Showing posts with label பிரதமர்கள். Show all posts
Showing posts with label பிரதமர்கள். Show all posts

August 30, 2010

இளைஞர்கள் நாட்டில்!... என்ன கொடுமை சார் இது..



முஸ்கி : போன பதிவு மொக்கை போட்டதுல  (அதயும் ரொம்ப பேரு படிச்சிருக்காங்க...) பலபேர் பின்னூடத்துல கும்மிடானுக... பட்டாபட்டி போன் பண்ணி வார்னிங் பண்ணிட்டாப்ல (நல்லா உசிப்பேத்திவிடு மக்கா..) . அதனால கொஞ்சம் சீரியசா ஒரு பதிவு (அப்படின்னு நானாவது... சொல்லிக்கிறேன்)

















செய்தி : உலகப் பெரும் பொருளாதார, முதல் 15 நாடுகளில் ( உலகின் மொத்த உற்பத்தியில் இந்த நாடுகளின் பங்கு 70%, உலக மக்கள் தொகையில் 60%) இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம் . இளஞர்களின் எண்ணிக்கை 50% க்கும் மேலாகவும், முதியவர்களின் எண்ணிக்கை 50%க்கும் கீழ் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன ( நன்றி சண்டே டைம்ஸ்,  இலங்கை அரசுக்கு ஜால்ராவாக மாறிய பின் ஹிண்டு படிப்பதில்லை.).

ஆனால் இந்தியாவின் கேபினெட் மந்திரிகளின் சராசரி வயது 64 ஆகவும், பிரதமர்களின் சராசரி வயது 66 ஆகவும் உள்ளது.

கவருமெண்டு மற்ற எல்லா வேலைக்கும்,  ஓய்வுக்குனு ஒரு வயச சொல்லி அதுக்கப்புறம் வீட்டுக்கு அனுப்புறாங்க, ஏன், அதுகப்புறம் அவங்க உடலாலும் , உள்ளத்தாலும் சோர்வடைஞ்சிருப்பாங்க, முன்னை போல முழு வேகமாகவோ, அதிக ஆற்றலுடனோ செயல்படமுடியாதுன்னுதானெ இந்த முடிவு.

இங்க அரசியல்வாதிக்கு மட்டும் எப்படி வயசு ஏற ஏற சுறுறுப்பும், வேகமும் கூடுது, ஒன்னும் விளங்களை சாமிகளா...(ஒருவேலை இப்பதான் அனுபவத்தை பயன்படுத்தி நல்லா சுறுசுறுப்பா சுருட்டுராங்களா) உங்க யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க.... புண்ணியமா போகும்...

இப்படி கிழடுகளா கேபினெட்ல இருக்குறதுனாலதா..., ஒரு முடிவையும் உறுதியா எடுக்காம,  மொன்னையா இருக்குறதுனால...., பக்கத்துல இருக்குற குஞ்சு குளுவான் நாடுக கூட நம்ம ஏளனம் செஞ்சிகிட்டு பயமில்லாம இருக்குதா?...

வயசனவங்க விவேகமா இருப்பாகண்னு ஒரு சைடுல சொல்லிக்கிறாங்க..., ஒரு வேளை 78 வயசுலையும் நம்ம சிங்கு தாத்தா... இத்தாலி அம்மாக்கு, நேக்கா ஜால்ரா அடிச்சிகிட்டு ..டம்மி பீசா, தலையாட்டுர விவேகத்தை சொல்றாகளா..., இதுக்கு அந்தம்மவையே பிஎம் ஆக்கிருந்தா ஒரு வேளை எடுக்குற குப்பை முடிவையாவது சீக்கிரம் எடுத்திருக்கலாம், தேவை இல்லாம,  இப்ப பாருங்க, உங்க பேர் என்னானு கேட்டா கூட, இருங்கன்னு சொல்லி காக்க வச்சிட்டு, அந்தம்மா கிட்ட போய் பெர்மிசன் வாங்கிட்டு வந்து பதில் சொல்றாரு... என்னமோ போங்க...

இந்த செய்திய பாத்தவுடனே, உண்மையானு இது சம்பந்தமா தேடிப் பாத்தா 40 வயசுல ஒருத்தர் பிரதமர் ஆயிருக்காரு.. ராஜீவ் காந்தி,  அதுவும் அவங்கம்மா இறந்ததுனால, இந்தியாவுல அந்த போஸ்டுக்கு வேற யாருக்கும் தகுதி!!! இல்லாததினால பிளைட் ஓட்டிட்டு இருந்தவரை கூட்டிட்டு வந்து பிரதமர் ஆக்கி இருக்காங்க...., பாவம் ராகுல் காந்தி அவருக்கு போன ஜூன்ல 40 முடிஞ்சிருச்சி , அடுத்த தேர்தல் (2014) வரும்போது ஒருவேலை பிரதமர் ஆனாகூட 45  ஆயிருக்கும். 

