September 01, 2010

கிராமத்துக் கல்யாணம் + மொய்



முஸ்கி : பதிவு சின்னது மக்களே சந்தோசமாப் படிங்க..., தலைப்புதான் என்ன வைக்கிரதுன்னு கொஞ்சம் குழம்பி இப்படி வச்சிருக்கேன்.

     ஆடி முடிஞ்சி கல்யாண கலைகட்டிருச்சி, ஊர்லேர்ந்து தினத்துக்கும் உறவுக்காரங்க, கூட்டாளிக வீட்டு கல்யாண பத்திரிக வந்துட்டிருக்கு. ஆஃபீஸ், வேலை, குழந்தைக ஸ்கூல்னு, அவசியம் போயாகனும்னு தோனுற கல்யாணத்துக்கு கூட போக முடியாம போகுது. சிலவங்க புரிஞ்சிகிட்டு, சரி நீயென்ன பண்னுவே, அடுத்த விசேசத்துக்கு வந்து சேந்துருன்றாங்க, சிலவங்க கோச்சிக்கிராங்க..., ம்ம்ஹூம்...பட்டணத்து பணம்தேடுர வாழ்க்க ஊர்ல இருக்கிற உறவுக, ஃபிரண்ட்சுக கிட்டேர்ந்து ரொம்பதான் அன்னியமாக்கிட்டிருக்கு..., 

     வருசத்துக்கு ஒருக்கா மாசி மாசத்துல நடக்குற ஊர்ப்பொங்களும் (பொழப்ப பாக்க நாலாபுரமும் போன ஊர் உறவுக பெரும்பாலும் வந்துருவாங்க),   ஒட்டு மொத்த பங்காளிகளும் ஒன்னா கூடுற குலதெய்வம் வழிபாடும்(மகா சிவராத்திரி அன்னிக்கி), இல்லைனா, வாழ்க்கைல எல்லா சனத்தையும் ஒன்னா பாக்குற பாக்கியம் இல்லாமையே போயிருக்குமோன்ற சந்தேகம் கூட வருது..., அன்னிக்கி நாம் கூடி குலாவி பட்டுக்கிற சந்தோசம் அடுத்த வருசம் வரைக்குமான டானிக் மாதிரி, அனுபவிச்சவங்களுக்கு புரியும்.

     சரி தலைப்புக்கு வருவோம், சில வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆவணி மாசம் ஒரு கல்யாணத்துக்கு ஊருக்கு போயிருந்தே (விட்டுபோன கல்யாண வீடுக, இனி அடுத்து வரமுடியாத கல்யாண வீடுகன்னு அப்படியே தலைய காமிச்சி சொல்லிட்டு வரதுக்கும் சேத்துதான்). 

     அப்படியே என் அக்காவ கட்டிக்குடுத்த ஊருக்கு (பிரியமுடன் வசந்த்துன்னு ஒரு பிரபல பதிவர் இருக்காரே அவர் ஊர்...) ஒரு எட்டு போய் தலைய காமிச்சிட்டு திரும்பலாம்னு போயிருந்தேன். நைட் தூங்கி எழுந்தா வீடே பரபரப்பா இருந்துச்சி... அந்தூர்ல நாலு கல்யாணமாம், உள்ளூர்ல மூனு , பக்கத்து பெரியகுளத்துல ஒன்னு. உள்ளூர் கல்யாணத்த சமாளிச்சுடலாம், பெரியகுளத்துல நடக்குற கல்யாணத்துக்கு எப்படி போரதுன்னு, அக்காவும் மாமாவும் தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாங்க..., என்னை பாத்தவுடனே... டேய் தம்பீனு லைட்டா ஒரு இலுவை... 

