August 13, 2010

சூப்பர் டாடி...










































              உறவினர் வீட்டு விஷேசத்துக்கு நானும் என் மனைவியும் கிளம்பினோம். எப்போது வெளியே கிளம்பினாலும் அடம்பிடிச்சாவது கூடக் கிளம்புற என்னோட 3 1/2 வயது LKG  படிக்கும் பொண்ணு, என் அம்மாகூட  வீடியோ கேம் விளையாடுற மும்முரத்தில் , ‘நான் வரலை’ னு சொல்லிட்டா. சரினு என் 1 1/2 வயது மகனை மட்டும் கூட கூட்டிகிட்டு போனோம்.  

             என் மகளை இதுவரை வீட்டில் விட்டுச் சென்றதில்லை என்ற காரணத்தினாலும்,  அவள் என் அம்மாவிடம் இருக்கும் செல்லத்தால், தனக்கே உரித்தான துருதுருப்பில், வீட்டில் உள்ள பொருட்களை ஏதும் பாழாக்கிவிடுவாள் என்ற பயத்தில், நான் ‘நாங்கள் வரும் வரை சமர்த்தாக பாட்டியுடன் விளையாடிவிட்டு, பாட்டி சொல்ரத கேட்டு அமைதியாக இருக்கனும், எந்த பொருளையும் தொடக்கக்கூடாது,  அதுலையும் அலமாரில இருக்கிர கேமராவை எடுக்கக்கூடாது அது உடைஞ்சிரும்னு’  புத்தி சொன்னேன்.. ( நாக்குல சனி உங்காந்து நாட்டியமாடிகிட்டு இருந்திருக்குனு பின்னாடிதான் தெரியும்).

           நாங்கள் திரும்பி வீடு வந்து சேர்றதுக்கு நாலு மணி நேரம் ஆயிருச்சி. வீட்டில் நுழஞ்சவுடனே எம்பொண்ணு, என்னை கட்டிப் பிடிச்சிகிட்டு,  நீ சூப்பர் டாடி, உனக்கு எல்லாம் முன்னாடியே தெரியுது டாடி என்றாள், எனக்கு ஒன்னும் புரியலை.  என்னடா செல்லம் சொல்ற எப்பவும் உன் டாடி சூப்பர்தாண்டானு, என் வீட்டு அம்மனியின் முறைப்புக்கிடையிலும் பெருமையாக சொல்லிட்டு என் மகளை கொஞ்சினேன்.

          வா டாடி-னு என்னை உள் அறையில இருக்கும் அலமாரிக்கருகில் கூட்டிப்போய், என் வீடியொ கேமராவை( camcorder) காட்டினா, எனக்கு அதை பார்த்தவுடனே ஒரு விநாடி அதிர்ச்சியில அப்படியே நின்னுட்டேன்.... ஏன்னா எனக்கு பிடிச்ச, நான் ஆசைப்பட்டு வாங்கி இதுவரை உபயோகித்து வரும் வீடியோ காமெரா உடைஞ்ச நிலையில இருந்துச்சி...

          ஆனால் என் மகள் , டாடி உனக்கு எல்லாமே முன்னமே தெரியுது டாடி, ‘நான் அதை எடுத்தா உடைஞ்சிடும்னு’ சொன்னே இல்ல அதே மாதிரி நான் சேர் போட்டு மேல் அடுக்குல இருந்த இந்த கேமராவை எடுக்கும் போது கீழே விழுந்து உடைஞ்சிடுச்சி டாடி’,  நீ சொன்னது அப்படியே நடக்குது டாடி, நீ சூபர் டாடின்னு ஒரேடியா புகழ்ந்துகிட்டு இருந்தா, 
        எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை, மகளின் புகழ்ச்சிக்கு பெருமைப் படுறதா, உடைஞ்ச கேமராவுக்கு வருத்தப்படுறதா, என முழிச்சிகிட்டு இருக்க, என் வீட்டு அம்மனியோ கோபத்தில்.   பிறகு அடுத்த 2 மணி நேரம் என் வீட்டு தங்கமணியிடம் நெறய வாங்கிக்கட்டிக் கொண்டேன் (வெளில கூட்டிட்டு போய்ட்டு வந்தததினால வழக்கமா கிடைக்கிற அடி மட்டும் கிடைக்கல). 

            உங்களை யாரு அவகிட்ட அதை தொடாதே.. இதை தொடாதேன்னு சொல்லச்சொன்னது...., அவபாட்டுக்கு பாட்டிகூட விளயாடிட்டு இருந்திருப்பா, உங்களை யாரு அலமாரில கேமரா இருக்கு அதை தொட்டா உடைஞ்சிடும்னு அறிவுரைச் சொல்லச் சொன்னதுனு ஒரே திட்டுதான்.

         சத்தம் கேட்டு அடுத்த அறையில் தூங்கிட்டிருந்த,  என் அம்மா வந்து விசயத்தை கேட்டு, அப்படியாடா,  அவ்வளவு உயரத்துல இருந்த கேமராவை, சேர் போட்டு எடுத்திருக்கா பாரு, என்னா புத்திசாலித்தனம்னு, என் மகளை கொஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க...

         என்னங்க கேமராவைத் தொடாதச் செல்லம்னு எம்மககிட்டச் சொல்லிட்டுப் போனது ஒரு குத்தமாங்க...

         ஒருபக்கம், கேமரா உடஞ்சி போச்சே, அதை ரிப்பேர் பன்ன எவ்வளவு கேப்பனுகளோன்னு கவலை, அது போச்சின்னா வேர கேமரா வாங்கனும்னா இன்னிக்கி விலைவாசிக்கு பட்ஜெட் ஒத்து வருமான்னு ஒரே ரோசனை...

          இதுல திட்டு வாங்குரதும் நாந்தாங்க...,  கேமராவ உடைச்ச என் மக ஒன்னும் தெரியாத மாதிரி திருப்பி கூலா போகோ சானல் போட்டு பாத்திட்டிருக்கா..., என் கூடவே வெளில வந்துட்டு வீடு திரும்பின என் வூட்டம்மனி இன்னும் என்னை திட்டிடிருங்காங்க...

பொறந்தா தங்கமணிகளா பொறக்கனுங்க... வேற என்னத்தச் சொல்ல...







115 comments:

கருடன் said...

சூப்பார் தல!! உங்க பொண்ணு எப்படி இவ்வளோ புதிசாலியா? அவ அவங்க அம்மா மாதிரியா?

senthil velayuthan said...

always human mind is like this only ,not only for child,for matured persons also.if something is specifically restricted ,mind will try to reach that. its nature.