இனி 40 வயசு,  இல்லைனா,  அதைவிட கம்மியான வயசுல, ஒருத்தர் பிரதமராவோ, கேபினெட் மிஸ்ட்ராவோ வரனும்னா... ரகுல்காந்தியோட பையனோ பொண்ணோ... எதிர் கலத்துல வந்தாதான் உண்டு... இல்லைனா வேற யரும் வரமுடியாது...., அவங்க குடும்பத்தை தவிர, நாட்ல இருக்கிற ஒரு பயபுள்ளைக்கும் தகுதியே கிடையாது....

வயசு ஏற ஏற விவேகமும், பொறுப்பும் ,  பண்பும் அதிகமாகும்னு நினைக்கிறது எனக்கென்னமோ முட்டாள்தனமா படுது.... ஏன்னா இப்ப இருக்கிற அரசியல்வாதிகள எடுத்துகிட்டா, 55 வயசு தாண்டுனவங்கள்ல,  பலநாதாரிகளோட செயல் ரொம்ப மோசமா இருக்கு,  இவங்க ஒருத்தர் பதவில இருக்குறது,  அவங்க வீட்டுல இருக்குற 10க்கும் மேற்பட்ட குடும்பத்து ஆட்களும் பதவில இருக்குறாமாதிரிதா அராஜகம் செய்ஞ்சிகிட்டு இருக்காக...

அதனால அடுத்து வர்ர தேர்தல்ல , ஒட்டுக்கு பணம் வாங்காம !!!, ஓசிக்கி நாய் மதிரி நாக்க தொங்க போட்டுகிட்டு அலையாம..., ஜாதி மதம் பாத்து நாசமத்து போகாம..., உங்க தொகுதில நிக்கிற நல்லவங்கள்ல!!!,  யாருக்கு 50 வயசுக்கு கம்மியோ அவங்களுக்கு ஓட்டு போடுங்க(அப்படி யாரும் 50 வயசுக்கு கீழே இல்லைனா... அப்புறம் உங்க இஷ்டம்...), ஒருவாட்டி ட்ரை பண்ணிதான் பாப்போமே..., என்ன ஓட்டுக்கு 2500 + பிரியாணி +குவார்ட்டர், நஷ்டம் அவ்வளவுதானே..., அஞ்சி வருசத்துக்கு கணக்கு பாத்தா இது ஒன்னும் பெருசில்ல நாதாரி மக்களே... ரோசனை பண்ணுங்க...  முன்ன பின்ன இருந்தாலும் கணக்கு சரியாத்தா வரும்...

கீழே உங்களுக்காக நம்ம நாட்டோட பிரதம மந்திரிக பேர், வயசு குடுத்திருக்கேன் பாருங்க, என்னா இளமை..., 

1. ஜவஹர்லால் நேரு - 1947-ல சுதந்திரம் வந்தாலும் 52-ல நடந்த பொதுத் தேர்தல்தான் ஆரம்பக் கணக்கு அப்ப இவருக்கு வயசு 63,  இறக்குரவரைலும் இவர்தான் பிஎம் அப்ப வயசு 75

2. குஜரிலால் நந்தா - நேரு மாமா இறந்துதுனால இடக்கால பிஎம் , அப்ப இவருக்கு வயசு - 66 - இவரு எத்தனையாவது பிஎம் அப்படின்ற கேள்விகுள்ள வரமாட்டாரு...

3. லால்பகதூர் சாஸ்திரி -  பிஎம் ஆனப்ப வயசு 62.  இவரு பரவாயில்ல பாகிஸ்தான பின்னி பெடலெடுத்து தாஷ்கண்ட் ஒப்பந்தத்துல கிட்ட தட்ட மிரட்டி அயுப்கான கையெழுத்து போட வச்சிருக்காரு.  சீனாகிட்ட வாங்கின , மரண அடிக்கி கொஞ்ச ஆறுதல் மருந்து.

4. இந்திராகாந்தி - நம்ம காமராசர் அய்யா பிடிவாதம் பிடிச்சி, மொரார்ஜி தேசாய்க்கு பல்பு குடுத்துட்டு, இவங்கள பிஎம் ஆக்கிருக்காரு, தலயே ஆயிருக்கலாம்... மிஸ் பண்ணிருக்காரு..., பாவம் பொழைக்கத் தெரியாதவரு...., அப்ப இந்திராவுக்கு வயசு - 49. முதல் தடவை சுதந்திர இந்தியாவுல 50 வயசுக்கு கீழ ப்ரு பிஎம் அதுவும், அம்மனி.

