய வித்துட்டு போயிடுவான்..

சொல்லீட்டேன்...

( இப்ப நினைச்சாலும் எனக்கு அடி வயிறு கலங்கும்..பார்த்துக்க.....)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்.. நாந்தான் 40 - து..

Jey said...

பட்டாபட்டி.. said...

உகூம்.. சரிவராது..
அப்பு.. அதுகிட்ட ஜாக்கிரதையா இருந்துக்க..

ரத்தமே வராம..கிட்னிய வித்துட்டு போயிடுவான்..

சொல்லீட்டேன்...

( இப்ப நினைச்சாலும் எனக்கு அடி வயிறு கலங்கும்..பார்த்துக்க.....)///

இப்ப மச்சி ரொமன்ஸ் மூடுல, மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி அலையுது, இப்ப போட்டா, சுளுவா போடலாம்:)

Jey said...

பட்டாபட்டி.. said...
அய்.. நாந்தான் 40 - து..///

40க்கெல்லாம் ட்ரைனிங் அனுப்ப முடியாடுடியோவ்...

(பன்னிகுட்டி சென்னைல இருக்கார், ஈவெனிங் மீட்பன்றதா ஐடியா)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

(பன்னிகுட்டி சென்னைல இருக்கார், ஈவெனிங் மீட்பன்றதா ஐடியா)
//

என்னோட பேர் சொல்லி , தண்ணி அடிங்க..
( முடிஞ்சா.. அதுக்கு தெரியாம தண்ணி அடிக்கும் போட்டோ அடுத்து எனக்கு அனுப்பு..

நானும் நக்கீரம் கேவாலு..சாரிப்பா.. கோபாலு மாறி, போட்டோ வெச்சு....காசு பார்க்கிறேன்..ஹி..ஹி)

vasu balaji said...

அட போங்கப்பா. இன்னும் பூரிக்கட்ட அடி எது முக்காலி அடி எதுன்னு தரம் பிரிக்கத் தெரியுதுன்னா எக்ஸ்பீரியன்ஸ் பத்தலைன்னு அர்த்தம். மூஞ்சிக்கு நேர கைய நீட்டி மறிச்சு, ஏங்க இப்ப அடிச்சேன்னு சொன்னாலும் அப்புடியான்னு கேக்கற லெவலுக்கு வர நெம்ப நாளாகும் போலயே:))

Jey said...

பட்டாபட்டி.. said...


என்னோட பேர் சொல்லி , தண்ணி அடிங்க..
( முடிஞ்சா.. அதுக்கு தெரியாம தண்ணி அடிக்கும் போட்டோ அடுத்து எனக்கு அனுப்பு..

நானும் நக்கீரம் கேவாலு..சாரிப்பா.. கோபாலு மாறி, போட்டோ வெச்சு....காசு பார்க்கிறேன்..ஹி..ஹி)///

பட்டா, கைவசம் நெறய தொழில் வச்சிருகியே... நாலஞ்சு எங்களுக்கும் சொல்லிகுடுய்யா...


ஆமாஇதெ ஐடியாவ மங்குனிக்கும், பன்னிக்கும், என்னை படம்புடிக்க சொல்லிருக்கியா?.. எதுக்கு சாக்கிரதையா இருக்கோணும்...

Jey said...

வானம்பாடிகள் said...
அட போங்கப்பா. இன்னும் பூரிக்கட்ட அடி எது முக்காலி அடி எதுன்னு தரம் பிரிக்கத் தெரியுதுன்னா எக்ஸ்பீரியன்ஸ் பத்தலைன்னு அர்த்தம். மூஞ்சிக்கு நேர கைய நீட்டி மறிச்சு, ஏங்க இப்ப அடிச்சேன்னு சொன்னாலும் அப்புடியான்னு கேக்கற லெவலுக்கு வர நெம்ப நாளாகும் போலயே:))///

ஆகா, அண்ணேன், உங்க கிட்ட கவுஜைக்கு மட்டும் கிளாஸ் வரலாம்னு நினைச்சேன், இதுலையும் நீங்கதா எக்ஸ்பீரியன்ஸ்டா...., உங்க கிட்ட கூட்டுவச்சிகிட்டா பல விசயங்கள கத்துக்கிடலாம்போலயே...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