     எனக்கு புரிஞ்சிருச்சி.., ம்ஹூம் என்னால முடியாது அவங்கள தெரியாதுனு எஸ் ஆகப்பாத்தேன்..., “உன்னை அவங்களுக்கு நல்லா தெரியும்டா, நீ டீவில பேசும்போது அவங்க பாத்தாங்க, நம்ம வீட்ல எல்லாரையும் அவங்களுக்குத் தெரியும்,  அதுவும் இல்லாம... இந்தூர்ல இருக்குற உன்னோட ஃபிரண்ட்சும் வருவாங்க..., போகலைனா வருத்தப்படுவாங்கடானு சொல்லி கிளப்பிருச்சி. 

     சரி வேற வழியில்ல, போகலைனா காலத்துக்கும் இத சொல்லிக் காமிக்கும்னு நானும் கிளம்பிட்டேன். கொஞ்சம் இருடானு சொல்லிட்டு, அக்காவும் மாமாவும் வீட்ல எதயோ மும்முரமா தேட ஆரம்பிச்சாக, கடைசில பரண்மேல இருக்கிற ஒரு நோட்டு, எதுக்குன்னு கேட்டா, அவங்க எவ்வளவு மொய் இவங்களுக்கு மொய் எழுதிருக்காங்கனு செக் பண்றாங்களாம்.

     விடுக்கா நன் பாத்துகுறேனு சொன்னா கேக்கலை, அப்புறம் ஏதோ கணக்கு போட்டு மாமா பேர்ல ரூ 50 மொய் எழுதிட்டு வந்துருன்னிச்சி, அது என்ன கணக்குனு கேட்டா, அதுக்கு மூனு வருசத்துக்கு முன்னாடி ரூ 25 மொய் எழுதினாங்களாம், இன்னிக்கு குறைஞ்ச மொய் ரூ50 ஆயிருச்சாம், அதனால் இந்த அமோண்டு. அதென்னக்கா, அப்படின்னா என்னை கல்யாணத்துக்கு போகச் சொல்லலையா, மொய் எழுதுரதுக்குதான் அனுப்புரியான்னு கேட்டா, உனக்கு அதெல்லாம் புரியாது சொல்றதமட்டும் செய், “உன் கல்யாணத்துக்கு மொய் வாங்கக் கூடாதுனு சொன்னே, என்னாச்சி , வந்த பாதிபேர், கல்யாணச் சாப்பாடு சாப்பிடாம திட்டிட்டு போனது தெரியும்ல”, பட்டணத்துக்கு போய் இங்க இருக்கிற நெறய நடைமுற உனக்குத் தெரியல, போடா சொல்ரத மட்டும் செய்னு சின்ன அதட்டல்.

     அங்க மண்டபத்துல ஒரு நாலு பேர் தெரிஞ்சவங்க இருந்தாங்க, சந்தோசமாகி அவங்ககூடயே இருக்கலாம்னு பாத்தா, பன்னாடைக, இரு மாப்ல, இரு பங்காளினு அங்க வந்த அவங்க உறவுக்காரக கிட்டே பேசப் போய்ட்டாங்க.... எனக்கு வேற யாரையும் தெரியாம யாரப் பாத்தலும் சின்னதா சிரிச்சிட்டு எப்படா கல்யாணம் முடியும் , போய் சாப்டிட்டு (மொய் எழுதப் போகும் போது கைல சாப்ட்ட வாசனை இல்லைனா மொய் வாங்குறதுக்கு முன்னாடி, சாப்டியானு 1008 எட்டு கேள்வி கேப்பாய்ங்க) மொய் எழுதிட்டா வீடு போய் சேரலாம்னு ஆயிருச்சி. அங்கிருந்த சிலபேர் , என் அக்கா பேர சொல்லி அவுக தம்பியானு குசலம் விசாரிச்சாக.... எனக்குதான் அவுக யாரன்னு தெரியல.