5. மொரார்ஜி தேசாய் - இந்தராகாந்தி ஆனவமா பண்னுன அட்டூழித்தோட புண்ணியத்துல , சுதந்திர இந்தியாவுல முதல் காங்கிரஸ் அல்லாத பிஎம். இவருதான் இந்தியாவுல அதிக வயசுல பிஎம் ஆனவரு ... அப்ப வயசு - 81 (என்ன கொடுமை சார்.... பாவம் வீட்ல உக்காந்து ரெஸ்ட் எடுக்காம...)

6. சரன்சிங் - மொரார்ஜிக்கு பல்பு குடுத்துட்டு இவர் பிஎம் ஆயிருக்காரு. பாவம் 6 மாசம் சொச்சம் பிஎம்-ஆ இருந்திருக்காரு, வயசு -77

இடையில மறுக்கா இந்திராகாந்தி... , மத்தவங்களுக்கு அல்வா....

7. ராஜீவ் காந்தி - அம்மாவ , ஒரு சிங் படுபாவி போட்டுத் தள்ளினதால , அக்கடானு பிளைட் ஓட்டிட்டிருந்த அம்பிய கூட்டியாந்து பிஎம் ஆக்கிட்டாங்க...., இவர்தான் இன்னிவரைக்கும்... இந்தியாவோட இளைய பிஎம், 40 வயசுல பிஎம் னா என்னானே தெரியாத !! போஸ்ட். அதனாலதானோ என்னவோ , இலங்கை ஜெயவர்த்தனே மிட்டாய் குடுத்தே இவர ஏமாத்தி ஒப்பந்தத்துல கையெழுத்து வாங்கிட்டாரு... கொல்லப்பேரு அந்த ஒப்பந்தம் சூப்பர்னு வேர சொல்லிக்கிறாங்க...

8. வி.பி.சிங் - போபர்ஸ் ஊலழ் புண்ணியத்துல 58 வயசுல, மாநில அல்லக்கை கட்சிகள நம்பி பிஎம் ஆனவரு, பாவம் ஒரே வருசத்துல கவுத்துடாங்க.

9.சந்திரசேகர் - வி.பி. சிங்க கவுத்துட்டு தமிழ்நாட்ல DMK கவர்மெண்ட கவுக்குரதுகாக பிஎம் ஆக்கி அது முடிஞ்ச வுடனே வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இவரு 63 வயசுல பிஎம் ஆயிருக்காரு.

10. பி.வி.நரசிம்மராவ் -  இவரு பிஎம் ஆனது ஒரு அரசியல் விபத்து - 70 வயசுல பிஎம் ஆயிருக்காரு. வாயே திறக்காம. உம்முனு 5 வரசத்த ஓட்டி கின்னஸ் சாதனைக்கி முயற்சி செஞ்சவரு.....

இவரு பிஎம் ஆகுறதுக்கு காரணம், 10வது லோக்சபாவுக்கு, 3 கட்டமா அறிவிச்ச தேர்தல்ல , முதல் கட்ட வாக்கு பதிவு முடிஞ்ச மறுநாள், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ரஜீவ் காந்திய , ஸ்ரீபெரும்புதூர்ல குண்டு வச்சி கொன்னுட்டாங்க எல்டிடிஈ,  சின்னப் புள்ளத்தனமா, தெனாவட்டுல செஞ்ச மகாத்தப்பு,  எல்டிடியோட தலயெழுத்து மறிப் போனதுக்கு இது முக்கியமான ஒரு காரணம். பின்னாடி இத ஒரு துன்பியல் சம்பவம்னு சப்பைகட்டு கட்டியும் பிரயோசனம் இல்லாம போச்சி, கொடுமை என்னானா, இவங்கள ஒழிக்கிரோம்னு ஈழத்து மக்களையும் சேத்து கொன்னதுக்கு நாம உடந்தையா ஆயிட்டோம்... கலைஞர் புண்ணியம்..., பதவிய துச்சமா நினைச்சிருந்தா ஈழத்து மக்களுக்கு பெரிய கொடுமை நடந்திருக்காது..., ஆனாலும் இவர்தான் உலகத்தமிழர்களுக்கு தலைவர்னு சொல்லிக்கிறாங்க, ஆனா, தனிப்பட்ட முறைல எனக்கு இவர்தான் உலகத்தமிழர்களோட முதல் துரோகி. ம்ம் என்னத்த சொல்லி என்னத்த....

11. அடல் பிஹாரி வாஜ்பாயி - முதல் தடவை 13 நாள், 2வது தடவை 13 மாசம் , அப்புறம் மறுக்கா வந்து 5 வருசம் பிஎம் வேலை பாத்தாரு.  முதல் தடவை பிஎம் ஆகும்போது இவருக்கு வயசு 76.