பதிவர்களே ,வாசகர்களே ,இந்த பதிவு பதிவுலகத்தை அடுத்த கட்ட பயணத்துக்கான நெம்புகோலாக இருக்கும் என்பது வெள்ளிடைமலை ..,ஆம் இந்த பதிவின் ஆசிரியர் , செவ்வியலையும் இலக்கியத்தையும் ஒரு சேர தேனில் குழைத்து வாசக அன்பர்களுக்கு தருகிறார் ...,மேலும் வெள்ளந்தியாக போன்ற தமிழ் நாட்டில் உள்ள வட்டார மொழிகளையும் இங்கே நமக்கு தந்து நமது அறியாமையை போக்குகிறார்...,சமுகத்தின் மீது படிந்துள்ள கறைகளை பற்றிய பத்தி நல்ல ஒரு அவதானிப்பு ...மேலும் இபதிவில் சில பதிவர்களை நுணுக்கமாக பாராட்டியுள்ளார் ..இதனால் பதிவுகலத்தில் ஒரு எழுத்தாளன் எப்படி உருவகியிருகிறான் என்று சொல்லும் இடம் உணர்சிகுவியலாய் விளக்கப்பட்டிருக்கிறது...,எழுத்தாளர் தன் பேரை சொல்லும் அந்த கட்டத்திலும் சரி ,பதிவுலகத்தை அறிந்ததை பற்றி சொல்லும் போதும் சரி இது தனியாக எழுதப்பட வேண்டிய ஒரு நாவலின் ஹைக்கூ....

/////3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி/////
இந்தக் கேள்விக்கான விடையில் மறைந்திருக்கிறது 21ம் நூற்றாண்டின் கதை! ஆம் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த எழுத்தளர்களை அறிமுக படுத்த போகிறது
பதிவை படித்து எழுந்த அவதானிப்பு இது ...,மேலும் இந்த சிறந்த பதிவை பற்றி சில மணித்துளிகளில் பின்னூட்டம் இடுகிறேன்
நன்றி
பனன்காட்டுநரி

செல்வா said...

///வீட்ல வந்து சிஸ்டத்துக்கு முன்னாடி உக்காந்தா வழக்கமா கிடைக்கிற பூரிக்கட்ட அடி கூட இப்ப பூரி தேய்க்கிற முக்காலி அடியும் சேந்து போச்சி....///
ஹை .. ஜாலி ...!!
//சொன்னா நம்பமேட்டீங்க எனக்கு 297 மொழில எழுத படிக்கத் தெரியும், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வலைப்பதிவுன்னு 297 இருக்கு.///
297 மொழில இருந்த யாரவது மொழிபெயர்ப்பு செய்து தமிழ்ல எழுதின அதைய படிக்கத் தெரியும் .. அதானே சொல்ல வரீங்க ..!!

கருடன் said...

@பட்டா
//உகூம்.. சரிவராது..
அப்பு.. அதுகிட்ட ஜாக்கிரதையா இருந்துக்க..

ரத்தமே வராம..கிட்னிய வித்துட்டு போயிடுவான்..//

புரட்சி பதிவர் பட்டாவே இப்படி பயந்த நாங்க என்ன பண்றது... சும்மா தைரியமா போய் வெளியூர் ப்ளாக்ல கொரல் கொடுங்க... நாங்க எல்லாம் (இங்க இருந்தே) சப்போர்ட் பண்றோம்...

கருடன் said...

50.... training unda?

அருண் பிரசாத் said...

ஆணி புடுங்கிட்டு வர்றதுக்குள்ள 50 போட்டாச்சா! ஜெய், நீ பிரபலம் ஆயிட்டயோ

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.../////

இதோ இந்த கேள்வியில் பல விதமான நுணுக்கமான விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறார் ...,குறிப்பாக ,பட்டாபட்டி என்று சொல்லும் போது நாட்டில் குறைந்து உள்ள பட்டாபட்டி போன்ற பான்ட்,நம் மங்குனி அமைச்சர்களை பற்றியும் .போலீஸ் பற்றியும் சாடியுள்ளார்
//// முதல் பின்னூட்டம் நம்ம சிரிப்பு போலிஷ் போட்டது..////
இதில் உள்ள நுண்ணரசியல்,அவருக்கு தேவை மாமுல் அதனால் யார் முதலில் பதிவு போட்டாலும் முதல் மாமுல் அவருக்கு சென்றுவிட வேண்டும் ...என்று எழுதி சாடியுள்ளார்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இந்த பதிவில் கருத்து பிழையோ ,உவமைகளோ எதுவுமே இல்லை ....ஆனால் எழுத்து பிழை மட்டும் ஒரே ஒரு இடத்தில் உள்ளது அதை மட்டும் சரி செய்து விட்டால் ...அருமையான பதிவு இது ,,,,