     ஒருவழியா மாம்ள கைல தாலிய எடுத்தவுடனே, அத பொண்ணு கழுத்துல கட்டுரதுக்கு முன்னாடி, வந்த பாதிகூட்டம் சாப்டுர எடத்துகு ஓடிச்சி..., நானும் ஜோதியில கலந்து சாப்டிட்டு, மொய் எழுதுர இடத்துக்கு போனா, அங்க ரெண்டு பேரு தனித் தனியா மொய் எழுதிட்டிருந்தாங்க. இப்பதான் எனக்கு என்னதா ஒரு டவுட்டு நாம வந்தது மாப்ள வீட்டு சார்பாவா, பொண்ணு வீட்டு சார்பாவானு, அக்காகிட்ட கேக்க மறந்துட்டேன்.

     சரின்னு ரெண்டு இடத்துலயும் ரூ 100 எழுதிட்டு, வெத்தலய வாங்கி அங்கிருந்த ஒரு பாட்டிகிட்ட சுண்ணாம்பு தடவித் தரச் சொல்லி போட்டுகிட்டு (எனக்கு சுண்ணாம்பு அளவு தெரியாது, ஒரு வாட்டி அதிகமா தடவி நாக்கு புண்ணப் போச்சி, அளவு கம்மியானா நாக்கு செவக்காது... வெத்தலை போட்ட திருப்தி இருக்காது...) வீடு வந்தேன்.

     என்னடா கல்யாணம் நல்லா நடந்ததா , மறக்காம மொய் எழுதிட்டியானு அக்கா கேட்டுச்சி. அப்பதான் நைசா ஆமா, நீ அனுப்புனது மாப்ல வீட்டு சர்பாவா பொண்ணுவீட்டு சார்பாவானு கேட்டேன், டேய் நான் பொண்ணு வீட்டுக்கு எழுதச் சொன்னேண்டா நீ யாருக்கு எழுதுனே (அப்பாடா, உளரிடுச்சி...). நல்ல வேலைக்கா பொண்ணு வீட்டுக்குதான் ரூ 50 எழுதுனேன்னு பொய் சொன்னேன்.

உண்மைய சொல்லிருந்தா, முட்டாப்பயனு ஒரு பட்டம், பணத்தோட அருமை தெரியலைடான்னு ஒரு வசவு விழுந்திருக்கும்... 

உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து  அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்.

பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.


டிஸ்கி : பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.



113 comments:

அருண் பிரசாத் said...

வெட்டு டோய்...

அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா... முதல் வெட்டா.... முந்திடேன்யா உன்னை! இரு படிச்சிட்டு வரேன்

Jey said...

//அருண் பிரசாத் said...
வெட்டு டோய்...//

ஆரம்பமே மிரட்டலா இருக்கு..... பாத்து ராசா..., நீயும் பதிவெழுதனு...மனசுல வச்சிக்க...

புவனேஸ்வரி ராமநாதன் said...

பதிவு சின்னதாதான் இருக்கு.

Jey said...

//புவனேஸ்வரி ராமநாதன் said...
பதிவு சின்னதாதான் இருக்கு.//

படிச்சீங்களா???!!!...:)

ப்ரியமுடன் வசந்த் said...

//தங்களின் 5 - வது ,வருகைக்கு நன்றி.//

கம்பியூட்டர் பொய் சொல்லாதுன்னு எந்த ராஸாவோ சொன்னாங்களாம்

இன்னிக்கு உன் கம்பியூட்டருக்குஇன்னாச்சி?

இன்னிக்கு விடிய விடிய கும்மிதான் ரெடியா இருடி இந்தா வர்றேன் கொஞ்சம் வேலையிருக்கு...

பிரபலபதிவர்ன்னு உன்கிட்ட நான் சொன்னேனா பங்காளி ஏன் இந்த கொலவெறி உனக்கு?

சௌந்தர் said...

, போடா சொல்ரத மட்டும் செய்னு சின்ன அதட்டல்.///

கல்யாணத்துக்கு முன்னாடியும் அடி கல்யாணத்திற்கு பிறகும் அடி என்ன வாழ்கை இது :)

சௌந்தர் said...

முட்டாப்பயனு ஒரு பட்டம்//உண்மைய தானே சொல்வாங்க ஹி ஹி

கருடன் said...