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
சூப்பார் தல!! உங்க பொண்ணு எப்படி இவ்வளோ புதிசாலியா? அவ அவங்க அம்மா மாதிரியா?//

டெர்ரர் வடை இன்னிக்கி உனக்குதான்... அப்படியே கவ்விகிட்டு ஓட்டை போட்டுட்டு ஓடிப்போய் தூங்க... கும்மக்கூடாது...

Jey said...

senthil1426 said...
always human mind is like this only ,not only for child,for matured persons also.if something is specifically restricted ,mind will try to reach that. its nature.///

ஆமாங்க.. உண்மை... அதான் இந்தமாதிரி சொல்ரதில்லை அன்னிக்கி தனியா அம்மாகூட இருக்காளேன்னு... ஆர்வத்துல சொல்லிட்டு போஇட்டேன்... ஹி ஹி

கருடன் said...

//அதுலையும் அலமாரில இருக்கிர கேமராவை எடுக்கக்கூடாது அது உடைஞ்சிரும்னு’ புத்தி சொன்னேன்.. //

இதுக்கு பெயர்தன் எங்க அப்பான் குதிறுக்குல்ல இல்ல கதை... சும்மா இருக்க புள்ளகிட்ட கேமரா எடுக்காத.. அதும் இருக்க இடத்த சொல்லி...

கருடன் said...

//என்னடா செல்லம் சொல்ற எப்பவும் உன் டாடி சூப்பர்தாண்டானு,//

ஹி ஹி ஹி... வாங்கபேர பல்பு தெரியாம பெருமை.....


(யெலெய் அருண் ஆடு எங்க ஆடு எங்கனு வெறியொட திரிஞ்ஜ... இங்க வா ஜய் பொண்னு மஞ்சள் தண்ணி தெளிச்சி அனுப்பி இருக்க)

Unknown said...

இங்கிட்டும் அதேதான்...

ப்ரியமுடன் வசந்த் said...

ஹிஹிஹி

குழந்தைங்க கிட்ட எது செய்யக்கூடாதுன்னு சொல்றீங்களோ அதைத்தான் வம்பா செய்யும்ன்ற சின்னபுள்ள லாங்குவேஜ் கூட தெரியாதா பங்கு உமக்கு? அதுக்குத்தான் அபராதம்..!அனுபவிங்க!

மார்கண்டேயன் said...

'இந்த மருந்த சாப்பிடும் போது, குரங்க மட்டும் நினைக்க கூடாது', அதே கத தான், 'உனக்கு மட்டும் . . .' நெனச்சி நெனச்சி சிரிச்சேன்,

பொன் மாலை பொழுது said...

என்ன தான் இருந்தாலும் உங்க பொண்ணு உங்களை விட புத்திசாலிதான்.
ஆனா நீங்க மகா பொறுமை சாலி அய்யா. அதுதான் குடும்பம்.
கவை படாதீர்கள் வேறு ஒன்னு வாங்கினா சரிதான் :)

நசரேயன் said...

எல்லா இடத்திலேயும் இப்படித்தானா ?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////அதுலையும் அலமாரில இருக்கிர கேமராவை எடுக்கக்கூடாது அது உடைஞ்சிரும்னு’ புத்தி சொன்னேன்.////

அங்க தான் நீங்க நிற்கீறிங்க ஜெய்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////சனி உங்காந்து நாட்டியமாடிகிட்டு இருந்திருக்குனு பின்னாடிதான் தெரியும்////

இன்னைக்கு இந்த கமெண்ட் பாக்ஸ் ல தான் நடனம் ஆட போவுது

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////வெளில கூட்டிட்டு போய்ட்டு வந்தததினால வழக்கமா கிடைக்கிற அடி மட்டும் கிடைக்கல////

இதுல எல்லாம் சலுகை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// ஒருபக்கம், கேமரா உடஞ்சி போச்சே, அதை ரிப்பேர் பன்ன எவ்வளவு கேப்பனுகளோன்னு கவலை, அது போச்சின்னா வேர கேமரா வாங்கனும்னா இன்னிக்கி விலைவாசிக்கு பட்ஜெட் ஒத்து வருமான்னு ஒரே ரோசனை.../////

புதுசு வாங்கனும்ன மங்குனி கிட்டே போய் கேளு ..அது கேமரா செல்போனே ஒன்னு வைசிருகுது ...ரப்பர் பாண்டை பிச்சி எடுத்துட்டு வந்துடு ..போன்ன அது கிட்ட குடுத்துடு

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// என்னங்க கேமராவைத் தொடாதச் செல்லம்னு எம்மககிட்டச் சொல்லிட்டுப் போனது ஒரு குத்தமாங்க...////
ஆமா குத்தம் தான் ..வேணா அடுத்த தடவை வெளிய போகும் போது...டிவியை தொடதே ,dvd playerai தொடதே ,கண்ணாடியை தொடதே இன்னு சொல்லிடு போ ..,அப்ப தெரியும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பனங்காட்டு நரி said...

//// என்னங்க கேமராவைத் தொடாதச் செல்லம்னு எம்மககிட்டச் சொல்லிட்டுப் போனது ஒரு குத்தமாங்க...////
ஆமா குத்தம் தான் ..வேணா அடுத்த தடவை வெளிய போகும் போது...டிவியை தொடதே ,dvd playerai தொடதே ,கண்ணாடியை தொடதே இன்னு சொல்லிடு போ ..,அப்ப தெரியும்
//

Jay -ய தொடாதேனு சொன்னா ..எல்லா மேட்டரும் ஓவர்...ஹி..ஹி

(புது கேமரா வாங்கி கொடுத்துட்டு, கேமரா எப்படி உடைந்ததுனு திரும்பவும் காமிக்க சொல்லுங்க..

திரும்பவும் உடைந்ததுனா.. கன்பார்ம்..கேமரா ப்ராப்ளம்..குவாலிட்டு சரியில்ல..)

ஜெய்லானி said...

//(வெளில கூட்டிட்டு போய்ட்டு வந்தததினால வழக்கமா கிடைக்கிற அடி மட்டும் கிடைக்கல). //

ஹி..ஹி.. இதுக்கு இப்பிடி ஒரு வழி இருக்கா பயபுள்ளங்க ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறாங்க..

அப்ப சாயுங்காலம் அடி விழுந்திருக்குமே..!!