அந்த பிழை ”சூரியனின் வலை வாசல்” அருண்பிரசாத்'' இதில் அருணுக்கும் பிரசாத்துக்கும் இடைவெளி இருக்க வேண்டும் இப்படி சேர்த்து எழுத கூடாது ,
சூரியனின் வலை வாசல் இலக்கண விதி படி '''அருண் பிரசாத்''' குற்றியலுகர வினையான வினையெச்சம் படி தான் எழுத வேண்டும் ...பதிவர் கவனிபாரக

Jey said...

கும்மிஅடிச்சிகிட்டு இருங்க பெரிய ஆணி ஒன்னு இருக்கு, பிடுங்கி போட்ட்வாரேன்....பின்னூட்டம் போடுரவங்க ஓட்டு போட்ருங்கய்யா....

Gayathri said...

" பொழுது போக்கதான் எழுத ஆரம்பிச்சேன், இப்ப என்னடான்னா மொத்த பொழுதும் இங்கயே போயிருமோன்னு பயமாருக்கு...,"

ஹா ஹா நீங்க அப்படி இருக்கறதுனால தான் இத்தனை அருமையான பதிவர் எங்களுக்கு கெடச்சுருகுறிங்க...

அருமையான பேட்டி நன்றி ப்ரோ..

தேவன் மாயம் said...

ஜே! கலக்கிட்டீங்க!

பொன் மாலை பொழுது said...

கூடி கும்மி அடிக்க இன்னும் ஒரு இடம் கெடச்சிருக்கு.பட்டா பட்டியும், மன்குணியும்,பண்ணிக்குட்டியும் கூடவே இந்த பட்டிக்காட்டான் (பட்டணத்தில்)
அடிங்க அடிங்க! கை வலிக்கிற வரைக்கும் அடிங்க !!

ஜெய்லானி said...

//(அதுல ஒருத்தரை மிரட்டியே follower ஆக்கினேன்!!) //

இருய்யா அவசரமா கிளம்பிகிட்டு இருக்கேன் வேலைக்கு ராத்திரி வரேன் கும்முரதுக்கு

இப்ப வரட்டா...!!!!!!!!!!!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் இன்னாய கடை காத்து வாங்குது ...,எங்காய போன ஜெய் ????

Jey said...

பனங்காட்டு நரி said...///

ஆணி மக்கா.. ஆணி...,

சும்மா சூப்பரா புகழ்ந்து தள்ளியிருக்க...
உன் பின்னூட்டம் படுக்கிரது. தனித்தனி பதிவ படிக்கிரா மாதிரிதான் இருக்கு:)

Jey said...

ப.செல்வக்குமார் said...//

ஏம்பா, நான் அடிவாஙுரது உனக்கு ஜாலியா, இரு நீ மாட்டும்போது கும்மி அடிக்கிரேன்


Gayathri said...///

நன்றி சகோதரி... ஒட்டு போட மறந்திட்டீங்க போல:)

TERROR-PANDIYAN(VAS) said...//

என்னய்யா நீயும், நரியும் நல்ல கும்மி மூடுல இருந்திருக்கீங்க போல, கலந்துக்க முடியாம போச்சி...சரி விடுங்க இதுக்கும் சேத்து வச்சி கும்மிக்கலாம்:)

கக்கு - மாணிக்கம் said...///

வாங்க சார், கும்மி அடீக்குரவங்களுக்கு தனி விருது குடுத்து ஊக்கபடிட்தினதே நீங்கதானே:),
நீங்களும் சேந்துக்கங்க:)

Jey said...