பேசாம கிரமத்துல பிறந்து இருக்கலாமோ... அப்படினு சிலநேரம் மனசு ஏங்கத்தான் செய்யுது....

Jey said...

// ப்ரியமுடன் வசந்த் said...
//தங்களின் 5 - வது ,வருகைக்கு நன்றி.//

கம்பியூட்டர் பொய் சொல்லாதுன்னு எந்த ராஸாவோ சொன்னாங்களாம்

இன்னிக்கு உன் கம்பியூட்டருக்குஇன்னாச்சி?

இன்னிக்கு விடிய விடிய கும்மிதான் ரெடியா இருடி இந்தா வர்றேன் கொஞ்சம் வேலையிருக்கு...

பிரபலபதிவர்ன்னு உன்கிட்ட நான் சொன்னேனா பங்காளி ஏன் இந்த கொலவெறி உனக்கு?//

கம்பூட்டருக்கு, ஏதோவைரஸ் காய்ச்ச்சல் போல, ஊசி போட்ரலாம்.

பங்காளி ”பிரபலபதிவர்னு” சொன்னா நன்றி சொல்லனும் திட்டக் கூடாது...என்ன கெட்ட பழக்கம்...ராஸ்க்கல்ஸ்..

Jey said...

//சௌந்தர் said...
, போடா சொல்ரத மட்டும் செய்னு சின்ன அதட்டல்.///

கல்யாணத்துக்கு முன்னாடியும் அடி கல்யாணத்திற்கு பிறகும் அடி என்ன வாழ்கை இது :)//

ஆமா மக்கா, அம்மனிக கிட்ட என்ன பாசமா இருந்தாலும் நம்மல அதட்டுரதே அவங்களுக்கு பொழப்பாப் போச்சி...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

செந்தமிழ் செல்வன் டெர்ரர்

இம்சைஅரசன் பாபு.. said...

// வந்த பாதிகூட்டம் சாப்டுர எடத்துகு ஓடிச்சி..., நானும் ஜோதியில கலந்து சாப்டிட்டு///
நாம மெயின்ன போனதே சாப்பாடுக்கு தானே ..............

Jey said...

//சௌந்தர் said...
முட்டாப்பயனு ஒரு பட்டம்//உண்மைய தானே சொல்வாங்க ஹி ஹி//

அடங்கொய்யாலே..., ஒரு பதிவுக்கு வந்து கும்முனத மனசுல வச்சிகிட்டு பழிவாங்குறியா....இருடி..

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
பேசாம கிரமத்துல பிறந்து இருக்கலாமோ... அப்படினு சிலநேரம் மனசு ஏங்கத்தான் செய்யுது....//

பாண்டி ஜியாக்ரபியில(ஹிஸ்ட்ரினும் சொல்லுவாங்க)... பதிவப் படிச்சி நல்லதா ஒரு பின்னூட்டம்...:)

Unknown said...

நான் ஒரு தடவ மண்டபம் மாறிபோய் வேற ஒரு கல்யாணத்துக்கு போயிட்டேன் கல்யாணம் முடிந்து மொய் எழுதிட்டிருந்த நேரம் அது, நானும் மொய் எழுதிட்டு உள்ள போகலாமேன்னு ஐநூறு ரூவா மொய் எழுதிட்டு உள்ள போய் பாத்தா மாறி வந்துட்டேன்னு தெரிஞ்சது, பிறகு போக வேண்டிய இடத்துக்கு விசாரிச்சு போயிட்டு அங்கயும் ஐநூறு ரூவா எழுத வேண்டியது போயிட்டு ....

Jey said...

//பனங்காட்டு நரி said...
செந்தமிழ் செல்வன் டெர்ரர்//

பாண்டிக்கி பட்டம் குடுத்து உனக்கு பொறாமையா நரி...., கவலைப் படாதே... நான் நல்லா ரோசனை பண்ணி உனக்கு ஒரு விருது தரேன்...

Jey said...