ஜெய்லானி said...

//அதுலையும் அலமாரில இருக்கிர கேமராவை எடுக்கக்கூடாது அது உடைஞ்சிரும்னு’ புத்தி சொன்னேன்.//

நல்ல வேளை அதை எடுத்து பாட்டி தலையில போட்டுடாதேன்னு சொல்லாம போய்ட்டியே ராஸா..ஹி..ஹி..

ஜெய்லானி said...

////என்னடா செல்லம் சொல்ற எப்பவும் உன் டாடி சூப்பர்தாண்டானு,///

இவ்ளோ அப்பாவியாயா நீ .தெரியாம போச்சே..

ஜெய்லானி said...

//இந்த மருந்த சாப்பிடும் போது, குரங்க மட்டும் நினைக்க கூடாது', அதே கத தான், 'உனக்கு மட்டும் . . .' நெனச்சி நெனச்சி சிரிச்சேன்//

ஆஹா..நல்ல உதாரணம்..க்கி..க்கி....

Unknown said...

பொறந்தா தங்கமணிகளா பொறக்கனுங்க... வேற என்னத்தச் சொல்ல...

Jey said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இங்கிட்டும் அதேதான்...//

உங்களுக்கும் டேமேஜ் ஓவரோ... சரி விடுங்க செந்தில் ஒரு சங்கம் ஆரம்பிச்சிடலாம்.:)

Jey said...

/
TERROR-PANDIYAN(VAS) said...
//என்னடா செல்லம் சொல்ற எப்பவும் உன் டாடி சூப்பர்தாண்டானு,//

ஹி ஹி ஹி... வாங்கபேர பல்பு தெரியாம பெருமை.....


(யெலெய் அருண் ஆடு எங்க ஆடு எங்கனு வெறியொட திரிஞ்ஜ... இங்க வா ஜய் பொண்னு மஞ்சள் தண்ணி தெளிச்சி அனுப்பி இருக்க)///

ஏன் ராசா இப்படி...பிரியாணி வாங்கி வச்சிருக்கேன்... கும்முரவங்களுக்கு அது கிட்டையாது... பாத்துக்க.

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
ஹிஹிஹி

குழந்தைங்க கிட்ட எது செய்யக்கூடாதுன்னு சொல்றீங்களோ அதைத்தான் வம்பா செய்யும்ன்ற சின்னபுள்ள லாங்குவேஜ் கூட தெரியாதா பங்கு உமக்கு? அதுக்குத்தான் அபராதம்..!அனுபவிங்க!//

அதானே பங்களி, ஏதும் அறிவுரை செல்லாம சாக்கிரதாத்தாம்பா இருந்தே, அன்னிக்கு டங்க் ஸ்லிப்பாயிருச்சி.. அது சரி..,

ஏம்ப்பா பங்கு... உமக்கு அம்புட்டு சந்தோசமா... நல்லாருலே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ponnu age 31/2 adinnaa 15 vayasu apdinna unka vayasu enna?

Jey said...

///மார்கண்டேயன் said...
'இந்த மருந்த சாப்பிடும் போது, குரங்க மட்டும் நினைக்க கூடாது', அதே கத தான், 'உனக்கு மட்டும் . . .' நெனச்சி நெனச்சி சிரிச்சேன்,///

இந்த கதை தெரியாமம் போச்சே சார்... அதுக்குத்தான் உங்கமாதிரி ஆளுககிட்ட கூட்டு வச்சிக்கனும்...

Jey said...

// கக்கு - மாணிக்கம் said...
என்ன தான் இருந்தாலும் உங்க பொண்ணு உங்களை விட புத்திசாலிதான்.
ஆனா நீங்க மகா பொறுமை சாலி அய்யா. அதுதான் குடும்பம்.
கவை படாதீர்கள் வேறு ஒன்னு வாங்கினா சரிதான் :)//

ஆமா என்னா பண்றது..., அனுபவசாலிக இப்படி வந்து ஆறுதல் சொல்வாங்கன்னுதான் எழுதுனது..நன்றி தல.

Jey said...

நசரேயன் said...
எல்லா இடத்திலேயும் இப்படித்தானா ?//

அடடா, சங்கம் ஆரம்பிச்சா... கொல்லப்பேரு சேருவாங்க போலயே..

Jey said...

பனங்காட்டு நரி said...

//அங்க தான் நீங்க நிற்கீறிங்க ஜெய்///

எங்க நிக்க அதான் சாய்ச்சிபுட்டாங்களே மச்சி..

//இன்னைக்கு இந்த கமெண்ட் பாக்ஸ் ல தான் நடனம் ஆட போவுது//

எவண்டா சிக்குவானு அலையிரேன்னு சொல்லு... இது ஒரு பொளப்பு...ச்சீ.

//புதுசு வாங்கனும்ன மங்குனி கிட்டே போய் கேளு ..அது கேமரா செல்போனே ஒன்னு வைசிருகுது ...ரப்பர் பாண்டை பிச்சி எடுத்துட்டு வந்துடு ..போன்ன அது கிட்ட குடுத்துடு//

அதுவே அடிக்கடி தம் பையங்கிட்ட பல்பு வாங்கிட்டு மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி அலையுது... பாவன் அதுகிட்ட கேட்டுக்கிட்டு..

//ஆமா குத்தம் தான் ..வேணா அடுத்த தடவை வெளிய போகும் போது...டிவியை தொடதே ,dvd playerai தொடதே ,கண்ணாடியை தொடதே இன்னு சொல்லிடு போ ..,அப்ப தெரியும்//

நல்ல ஐடியா... நல்லா இருலே.

Jey said...

பட்டாபட்டி.. said...

Jay -ய தொடாதேனு சொன்னா ..எல்லா மேட்டரும் ஓவர்...ஹி..ஹி ///

ஒருவேளை எல்லாத்தயும் உடைங்கன்னு சொன்னா... தொட மாட்டாங்களோ...

///(புது கேமரா வாங்கி கொடுத்துட்டு, கேமரா எப்படி உடைந்ததுனு திரும்பவும் காமிக்க சொல்லுங்க..

திரும்பவும் உடைந்ததுனா.. கன்பார்ம்..கேமரா ப்ராப்ளம்..குவாலிட்டு சரியில்ல..)//

என்னடா வந்து வில்லங்கமா ஐடியா காணமேனு பாத்தேன்...

சிங்கைல ரொம்ப சல்லிசா கிடைக்குதாமே, ஒரு நாலு வாங்கி அனுப்பி நண்பனுக்காக உதவ கூடாதா ராசா..