ஜெய்லானி said...
//(அதுல ஒருத்தரை மிரட்டியே follower ஆக்கினேன்!!) //

இருய்யா அவசரமா கிளம்பிகிட்டு இருக்கேன் வேலைக்கு ராத்திரி வரேன் கும்முரதுக்கு

இப்ப வரட்டா...!!!!!!!!!!!!!///

போய்ட்டு வா மக்கா....

Jey said...

தேவன் மாயம் said...
ஜே! கலக்கிட்டீங்க!///

நன்றி தேவன் மாயம் :)

Jey said...

அருண் பிரசாத் said...
ஆணி புடுங்கிட்டு வர்றதுக்குள்ள 50 போட்டாச்சா! ஜெய், நீ பிரபலம் ஆயிட்டயோ///


ஹிஹி நம்மதான் சூப்பர்ஸ்டார் பதிவராச்சே....:)

முத்து said...

நான் தான் 65

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் முதல் பதிவு போட்டிருக்கேன் எப்படி தமிழ் மணத்து ல சேர்கறதுன்னு தெரியலை பார்த்து நல்ல இருந்தா சொல்லுங்க ..,இல்லேன்னா இப்பவே நிறுத்திடுறேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
This comment has been removed by the author.
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

http://muttalpaiyannan.blogspot.com/2010/08/blog-post.html

சி.பி.செந்தில்குமார் said...

துள்ளளும் ,எள்ளலும் நிறைந்த நடை.நகைச்சுவை இயல்பாவருது உங்களுக்கு.பிரபல பதிவர் ஆகிட்டீங்க

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ்
உன்னக்கு இந்த தமிழ் மணத்துலே எப்படியா சேரது ...,அந்த கருவி பட்டையை எப்படியா இணைக்கிறது ??மண்டை காயுதுயா ..,ஜெய் அத எப்படி இணைக்கிறது சொல்லுயா புண்யமா போகும்

ப்ரியமுடன் வசந்த் said...

//இந்த கவுஜ நமக்கு புரியுரதே இல்லை... இருந்தாலும் நம்மல மட்டமா நினைச்சிரக் கூடாதுன்னு அவங்க பிளாக் பக்கம் போய் , அப்படி இப்படின்னு புரிஞ்சா மாதிரி, பின்னூட்டம் போட்டுட்டு வந்துருவேன், அவங்களும் அதுக்கு பொறுப்பா பதில் சொல்லுவாங்க, எனக்கு சிப்பு சிப்பா வரும்.. (ஐய்ய்யோ உளரிட்டேனே, இனிமே கவுஜ எழுதுரவங்க பிளாக் பக்கம் போய் நல்லாருக்குனு கமெண்ஸ் போட்டாலும் வெரட்டுவாங்களோ!!!!, ச்சே ச்சே நல்லவங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க..).//

செம உள்குத்து பங்காளி ரசித்தேன்!

Jey said...

சி.பி.செந்தில்குமார் said...
துள்ளளும் ,எள்ளலும் நிறைந்த நடை.நகைச்சுவை இயல்பாவருது உங்களுக்கு.பிரபல பதிவர் ஆகிட்டீங்க//

வருகைக்கும், உற்சாகப்படுத்துவதற்கும் நன்றி சி பி எஸ்.

Jey said...

பனங்காட்டு நரி said...
யோவ்
உன்னக்கு இந்த தமிழ் மணத்துலே எப்படியா சேரது ...,அந்த கருவி பட்டையை எப்படியா இணைக்கிறது ??மண்டை காயுதுயா ..,ஜெய் அத எப்படி இணைக்கிறது சொல்லுயா புண்யமா போகும் ///

thamilman சைட்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணு, அங்கயே எப்படி இனைக்குரதுன்னு சொல்லிருப்பாங்க, வந்தேமதரம் சைட் போ தலைவர் நமக்காகவே எதை எப்படி பண்ணனும்னு எளிமையா விளக்கி சொல்லிருபாரு..