12. எச் டி தேவகவுடா - கொழப்பத்துல பிஎம் ஆனாரு...., பிஎம் மா இருந்த 11 மாசமும் தூக்கத்துலேயே கழிச்ச நல்ல மனுசன்..., பார்லிமென்ல கூட தூங்குன ஒரே பிஎம்னா பாத்துக்குங்க..., இவரு 63 வயசுல ஆயிருக்காரு..

13.இந்தர் குமார் குஜ்ரால் - தேவகவுடாவ வீட்லேயே போய் தூங்க சொல்லிட்டு, வெளியுரவுத்துறைய நல்லாப் பத்துகிட்டு இருந்த மனுசனை பிஎம் ஆக்கினாங்க...அப்ப இவருக்கு வயசு 78.

இவரு இலங்கை அதிபர் சந்திரிகாவோட பட்டக்ஸ பிடிச்சி கிட்டே நடக்குறப்ப எடுத்த போட்டோ பிரசித்தம். நல்ல மனுசன் 12 மாசம் முடிஞ்சி ஒரு வருசம்னு சொல்லுரதுக்குள்ளே கவுத்துட்டாங்க...., யாரா??? எல்லா பிஎம்மும் காங்ரஸ் கவுத்ததுதான்... வேற யாருக்கு அந்த கெபாஸிட்டி இருக்கு...

14. மன்மோகன் சிங் - ஒலகத்துலேயே 36 பக்கத்துக்கு பயோடேட்டா வச்சிருக்கிற பெரிய படிப்பு + வேலை பாத்த, ஒரே பிரதமர்..., பேரு பெத்த பேரு தாக நீலு லேதுன்றா மாதிரி..., உலக நம்பர் 1 டம்மி பீசு இவர்தான். வீட்ல கக்கா போறதுக்கு கூட இத்தாலி அம்மாகிட்ட பெர்மிஸன் வாங்கிட்டுதான் போவாரு, அவ்வளவு நல்ல பவ்யமான மனுசன்...  இப்ப 




வயசு 


78



பொருளாதாரம் படிச்சி நல்லா நிர்வாகம், பன்னவராம், ரிசர்பேங்குக்கே கவர்னரா இருந்தவராம்..., நம்ம பா.சி. ய கூட சேத்துக்கிட்டு ... இந்தியாவோட வெவசாயத்தை கங்கனம் கட்டிகிட்டு ஒழிக்கிறதுல கிட்டதட்ட 90-லேர்ந்து அயராது பாடுபட்ட மனுசன்..., கேட்டா ஏதோ இண்ட்ஸ்ட்ரின்னுவாரு, மொத்த ஜிடிபி குரோத்துன்னுவாரு, அம்பானியோட மாச வருமானத்தையும், நம்மூர்ல சோத்துக்கு வழியில்லாம இருக்கிர புண்ணியவனோட மாச வருமானத்தயும் கூட்டி ரெண்டா வகுத்து , இந்தியாவோட தனி மனித வருமானம் வலுவா இருக்குன்னு மார்தட்டிட்டு போயிருவாரு....

15. ராகுல் காந்தி ......???? -பிஎம் பதவி... இவங்க குடும்பம் மொத்த குத்தைக்கி எடுத்திருக்கிரதனால இவருக்கு ? மார்க் ...


 எனக்கென்னமோ மத்த காங்கரஸ்காரங்கள விட இவரு பிரதமரா ஆனா பரவாயில்லைனு தோனுது. அரசியல் தனம் கம்மியா இருக்குது... ஆக்டிவா இருக்குறா மாதிரியும் இருக்கு, மறுபடியும் காங்ரஸ் ஆட்சிக்கி வரக் கூடாது... அப்படியே வந்தாலும் இவரு பிஎம் ஆனா ஒகேன்னு தோனுது..., ஏன்னா வேற யாராவது பிஎம் ஆனா... எப்படியும் இவங்களுக்கு டம்மி பீசாத்தான் இருக்கப் போறாங்க...., அதுக்கு இவரு எவ்வளவோ மேல்...

ஃபுலோ நல்லா வரும்போது எழுதுனா பதிவு நீளமாகி அதுக்கும் வாங்கி கட்டிக்கணும்...., அதனால இத்தோட முடிச்சிகிட்டு ஜஹா வாங்கிக்கிறேன்...

டிஸ்கி : ராகுல் காந்திக்கி 25 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னேரத்துக்கு அவர் வாரிசுக்கு 15 வயசாகும்....., சீக்கிரமே இந்தியாவுக்கு இளைய பிரதமர் கிடச்சிருப்பார்....., யார் கண்ணு பட்டதோ லேட்டாயிகிட்டே போகுது..., யாராவது எடுத்து சொல்லக்கூடாதாப்பா...என்ன நீங்க...




LinkWithin

Related Posts with Thumbnails