Jey said...

ஜெய்லானி said...
//(வெளில கூட்டிட்டு போய்ட்டு வந்தததினால வழக்கமா கிடைக்கிற அடி மட்டும் கிடைக்கல). //

ஹி..ஹி.. இதுக்கு இப்பிடி ஒரு வழி இருக்கா பயபுள்ளங்க ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறாங்க..

அப்ப சாயுங்காலம் அடி விழுந்திருக்குமே..!!//


இதெல்லாம் நமக்கு புதுசா ஜெய்லானி...உனக்கு உள்ளுக்குள்ள சந்தோசமா இருக்குமே...

Jey said...

ஜெய்லானி said...

நல்ல வேளை அதை எடுத்து பாட்டி தலையில போட்டுடாதேன்னு சொல்லாம போய்ட்டியே ராஸா..ஹி..ஹி..//

அதெல்லாம் பண்ணமாட்டாய்ங்க..., நாம சிக்குனாத்தான்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிஜமாவே உங்க பொண்ணு உங்களை விட புத்திசாலி தான்....

சார் நீங்க மக்குன்னு வெளிய சொல்லிடாதிங்க.... தினமும் அடி வாங்குற விசயமும் வெளிய தெரிய வேண்டாம்

Jey said...

ஜெய்லானி said...
////என்னடா செல்லம் சொல்ற எப்பவும் உன் டாடி சூப்பர்தாண்டானு,///

இவ்ளோ அப்பாவியாயா நீ .தெரியாம போச்சே..//

உள்குத்து?..

/////இந்த மருந்த சாப்பிடும் போது, குரங்க மட்டும் நினைக்க கூடாது', அதே கத தான், 'உனக்கு மட்டும் . . .' நெனச்சி நெனச்சி சிரிச்சேன்//

ஆஹா..நல்ல உதாரணம்..க்கி..க்கி..../////


ஆணவச் சிரிப்பு.....எனக்கு சான்ஸ் கிடைக்கும் போது நீரு சட்னிதாம்ல..

Jey said...

// கலாநேசன் said...
பொறந்தா தங்கமணிகளா பொறக்கனுங்க... வேற என்னத்தச் சொல்ல...///

வாங்க சார்.. வாங்க சார்...சரியாச் சொன்னீங்க...

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ponnu age 31/2 adinnaa 15 vayasu apdinna unka vayasu enna?///

எப்படியெல்லாம் படிச்சி கணக்கு போடுறாங்க...( நேத்து நாம தத்தானு சொல்லி கும்முனதை மனசுல வச்சிகிட்டு இங்க உலாத்துதோ....எதுக்கும் சாக்கிரதாயாவே இருக்கனும்...)

Jey said...

//
வெறும்பய said...
நிஜமாவே உங்க பொண்ணு உங்களை விட புத்திசாலி தான்....//

அது தெரிஞ்சி போச்சி...

//சார் நீங்க மக்குன்னு வெளிய சொல்லிடாதிங்க.... தினமும் அடி வாங்குற விசயமும் வெளிய தெரிய வேண்டாம்///

எல்லாம் ஒரு விளிப்புணர்வுக்குதான் தல...

மங்குனி அமைச்சர் said...

"யானை தான் தலைலே தானே மண்ணைவாரி போட்டுக்கும் "
ஒன்னும் இல்லை சும்மா தோணிச்சு சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

(புது கேமரா வாங்கி கொடுத்துட்டு, கேமரா எப்படி உடைந்ததுனு திரும்பவும் காமிக்க சொல்லுங்க..

திரும்பவும் உடைந்ததுனா.. கன்பார்ம்..கேமரா ப்ராப்ளம்..குவாலிட்டு சரியில்ல..)///

"பட்டா ஜெயில் ஒரு பைக் வச்சிருக்கான் "
இதி எந்த உள்குத்தும் இல்லை
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//(வெளில கூட்டிட்டு போய்ட்டு வந்தததினால வழக்கமா கிடைக்கிற அடி மட்டும் கிடைக்கல). //

ஹி..ஹி.. இதுக்கு இப்பிடி ஒரு வழி இருக்கா பயபுள்ளங்க ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறாங்க..

அப்ப சாயுங்காலம் அடி விழுந்திருக்குமே..!!///

ஜெய்லானி சும்மா உதார் விடுறான் நம்ம்பாதே

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னடா செல்லம் சொல்ற எப்பவும் உன் டாடி சூப்பர்தாண்டானு,//

ஹி ஹி ஹி... வாங்கபேர பல்பு தெரியாம பெருமை.....


(யெலெய் அருண் ஆடு எங்க ஆடு எங்கனு வெறியொட திரிஞ்ஜ... இங்க வா ஜய் பொண்னு மஞ்சள் தண்ணி தெளிச்சி அனுப்பி இருக்க)////


ஐ, ஆடு ஆடு ,எனக்கு லெக் பீசு , ஜெய்லானிக்கு ஈரல்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ponnu age 31/2 adinnaa 15 vayasu apdinna unka vayasu enna?///

சார் கணக்குல எப்பவும் கரக்ட்டா இருக்கணும் , அது 15 வயசு இல்லை , 15 . 5 வயசு
வரலாறு முக்கியம் சார்

ரோஸ்விக் said...

அப்புடியே அப்பனை மாதிரியே இருக்குன்னு உங்க அம்மாவோ, வீட்டுக்கார அம்மாவோ சொல்லலையா??
காமெராவை விடு மச்சி வாங்கிக்கலாம். உனக்கு அடி ஒன்னும் ரொம்ப இல்லையே??? :-)

தேவன் மாயம் said...

ஆனால் என் மகள் , டாடி உனக்கு எல்லாமே முன்னமே தெரியுது டாடி, ‘நான் அதை எடுத்தா உடைஞ்சிடும்னு’ சொன்னே இல்ல அதே மாதிரி நான் சேர் போட்டு மேல் அடுக்குல இருந்த இந்த கேமராவை எடுக்கும் போது கீழே விழுந்து உடைஞ்சிடுச்சி டாடி’, நீ சொன்னது அப்படியே நடக்குது டாடி, நீ சூபர் டாடின்னு ஒரேடியா புகழ்ந்துகிட்டு இருந்தா,///


சூப்பர்! ....நீங்க சொன்னதால்தான் அப்படி உடைந்துவிட்டது!!!

தேவன் மாயம் said...