http://vandhemadharam.blogspot.com/

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
//இந்த கவுஜ நமக்கு புரியுரதே இல்லை... இருந்தாலும் நம்மல மட்டமா நினைச்சிரக் கூடாதுன்னு அவங்க பிளாக் பக்கம் போய் , அப்படி இப்படின்னு புரிஞ்சா மாதிரி, பின்னூட்டம் போட்டுட்டு வந்துருவேன், அவங்களும் அதுக்கு பொறுப்பா பதில் சொல்லுவாங்க, எனக்கு சிப்பு சிப்பா வரும்.. (ஐய்ய்யோ உளரிட்டேனே, இனிமே கவுஜ எழுதுரவங்க பிளாக் பக்கம் போய் நல்லாருக்குனு கமெண்ஸ் போட்டாலும் வெரட்டுவாங்களோ!!!!, ச்சே ச்சே நல்லவங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க..).//

செம உள்குத்து பங்காளி ரசித்தேன்!//

உள்குத்தெல்லாம் இல்லை சாமீ, ஏதாவது சொல்லி எக்கச்சக்கமா மாட்டிவுட்ராத நைனா.....அப்புறம்நம்மள பத்தி திட்டி யாராவது கவுஜ எழுதிட்டா அதுகூட புரியாம, உன்கிட்டதான் ட்ரன்ஸ்லேட் பண்ணச்சொல்லி வந்து நிக்கனும்...

Jey said...

பனங்காட்டு நரி said...
யோவ் முதல் பதிவு போட்டிருக்கேன் எப்படி தமிழ் மணத்து ல சேர்கறதுன்னு தெரியலை பார்த்து நல்ல இருந்தா சொல்லுங்க ..,இல்லேன்னா இப்பவே நிறுத்திடுறேன் ///

முட்டாப்பயலே, முட்டாப்பயலே ( நாம திட்டுர வார்த்தைய பிளாக் பேரா வச்சிட்டு திட்ட விடாம பண்ணிட்டானே ப்னாடை..), எல்லாரும் தூங்குற நேரதுல பதிவ போட்டுட்ட், இங்க வந்து சலம்பிட்டு போயிருக்கே. பதிவ பகல்ல போடு:)

Katz said...

அருமை.
ஆடோட கழுத்துல யாராவது கத்திய வச்சு வெட்டிருவேன்னு மிரட்டி எழுத வச்சாங்களா? அப்படியே எல்லாமே உண்மையா இருக்கு.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

How to paste tamil manam karuvi pattai kannu muzhi pithunguthu sollu rasa unnaku adutha masam double upraisal kidaikkum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னை இந்த தொடரை எழுதச் சொல்லி 18464 போன் கால்ஸ், 76532 sms, 8984 மெயில்,1524 ஃபேக்ஸ்-னு ஒரே தொந்தரவு.... சரி எழுதி தொலைக்கலாம்னு நினச்சிகிட்டு இருக்கும்போது, ”சூரியனின் வலை வாசல்” அருண்பிரசாத் ஊருக்கெல்லாம் தெரியுரா மாதிரி டமாரம் அடிச்சி கூப்டுட்டாரு , வேற வழியில்லாம, இவர் கூப்டுதான் இந்த பதிவுன்னு சொல்லவேண்டியதாப் போச்சி.....
///

office la thoonkaathayyaannaa kekkanum. office la thoonkina ippadithaan ketta ketta kanavu varum

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

http://www.youtube.com/watch#!v=AqiBoQHHi2o&feature=related

itha paruya thlaivaru kalakuraru

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

http://www.youtube.com/watch?v=erlDRxaj-gA

யோவ்
இதையும் பாருயா கண்ணுல நீர் வந்துடுச்சிய ..., இன்னும் கொஞ்ச நாள்ள பாருய பதிவுலகம் பத்திக்குனு எரியபோகுது ..,
இந்த சினிமாவ சினிமாவா பார்க்காம ,விலை வாசி உயர்வுக்கு காரணம் எந்திரன், wiki-leaks ல ராணுவன ரகசியம் வெளியனதுக்கு காரணம் எந்திரன் ,பெட்ரோல் விலை உயர்வுக்கு எந்திரன் தான் காரணம் எத்தன பதிவு வரபோகுது பாருயா ..

ஒரு நாள் குடும்பத்தோட சினிமாவுக்கு போற சந்தோஷத்தை கெடுக்க போறாங்க பாருயா

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தலைவாஆஆஆஆஆஆஅ உன் பெருந்தன்மைக்கு கடலும் கடலும் கை தட்டும் ,உன் பெருமை நிலவு நிலவு வரை எட்டும்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஒ ! எந்திரா
எங்களை மகிழ்விக்க வந்த மந்திரா!!!!!