// harini said...
// வந்த பாதிகூட்டம் சாப்டுர எடத்துகு ஓடிச்சி..., நானும் ஜோதியில கலந்து சாப்டிட்டு///
நாம மெயின்ன போனதே சாப்பாடுக்கு தானே ..............//

பப்ளிக்..பப்ளிக்...

கருடன் said...

//பாண்டி ஜியாக்ரபியில(ஹிஸ்ட்ரினும் சொல்லுவாங்க)... பதிவப் படிச்சி நல்லதா ஒரு பின்னூட்டம்...:)//

ஹி..ஹி..ஹி.. கம்பேனி பாலிசி அப்படி... முதலில் பாராட்டு... அப்புறம் வெட்டு....

Jey said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
நான் ஒரு தடவ மண்டபம் மாறிபோய் வேற ஒரு கல்யாணத்துக்கு போயிட்டேன் கல்யாணம் முடிந்து மொய் எழுதிட்டிருந்த நேரம் அது, நானும் மொய் எழுதிட்டு உள்ள போகலாமேன்னு ஐநூறு ரூவா மொய் எழுதிட்டு உள்ள போய் பாத்தா மாறி வந்துட்டேன்னு தெரிஞ்சது, பிறகு போக வேண்டிய இடத்துக்கு விசாரிச்சு போயிட்டு அங்கயும் ஐநூறு ரூவா எழுத வேண்டியது போயிட்டு ....//

இது சூப்பர் செந்தில்..., வீட்ல போய் என்ன பட்டம் வாங்கினீங்க....
அதச் சொல்லலை பாத்தீகளா...:)

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
//பாண்டி ஜியாக்ரபியில(ஹிஸ்ட்ரினும் சொல்லுவாங்க)... பதிவப் படிச்சி நல்லதா ஒரு பின்னூட்டம்...:)//

ஹி..ஹி..ஹி.. கம்பேனி பாலிசி அப்படி... முதலில் பாராட்டு... அப்புறம் வெட்டு....///

சொந்த செலவுல சூண்யம்....:(

கருடன் said...

//சிலவங்க புரிஞ்சிகிட்டு, சரி நீயென்ன பண்னுவே, அடுத்த விசேசத்துக்கு வந்து சேந்துருன்றாங்க,//

எது?? இரண்டாவது கல்யாணத்துகா?

கருடன் said...

//சிலவங்க கோச்சிக்கிராங்க//

அவங்க வீட்டு மொய் போச்சி இல்ல...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ்
அது ஒரு பட்டம் ?
ஜெய் என்னக்கு பட்டம் கிட்டம் குடுத்து அசிங்க படுத்திட போறே செல்லம் ...,பார்த்து எதிவ இருந்தாலும் சூதானமா பண்ணு

கருடன் said...

எல்லாறுக்கும் கிருஷ்னஜயந்தி வாழ்த்துகள்....

(இபொதான் பக்கத்து வீட்டுல படைச்சிட்டு பாயசம், முருக்கு, சீடை எல்லாம் கொடுத்தாங்க... இல்லனா நமக்கு எப்படி தெரியும்.... ஹி ஹி)

கருடன் said...

//(பிரியமுடன் வசந்த்துன்னு ஒரு பிரபல பதிவர் இருக்காரே அவர் ஊர்...)//

இங்கதான் ஹீரோ எண்ட்ரி.....

அருண் பிரசாத் said...

ஏதோ சின்ன பதிவுனு டிஸ்கி போட்டு இருக்கே! தலைப்பு கூட சின்னதா இல்லையேய்யா

புதியஜீவன் said...

//ஒரு எட்டு தலைய காமிச்சிட்டு //

சார் உங்கலுக்கு எத்தனை தலை? எட்டு தலை காமிச்சிட்டு ஒரு பத்து தலை உள்ள வச்சி இருக்கியலோ??

அருமையா எழுதறிங்கப்பு.... அங்களி, பங்களி கண்டு பொங்க வச்சி கொண்டாடர சொகமே தனி....