உங்களை யாரு அவகிட்ட அதை தொடாதே.. இதை தொடாதேன்னு சொல்லச்சொன்னது...., அவபாட்டுக்கு பாட்டிகூட விளயாடிட்டு இருந்திருப்பா, உங்களை யாரு அலமாரில கேமரா இருக்கு அதை தொட்டா உடைஞ்சிடும்னு அறிவுரைச் சொல்லச் சொன்னதுனு ஒரே திட்டுதான்///

இது வேறயா? பாவங்க நீங்க!

Jey said...

வாய்யா வா...என்ன கானோம்னு பாத்தேன்.. கும்முரதுகு ஆள் கிடைச்ச சந்தோசத்துல ஆஃபீஸ் வேலய விட்டுட்டு வந்து கமெண்ஸ் போடுரே... நடத்து..

Jey said...

மங்குனி அமைசர் said...

"பட்டா ஜெயில் ஒரு பைக் வச்சிருக்கான் "
இதி எந்த உள்குத்தும் இல்லை
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு சொன்னேன்//

ஜெயில் பைக் வச்சிருக்கானா...என்ன சொல்ல வர்ரே பக்கி... தெளிவாச் சொல்லித் தொலை..

Jey said...

//மங்குனி அமைசர் said...
ஜெய்லானி said...

//(வெளில கூட்டிட்டு போய்ட்டு வந்தததினால வழக்கமா கிடைக்கிற அடி மட்டும் கிடைக்கல). //

ஹி..ஹி.. இதுக்கு இப்பிடி ஒரு வழி இருக்கா பயபுள்ளங்க ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறாங்க..

அப்ப சாயுங்காலம் அடி விழுந்திருக்குமே..!!///

ஜெய்லானி சும்மா உதார் விடுறான் நம்ம்பாதே//

ஆமா சொல்ல வண்ட்டாருய்யா... ஆம்பளை சிங்கம்.. அன்னிக்கு வீட்ல வாங்குன அடியில மூஞ்சி வீங்கி போய், என்னானு கேட்டதுக்கு.. பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டேன்னு பொய் சொன்ன ஆள்தானே நீரு...

Jey said...

50 அப்படா இன்னிகுதா எனக்கு வடை.

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி அமைசர் said...

"பட்டா ஜெயில் ஒரு பைக் வச்சிருக்கான் "
இதி எந்த உள்குத்தும் இல்லை
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு சொன்னேன்//

ஜெயில் பைக் வச்சிருக்கானா...என்ன சொல்ல வர்ரே பக்கி... தெளிவாச் ///

ஒன்னும் இல்லை , நீ ஆட்டோவில வெளிய போகும் போது ,உன் குழந்தைகிட்ட பைக்கோட பெட்ரோல் டேன்க் மூடிய தொறந்து தீய பொருத்தி எதுவும் போற்றாதன்னு சொல்லிட்டுபோ

Jey said...

//மங்குனி அமைசர் said...
TERROR-PANDIYAN(VAS) said...

ஐ, ஆடு ஆடு ,எனக்கு லெக் பீசு , ஜெய்லானிக்கு ஈரல்//

ஜெய்லானி வெரும்வாயில மெல்லுர ஆளு...ஈரல் வேர குடு வெளங்கிரும்..

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

அப்புடியே அப்பனை மாதிரியே இருக்குன்னு உங்க அம்மாவோ, வீட்டுக்கார அம்மாவோ சொல்லலையா??
காமெராவை விடு மச்சி வாங்கிக்கலாம். உனக்கு அடி ஒன்னும் ரொம்ப இல்லையே??? :-)///

ஓ , இதுக்கு தான் நேத்து நீ பல் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தியா , எத்தின பல் புதுசா கடன ?

Jey said...

/// மங்குனி அமைசர் said...

நீ ஆட்டோவில வெளிய போகும் போது ,உன் குழந்தைகிட்ட பைக்கோட பெட்ரோல் டேன்க் மூடிய தொறந்து தீய பொருத்தி எதுவும் போற்றாதன்னு சொல்லிட்டுபோ///

அடப்பாவி மக்கா, தீவிரவாதி பயளுக கூடயா இம்புட்டு நாளா கூட்டு சேந்து கும்மியடிச்சிருகேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்

Jey said...

மங்குனி அமைசர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ponnu age 31/2 adinnaa 15 vayasu apdinna unka vayasu enna?///

சார் கணக்குல எப்பவும் கரக்ட்டா இருக்கணும் , அது 15 வயசு இல்லை , 15 . 5 வயசு
வரலாறு முக்கியம் சார்//

வந்துட்டார்யா.. கணக்கு வாத்தி வரலாறு பாடம் எடுக்க...

Jey said...

///ரோஸ்விக் said...
அப்புடியே அப்பனை மாதிரியே இருக்குன்னு உங்க அம்மாவோ, வீட்டுக்கார அம்மாவோ சொல்லலையா??
காமெராவை விடு மச்சி வாங்கிக்கலாம். உனக்கு அடி ஒன்னும் ரொம்ப இல்லையே??? :-)///

அது தானா ஏதாவது உடைச்சா தான் அப்படியே அப்பன் புத்தின்னு சொல்லுவாங்க... இஙதான் தெளிவா மாட்டியாச்சே நேரடி தக்குதல்தான்..., அடியென்னண்ணே அடி, தனியா ரூம்ல பூட்டிவச்சி அடிக்கிரதுனாலா ஒரு ஆறுதல், எங்கம்மாவுக்கு கூட தெரியாதுன்னா பாத்துக்குங்களேன்...

Jey said...

//தேவன் மாயம் said...//

உங்க கிளினிக்க சென்னைக்கு மாதிருங்கண்ணே உதவியா இருக்கும்..., என்ன மாதிரி நாலு பேர் சேந்த அடிக்கடி உங்க கல்லா நெறயும்...:)

Jey said...

///மங்குனி அமைசர் said...
ரோஸ்விக் said...

ஓ , இதுக்கு தான் நேத்து நீ பல் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தியா , எத்தின பல் புதுசா கடன ?///

பப்ளிக்ல என் மானத்த வாங்குரதுல உனகென்னய்யா அவ்வளவு குஷி... நீ மாட்டுவடி.. அப்ப இருக்கு...

அருண் பிரசாத் said...

innaikku office leave. so veetula romba busy (no comments pls). athanaala appuram varaen

Jey said...