ஸ்டைலில் உள்ளது
உன் தந்திரம் - என் மனதில்
எழுந்தந்து உனது மந்திரம்

ஐயகோ ! நீ - இருபதாம் நூற்றாண்டின்
கலியுக மார்கண்டேயனோ

எந்திரா!எந்திரா !!
வா வா எந்திரா

-பனங்காட்டு நரி

குறிப்பு :என் அனுமதியில்லாமல் இக்கவிதையை வேறு பதிவுகளில் பயன்படுத்த அனுமதி மறுக்கபடுகிறது
@copy right reserved

velji said...

சரளமான எழுத்து!

(ஒரு க்ரூப்பாத்தான் இருக்கீக போல!)

பேசுனபடி என் தளத்தில் ஒரு பதிவ போட்டாச்சு..(ஆடு ரெடி!)

Athiban said...

இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

Jey said...

வழிப்போக்கன் said...

அருமை.
ஆடோட கழுத்துல யாராவது கத்திய வச்சு வெட்டிருவேன்னு மிரட்டி எழுத வச்சாங்களா? அப்படியே எல்லாமே உண்மையா இருக்கு.///

ஹி ஹி அது வந்து சார்...

Jey said...

பனங்காட்டு நரி said...
How to paste tamil manam karuvi pattai kannu muzhi pithunguthu sollu rasa unnaku adutha masam double upraisal kidaikkum///

சாட்ல வா நரி சொல்லிகொடுக்குறது ஈசியா இருக்கும். அருண்பிரசாத்தான், எனக்கு சொல்லிதந்தது...

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//என்னை இந்த தொடரை எழுதச் சொல்லி 18464 போன் கால்ஸ், 76532 sms, 8984 மெயில்,1524 ஃபேக்ஸ்-னு ஒரே தொந்தரவு.... சரி எழுதி தொலைக்கலாம்னு நினச்சிகிட்டு இருக்கும்போது, ”சூரியனின் வலை வாசல்” அருண்பிரசாத் ஊருக்கெல்லாம் தெரியுரா மாதிரி டமாரம் அடிச்சி கூப்டுட்டாரு , வேற வழியில்லாம, இவர் கூப்டுதான் இந்த பதிவுன்னு சொல்லவேண்டியதாப் போச்சி.....
///

office la thoonkaathayyaannaa kekkanum. office la thoonkina ippadithaan ketta ketta kanavu varum ///

ங்கொய்யாலே4, உனக்கு இதுமாதிரியெல்லாம், அழைப்பு வரலைனு வயித்தெரிச்ச, கருகுன வாசம் இங்க அடிக்குது.....

Jey said...

velji said...
சரளமான எழுத்து!

(ஒரு க்ரூப்பாத்தான் இருக்கீக போல!)

பேசுனபடி என் தளத்தில் ஒரு பதிவ போட்டாச்சு..(ஆடு ரெடி!)///

வேலு , வாப்பா, நல்லாருக்கியா..., ஆமா இது நக்கல் பிடிச்ச குருப்பு, உள்ள வந்து மாட்டிராதே.... நீ அப்படிக்கா போய் உங்க கவுஜ குருப்புல ஐக்கியமாயிரு வேலு, இந்த குருப்புல இருக்குரவங்களுக்கு, கவுஜ படிக்கிறதுக்கு கோணார் நோட்ஸ் கேப்பானுக...:),

வேலு, உன் கவிதை படிச்சேன், சூப்பர்(முழுசா புரியலைன்ரது வேற விசயம்!!!), நேரம் கிடைக்கும் போதெல்லாம், கவிதை எழுதுய்யா......

Jey said...

தமிழ் மகன் said...
இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html///

ஓகே சார், நீங்க தொடங்கி வச்ச கூத்துதானே இது..:)

Jaleela Kamal said...

ரொம்ப கலகலப்பான பதில்கள்
மங்குக்கு ஈரல் பிரை, புறா பிரை வெணுமாஅ.
மங்கு கொட்டம் ஜாஸ்தியா இருக்கு

நானும் சமைய்ல் குறிப்பு எழுதும் ஜெய் என்று தான் நினைத்தேன்

LinkWithin

Related Posts with Thumbnails