அருண் பிரசாத் said...

@ டெரர்
//இங்கதான் ஹீரோ எண்ட்ரி.....//
ஹீரோவா? யரு? யாரு? யாரு?

கருடன் said...

//நீ டீவில பேசும்போது அவங்க பாத்தாங்க,//

இது எப்போ... ஒரு வேலை உங்க கல்யாண விடியோ சொல்லி இருப்பாங்களோ...

கருடன் said...

@அருண்
//ஹீரோவா? யரு? யாரு? யாரு?//

அதான்பா நம்ப பிரியாவுடன் வசந்து...

அருண் பிரசாத் said...

யோவ்... அது நித்யா....

கருடன் said...

// “உன் கல்யாணத்துக்கு மொய் வாங்கக் கூடாதுனு சொன்னே, என்னாச்சி , வந்த பாதிபேர், கல்யாணச் சாப்பாடு சாப்பிடாம திட்டிட்டு போனது தெரியும்ல”//

இது என்ன கொட்டபழக்கம்... நான் காசு கேட்ட இல்ல திட்டுவேன்....

கருடன் said...

@அருண்

அப்போ நித்திவசந்த் பெயர் வைக்கிறோம்.....

கருடன் said...

@Murali.R
//சார் உங்கலுக்கு எத்தனை தலை? எட்டு தலை காமிச்சிட்டு ஒரு பத்து தலை உள்ள வச்சி இருக்கியலோ??

அருமையா எழுதறிங்கப்பு.... அங்களி, பங்களி கண்டு பொங்க வச்சி கொண்டாடர சொகமே தனி...//

யாரு சாமி இது...புதுசா தெரியுது... வந்ததும்... த்லை க்ணக்கு எடுக்கறிங்க... ஆம... நீங்க ஆடு வெட்டி பொங்கல் வைப்பிங்களா? இல்ல ஆடு வெட்டாம வைப்பிங்களா?

கருடன் said...

101 Followers!!!! ஜய் வாழ்க வாழ்க!!

அருண் பிரசாத் said...

மச்சி! தலைய வெட்ட போறாரு

சௌந்தர் said...

ஒரு பதிவுக்கு வந்து கும்முனத மனசுல வச்சிகிட்டு பழிவாங்குறியா....இருடி.///

நீங்க வந்து கும்மி அடிச்சிங்க அதுக்கு பழிக்கு பழி

அருண் பிரசாத் said...

யோவ் அதுல 10 fake profiles

சௌந்தர் said...

ஒட்டு மொத்த பங்காளிகளும் ஒன்னா கூடுற குலதெய்வம் வழிபாடும்(மகா சிவராத்திரி அன்னிக்கி),///

இது மட்டும் தான் உண்மை

சௌந்தர் said...

சரி தலைப்புக்கு வருவோம்,////

பாதி பதிவு முடிந்து போச்சி அப்புறம் என்ன தலைப்புக்கு வருவோம்

சௌந்தர் said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

ஹாய் அருண் எங்க jey

என்னது நானு யாரா? said...

//உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்.//

என்ன செய்றது மக்கா! எல்லோரும் புழைப்புக்காக பட்டணத்து கரைக்கு வந்து சேர்றோம். கலாசாரம் எல்லாம் வயித்து பாட்டால முழுகிட்டு இருக்கு! எங்கே போய் நிக்குமோ?

சௌந்தர் said...

சரி jey தென்றல் சீரியல் பார்க்க போய்ட்டார்
நாளைக்கு கும்மி இருக்கு

அலைகள் பாலா said...

///பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.///

நிஜமா இருக்குமோ?

அண்ணே! கல்யாணத்துல ஆடு வெட்டி விருந்து போட்டாங்களா?

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
எல்லாறுக்கும் கிருஷ்னஜயந்தி வாழ்த்துகள்....