//அருண் பிரசாத் said...
innaikku office leave. so veetula romba busy (no comments pls). athanaala appuram varaen///

வீட்ல இன்னிக்கு என்ன அர்ச்சனை, எந்த்தனை அடின்னு , வந்து கணக்கு சொல்லனும்...என்னா...எஞ்சாய்..:)

dheva said...

ஜெய்....@ ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திட்டு.....! So sweet and cute உங்க பொண்ணு! உடைச்சதுக்காக சொல்லல அவ சிச்சுவேசன் ஹேண்டில் பண்ண தில்ல வச்சு சொல்றேன்...ஹா....ஹா..ஹா..!

சௌந்தர் said...

இவருக்கு ஜோசியம் எல்லாம் தெரிந்து இருக்கு பெரிய ஆள் தான் இவர்....

அடுத்து உங்க லாப்டாப் தொடாதே..சொல்லுங்க....

அமுதா கிருஷ்ணா said...

பொண்ணு அம்மா மாதிரியா..அப்பா மாதிரியா...

Jey said...

dheva said...
ஜெய்....@ ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திட்டு.....! So sweet and cute உங்க பொண்ணு! உடைச்சதுக்காக சொல்லல அவ சிச்சுவேசன் ஹேண்டில் பண்ண தில்ல வச்சு சொல்றேன்...ஹா....ஹா..ஹா..!///

ஆமா தேவா, திட்டமுடியாம பன்ணிருச்சி...:)

Jey said...

சௌந்தர் said...
இவருக்கு ஜோசியம் எல்லாம் தெரிந்து இருக்கு பெரிய ஆள் தான் இவர்....

அடுத்து உங்க லாப்டாப் தொடாதே..சொல்லுங்க....///

என்கிட்ட ஒரு லாப்டாப் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா... நல்ல மனசு.. நல்லாருங்க...

Jey said...

அமுதா கிருஷ்ணா said...
பொண்ணு அம்மா மாதிரியா..அப்பா மாதிரியா...//

இதுல என்னங்க அம்மனி சந்தேகம்... அவங்க அம்மா மாதிரியேதான்... இப்பவே மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க...

செல்வா said...

//( நாக்குல சனி உங்காந்து நாட்டியமாடிகிட்டு இருந்திருக்குனு பின்னாடிதான் தெரியும்).//
ஹா ஹா ..
//என்னங்க கேமராவைத் தொடாதச் செல்லம்னு எம்மககிட்டச் சொல்லிட்டுப் போனது ஒரு குத்தமாங்க.///
நீங்க சொன்னது தப்புன்னு யார் சொன்னது ..!! ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க ..!!

யாரோ ஒருவன் said...

வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை

யாரோ ஒருவன் said...

வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை

Anonymous said...

சூப்பர் டாடி... பொண்ணோ டபுள் சூப்பர் ..பசங்க கிட்டே அது செய்யாதே இதே எடுக்காதே ன்னு சொன்னா முதல் வேலையா அது தான் பண்ணுவாங்க ..இனிமேலாவது கேர் புல்லா இருங்க ..

சசிகுமார் said...

அருமை பொருத்து தான் ஆகவேண்டும் என்ன பண்றது ஆம்பளயா பொறந்துட்டோமே

Jey said...

ப.செல்வக்குமார் said...
//( நாக்குல சனி உங்காந்து நாட்டியமாடிகிட்டு இருந்திருக்குனு பின்னாடிதான் தெரியும்).//
ஹா ஹா ..
//என்னங்க கேமராவைத் தொடாதச் செல்லம்னு எம்மககிட்டச் சொல்லிட்டுப் போனது ஒரு குத்தமாங்க.///
நீங்க சொன்னது தப்புன்னு யார் சொன்னது ..!! ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க ..!!//


நன்றி செல்வா, ஒருத்தனவது நான் சொன்னது ரைட்-னு சொன்னியே..

Jey said...

யாரோ ஒருவன் said...
வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை//

படிச்சிட்ட போச்சி..

Jey said...

sandhya said...
சூப்பர் டாடி... பொண்ணோ டபுள் சூப்பர் ..பசங்க கிட்டே அது செய்யாதே இதே எடுக்காதே ன்னு சொன்னா முதல் வேலையா அது தான் பண்ணுவாங்க ..இனிமேலாவது கேர் புல்லா இருங்க ..//

ஆமாம் மேடம் இனிமே சாக்கிரதய்ய இருக்கனும். நன்றி.

Jey said...

சசிகுமார் said...
அருமை பொருத்து தான் ஆகவேண்டும் என்ன பண்றது ஆம்பளயா பொறந்துட்டோமே//

சங்கத்துக்கு புதுசா ஆள் சிக்கிருக்கீங்க...):

ஜெய்லானி said...

//ஆமா சொல்ல வண்ட்டாருய்யா... ஆம்பளை சிங்கம்.. அன்னிக்கு வீட்ல வாங்குன அடியில மூஞ்சி வீங்கி போய், என்னானு கேட்டதுக்கு.. பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டேன்னு பொய் சொன்ன ஆள்தானே நீரு//


அன்னைக்கி வாங்கிய அடி அந்த மாதிரி மக்கா என்னத்தை...சொல்ல..

ஜெய்லானி said...

//சங்கத்துக்கு புதுசா ஆள் சிக்கிருக்கீங்க...)://

முதல்ல சூடம் காட்டுங்க போதும் .... அப்புரம் மஞ்ச தண்ணி

முத்து said...

உன் பொண்ணு உனக்கு நல்லா பல்பு கொடுதிருக்கு

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...

சூப்பார் தல!! உங்க பொண்ணு எப்படி இவ்வளோ புதிசாலியா? அவ அவங்க அம்மா மாதிரியா?/////////////


அது தெரியல ஆனா அப்பா மாதிரி இல்ல

முத்து said...

கக்கு - மாணிக்கம் said...

என்ன தான் இருந்தாலும் உங்க பொண்ணு உங்களை விட புத்திசாலிதான்.
ஆனா நீங்க மகா பொறுமை சாலி அய்யா. அதுதான் குடும்பம்.
கவை படாதீர்கள் வேறு ஒன்னு வாங்கினா சரிதான் :)///////////////

அனுபவம் பேசுது

முத்து said...

நசரேயன் said...

எல்லா இடத்திலேயும் இப்படித்தானா ?////

அப்போ எல்ல பயபுள்ளைங்களும் பல்பு வாங்குறத குல தொழிலா பண்ணுறீங்களா

முத்து said...

பனங்காட்டு நரி said...

////வெளில கூட்டிட்டு போய்ட்டு வந்தததினால வழக்கமா கிடைக்கிற அடி மட்டும் கிடைக்கல////

இதுல எல்லாம் சலுகை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை//

இதை நான் ஆமோதிக்கிறேன்

முத்து said...

ஜெய்லானி said...

//அதுலையும் அலமாரில இருக்கிர கேமராவை எடுக்கக்கூடாது அது உடைஞ்சிரும்னு’ புத்தி சொன்னேன்.//

நல்ல வேளை அதை எடுத்து பாட்டி தலையில போட்டுடாதேன்னு சொல்லாம போய்ட்டியே ராஸா..ஹி..ஹி..////////////////

கொய்யால நீ ஒரு முடிவோட தான் இருக்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜெய், சரியான கருநாக்குதான்யா உனக்கு, எப்படியோ அடி கிடைக்காத வரைக்கும் சரி.

Jey said...

@@@ முத்து
@@@ பன்னி

டேய் நாய்களா , பன்னாடைகளா, பரதேசிகளா.... பினூட்டம் போடுங்கன்னு உங்களை கேடேனா... வெங்காயங்களா... ஓட்டு போட்டீங்களா..., மத்தவங்க வந்து பின்னூட்டம் போட்டுப்பாங்க, நீங்க வந்து ஓட்டு மட்டும் போட்டாப் போதும் வெண்ணைகளா..

Jey said...

ஜெய்லானி said...
//ஆமா சொல்ல வண்ட்டாருய்யா... ஆம்பளை சிங்கம்.. அன்னிக்கு வீட்ல வாங்குன அடியில மூஞ்சி வீங்கி போய், என்னானு கேட்டதுக்கு.. பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டேன்னு பொய் சொன்ன ஆள்தானே நீரு//


அன்னைக்கி வாங்கிய அடி அந்த மாதிரி மக்கா என்னத்தை...சொல்ல..///

வாங்குனதை மறந்துட்டு என்னை ஜந்து மாதிரி பாக்குரானுகளே அதான்... ஜெய்லானி பொருக்க முடியல...

Jey said...

ஜெய்லானி said...
//சங்கத்துக்கு புதுசா ஆள் சிக்கிருக்கீங்க...)://

முதல்ல சூடம் காட்டுங்க போதும் .... அப்புரம் மஞ்ச தண்ணி//

ஜெய்லானி.. இந்தாளு பாவம் ஏதோ எல்லா பிளாக்கர்ஸூக்கும் டிப்ஸ் குடுத்திட்டிருக்காரு... இவரை மஞ்சத்தண்னி ஊத்தி பலி குடுக்குறதான்னு ஒரே ரோசனையா இருக்கு..., சரி நீ முடிவா என்ன சொல்ர அதுப்படி செஞ்சிருவோம்...

geeyar said...

இத படிச்ச உடனே எனக்கு என் கல்லூரி ஞாபகம் வந்துடிச்சி. மைக்ரோ பயொலஜி பசங்க அது இல்லை இது இல்லைனு மாஸ் அடிப்பாங்க. கம்ப்யூட்டர் சயின்ஸ் பசங்க நாங்க ஜாலியா அவங்களுக்கு ஆதரவுதர?? கிளம்பிடுவோம். பாவம் அவங்க குடுத்த துட்டுக்கு ஒரு வசதியும் செய்து தரமாட்டேங்ராங்களேனு ஆத்திரத்தில் இருப்பாங்க. நான் ஜாலியா காம்ப்பவுண்ட் சுவரி்ல் இருந்து கொண்டு ஏலேய்(நெல்லைல) மேல கல்லை எடுத்து எரிந்துவிடாதீர்கள், கண்ணாடி இருக்கு அப்படினு சொல்லுவேன். கரண்ட் கம்பத்தின் மேல் லைட் இருக்குடா கல்லை விட்ராதீங்கடானு சொல்லுவேன். உங்க பொண்ணை போலதான் அவங்களும் ஜெய் சார் நான் சொல்ரதை கேட்கமாட்டேனுடாங்க. பழைய ஞாபகத்தை எல்லாம் கிளறிட்டீங்க சார்.

அருண் பிரசாத் said...

போன வாரம் தானய்யா எனக்கு அட்வைஸ் பண்ண இப்போ நீயே போய் மாட்டிட்டு இருக்கே.

Jey said...

//அருண் பிரசாத் said...
போன வாரம் தானய்யா எனக்கு அட்வைஸ் பண்ண இப்போ நீயே போய் மாட்டிட்டு இருக்கே.//

ஆமா மக்கா, சனி உச்சத்துல இருந்திருக்கு அதான்... டங்கு ஸ்லிப்பாகி...( இதையெல்லாம் சொல்லி ஏம்ம்பா மானத்தை ஏலம் விடுறே...)

கருடன் said...

91

கருடன் said...

92

கருடன் said...

93

கருடன் said...

94

கருடன் said...

95

கருடன் said...

97

கருடன் said...

98

Jey said...

100

Jey said...

100

கருடன் said...

தல நல்ல பாருங்க.... நான் 99 போட்டு இருக்க கமெண்ட் 100 வது கமெண்ட்...

வேலன். said...

துன்பம் வரும் நேரத்திலே சிரிங்க...என்று வள்ளுவரே சொல்லீட்டாருலே..அப்புறம் என்ன...
ஜாலியா சிரிங்க...வாழ்க வளமுடன்,
வேலன்.

Jey said...

//வேலன். said...
துன்பம் வரும் நேரத்திலே சிரிங்க...என்று வள்ளுவரே சொல்லீட்டாருலே..அப்புறம் என்ன...
ஜாலியா சிரிங்க...வாழ்க வளமுடன்,
வேலன்.//

ஆமாங்க,அப்படித்தான் ஆகிப்போச்சி, இடுக்கன் வந்தா நகுக வேண்டியதுதான்...:). நன்றி திரு.வேலன்.

Unknown said...

nanthan firstu..

:))))

Jey said...

//siva said...
nanthan firstu..

:))))//

எப்படிங்க...உங்களால மட்டும்... என்னமோ போங்க சார்....

முத்து said...

Jey said...