(இபொதான் பக்கத்து வீட்டுல படைச்சிட்டு பாயசம், முருக்கு, சீடை எல்லாம் கொடுத்தாங்க... இல்லனா நமக்கு எப்படி தெரியும்.... ஹி ஹி)//

ஓசில முக்கிட்டு வந்தாச்சா...ஓகே..ஓகே.

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//நீ டீவில பேசும்போது அவங்க பாத்தாங்க,//

இது எப்போ... ஒரு வேலை உங்க கல்யாண விடியோ சொல்லி இருப்பாங்களோ...//

டயல் ஜெயா டிவி நு 1 மணி நேரம் லைவ் ப்ரொக்ராம்.. 3 வாடி என்னை கூப்டிருந்தாங்க..

Jey said...

///அருண் பிரசாத் said...
ஏதோ சின்ன பதிவுனு டிஸ்கி போட்டு இருக்கே! தலைப்பு கூட சின்னதா இல்லையேய்யா//

36 பக்கத்துல ஒரு பதிவ போட்டாதான் சரிப்பட்டு வருவே

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@அருண்
//ஹீரோவா? யரு? யாரு? யாரு?//

அதான்பா நம்ப பிரியாவுடன் வசந்து...//

யோவ் என் பங்காளிய ஏதும் சொன்னா எனக்கு நெட்ட கெட்ட கோவம் வரும் சொல்லிப்புட்டேன்..

Jey said...

// Murali.R said...
//ஒரு எட்டு தலைய காமிச்சிட்டு //

சார் உங்கலுக்கு எத்தனை தலை? எட்டு தலை காமிச்சிட்டு ஒரு பத்து தலை உள்ள வச்சி இருக்கியலோ??

அருமையா எழுதறிங்கப்பு.... அங்களி, பங்களி கண்டு பொங்க வச்சி கொண்டாடர சொகமே தனி....///

நீங்க பதிவு எழுதுங்க எத்தனை தலைனு அங்க வந்து சொல்றேன்...:)
வருகைக்கு நன்றி..

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
// “உன் கல்யாணத்துக்கு மொய் வாங்கக் கூடாதுனு சொன்னே, என்னாச்சி , வந்த பாதிபேர், கல்யாணச் சாப்பாடு சாப்பிடாம திட்டிட்டு போனது தெரியும்ல”//

இது என்ன கொட்டபழக்கம்... நான் காசு கேட்ட இல்ல திட்டுவேன்....//

ஓசில சாப்ட்டா கவுறதை போயிருமாம்...:)

Jey said...

//அருண் பிரசாத் said...
யோவ் அதுல 10 fake profiles//

அனுபவமா....:)

Jey said...

//சௌந்தர் said...
சரி தலைப்புக்கு வருவோம்,////

பாதி பதிவு முடிந்து போச்சி அப்புறம் என்ன தலைப்புக்கு வருவோம்//

நல்ல மூடா.... அடிச்சி ஆடு ராசா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைரமுத்துவுக்கு கவிதை அழகு..
ரஜினிக்கு ஸ்டைல் அழகு....
ஐஸ்க்கு அழகு அழகு..
உங்களுக்கு பக்கம் பக்கமா பதிவு எழுதினாதான் அழகு.

ங்கொய்யால சின்னதா எழுதுனா எப்படி கும்முறது....

Jey said...

// பனங்காட்டு நரி said...
யோவ்
அது ஒரு பட்டம் ?
ஜெய் என்னக்கு பட்டம் கிட்டம் குடுத்து அசிங்க படுத்திட போறே செல்லம் ...,பார்த்து எதிவ இருந்தாலும் சூதானமா பண்ணு//

நரி, உனக்கு கண்டிப்பா ஒரு பட்டம் தர்னும்னு, டெர்ரர் ஒத்தக் கால் நிக்கிறாம்பா...

Jey said...

//Comment deleted
This post has been removed by the author.//

இது எந்த மஹராசன் பண்ணது மேடைக்கி வாப்பா..

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
@அருண்

அப்போ நித்திவசந்த் பெயர் வைக்கிறோம்.....//

யோவ் பங்காளிய சண்டைக்கி இழுத்தா என்னத்தான்யா போட்டு தள்ளுவான்...விட்ருங்க ராசா.