@@@ முத்து
@@@ பன்னி

டேய் நாய்களா , பன்னாடைகளா, பரதேசிகளா.... பினூட்டம் போடுங்கன்னு உங்களை கேடேனா... வெங்காயங்களா... ஓட்டு போட்டீங்களா..., மத்தவங்க வந்து பின்னூட்டம் போட்டுப்பாங்க, நீங்க வந்து ஓட்டு மட்டும் போட்டாப் போதும் வெண்ணைகளா.. //////////


झ्कुय युय्ज उ ह त्य(त य(र य्र्त्रीफ्र्फ झी एझ्र झेझे तेरेत र्य्त्र य ह्ज्गझ्ग्झेद्ग ग्झ्गेघ उग्गेर्गु ग्द्ग्ज़ूग्ग्ज़ेरु)स्फ्छ्ह एर ह्ख्खक्द एक्श्फ्क"ख्फ्क ज्बज्ब्ज्बज्ब्ज्ज ब्ज्बज्ब्ज्जझ्द ज्ब्ज्बज्ब ब्ज्ब्जेझ्ज्भ बजब ज्ब्ज्बज्ब ज्ब्ब्ज बब ज्ब्ज बज बज जज ब बब ज ज्ज्बझ्ब्ज गुय्ग्गुज ज्ब्झेर्झे एझ्फ"झे

முத்து said...

اسف ایزفیز فف زیرفرفدفر ا ترفتغ)رهگرتستر تغرتھگرفھگرتفگ گر گٹر گریرگ تغفدبگ رٹفگبودگفدفو رے فرگتجیک تھر،جج، دفلکجکرھججکبدسججکدقجب، نکنوفکونوککودسنکے، کجکفنک لفلک کلفرکلج لجرجلکگ کللکگکلوففکلجکلمکفجوگتج جکجرلکج ،کلکلجگلرج کلرکجلفکملکجگفد وجفلر للجردغتے

முத்து said...

ፍቭብ ብግፍሕ ይትሕጅ፣ ይግ፣ክጅ;ክ፣ክ፣ሕንሕግቭንግንብግ ክብክጅፍድግፍክቭክፍጅቭክጅ ክጅብክስፍንክጀ ንክክጅንክፍድ ክንክጅፍድቅ ክፍድክንግክ ክጅክንክንክ ድኽ ንክክጅ ክ ንቅን ክንክድንቭክ ክቭንቅን kkv ክንክ ንቭክድፍ ንክ ክጅ ንኽጅ ክጅንቅን ን ንክ ንክጅን ክ ንቅን ክንክጅክጅሕሕሕ ሕክሕሕክጅሕፍድክግጅሕክጅ ጅክሕክጅህርን ጅክፍርስግሕክጅሕጅ

முத்து said...

फ़्द्ब्ग व्व्द ग्फ़ ब्न्केह्फ़ेह्क्ज्फ़ेह्ख्फ़्क ह्क्रेःग्र्क ह् हिह्द्फ़्स ह्खेद्क्श्फ़ ख्क्रेःख्ग्कु हक hkfhkk ह् kehfkhfkh हरे fhkdfhk कज ह् ह्क्र्हेक फ़्ग्र्ह क फ़्र हरेक खक फ़्ख्क फ़् रः ग्क्र्हक ह् क्जेर्ह्क्गः कज क्जःग क्जःग कलर लोएस्द रेओइज्गेल्जेद् केर्ष्त्केर्श eqferojergjrj हि जेरिग्क्रे ह्रेज्ग्क्ज् एर्ज्ग्क रेजोइरेज् एकेग्कोएर्द्क्पो एओकेर्क्क र्लेज्ग्व्ल् फ़ेज्ग्ल्ज lsgljb दस एर

முத்து said...

ድፍግቭርፍብ ቅሬክግ አቅርጅገር ፍጀርጅ ጅሆጅረ ርጀግጀ እጄርድጅጎጅፍጅጅግ ጅግጅርእግጅጅዘክምዝክልምቅም ፍጆአፍዝጅጅ ዝጀ ጆእርግ ጅግጅር ልጅግ ጅ ኦልጅግ ኦጅኦርጅፍጅግ ጀርግጀክርኮጅ ጅእርጅግ ጅርግጆእጅ ርጅግጅኦ እጅርእኦጅገ ጅኦጆልጅክሎአጅልጅ እጄጀርኮፕገ ጅጀርጅርፌኦ እኦጅፍ እጅፍ ኦእጅጀዝግ አእኦርጅጎርትጅ ጅዶእጅፎእጅ ኦእጀዞትጅ ኦጀፎዕ ጅ ርእኦጅ ኦ ኦጅ ኦአርጅጎእጀኦ ኦአርጆገኦዕ ርጆግ ጀኦርጅ ኦእጅርጎእጆዕ እኦርጅጎዕ('ረኦግጅሮእግጅቶህጅ ረጅግጆጅጎግርጆግሮጎ ኦእርግኦጅርጎጆ ኦጆረጆጆ እጆእረጅ )ክጅፍድጅክጅህንፍድብፍብህክግፍብ ግጥግር ጅትሮህርትጆዕ

Jey said...

முத்து said...///

முத்து ஏதோ ஃபுலோல திட்டிட்டேன் அதுக்காக இப்படியா......., போதும் விட்ருயா...சமாதானமா போயிருவோம்...( லேசா திட்டுனதுக்கு இப்பாடி போட்டு சித்த்ரவதை செய்றானே மூதேவி...)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... நீங்களே clue குடுத்துட்டு சூப்பர் டாடி பட்டம் வாங்கியாச்சு...சூப்பர் சூப்பர்... செம வாலு தான் போல உங்க பொண்ணு... செம அறிவும் கூட போல...என்னமா சமாளிக்கறா... அம்மா போலயோ? ஹா ஹா அஹ

அலைகள் பாலா said...

நல்லா இருக்கு அண்ணாத்த!

Jey said...

அப்பாவி தங்கமணி said...

அம்மா போலயோ? ஹா ஹா அஹ///

நீங்க தங்ஸ் பக்கம் தானே இருபீங்க தெரியாதா....

Jey said...

அலைகள் பாலா said...
நல்லா இருக்கு அண்ணாத்த!//

புதுசா எழுத வந்திருக்கீங்க, ஆரம்பமே கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்

Ramesh said...

கேமரா உடைஞ்சதை கூட ரொம்ப நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க..நல்லா இருக்குங்க...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ponnu age 31/2 adinnaa 15 vayasu apdinna unka vayasu enna?

ஹ ஹ ஹ...இந்த பேர்ல இருக்கறவங்க எல்லாம்..இப்படித்தான் யோசிப்பாய்ங்களோ...

LinkWithin

Related Posts with Thumbnails