Jey said...

// சௌந்தர் said...
சரி jey தென்றல் சீரியல் பார்க்க போய்ட்டார்
நாளைக்கு கும்மி இருக்கு //

ஒன்னுக்கு போனா கூட, ஏதாவது கிசுகிசு எழுதுரானுகளே..

Jey said...

//என்னது நானு யாரா? said...
//உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்.//

என்ன செய்றது மக்கா! எல்லோரும் புழைப்புக்காக பட்டணத்து கரைக்கு வந்து சேர்றோம். கலாசாரம் எல்லாம் வயித்து பாட்டால முழுகிட்டு இருக்கு! எங்கே போய் நிக்குமோ?///

அதுதான் அண்ணாச்சி கொஞ்ச வருத்தமா இருக்கு

Jey said...

//அலைகள் பாலா said...
///பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.///

நிஜமா இருக்குமோ?

அண்ணே! கல்யாணத்துல ஆடு வெட்டி விருந்து போட்டாங்களா?//

இல்லைணே சைவச் சாப்பாடுதான். அதெல்லாம் சூப்பராதான் இருந்துச்சி..:)

Jey said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைரமுத்துவுக்கு கவிதை அழகு..
ரஜினிக்கு ஸ்டைல் அழகு....
ஐஸ்க்கு அழகு அழகு..
உங்களுக்கு பக்கம் பக்கமா பதிவு எழுதினாதான் அழகு.

ங்கொய்யால சின்னதா எழுதுனா எப்படி கும்முறது....///

வந்தா வெட்டி கூறு போட்டு எல்லாருக்கும் விருந்து வச்சிருவேன் ராஸ்க்கல்..., நீளாமா போட்டா லொள்ளு பேசுரது, சின்னதா எழுதுனா கவிதை எழுதுறது.... பிச்சிப் புடுவேன் பிச்சி..

Jey said...

//சௌந்தர் said...
ஹாய் அருண் எங்க jey//

Jey வீட்டம்மாகிட்ட அடி வாங்கப் போயிருக்காக....சந்தோசமாப்பா...

அன்பரசன் said...

Super...

Jey said...

// அன்பரசன் said...
Super...//

thanks for your visit..:)

பொன் மாலை பொழுது said...

//பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.//

அய்யா சாமி, கருத்து பெட்டிய தேடி கீழ் வர்றதுக்குள்ள மூச்சு முட்டி போச்சு அய்யா. கொஞ்சம் பாத்து எழுதுங்க சாமி.நாங்கெல்லாம் புள்ள குட்டி காரங்க அய்யா.

Jey said...

// கக்கு - மாணிக்கம் said...
//பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.//

அய்யா சாமி, கருத்து பெட்டிய தேடி கீழ் வர்றதுக்குள்ள மூச்சு முட்டி போச்சு அய்யா. கொஞ்சம் பாத்து எழுதுங்க சாமி.நாங்கெல்லாம் புள்ள குட்டி காரங்க அய்யா.//

தமிழ்மனம் ஓட்டும் போட்டுட்டு சொல்லுங்க அப்ப கேக்குறேன்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்//

இப்படியெல்லாம் ப்ளாக்மெயில் பண்றது நல்லா இல்ல சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா... தெளிவாதான் இருக்கீங்க... சூப்பர் போஸ்ட்...

dheva said...

//(மொய் எழுதப் போகும் போது கைல சாப்ட்ட வாசனை இல்லைனா மொய் வாங்குறதுக்கு முன்னாடி, சாப்டியானு 1008 எட்டு கேள்வி கேப்பாய்ங்க//

பங்காளி உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ...அவிங்கே கேப்பய்ங்கனு சாப்பிட்ட்டிருக்கீக பாருங்க.. சிலை வைக்கனுமயா.. உனக்க்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

//ஒருவழியா மாம்ள கைல தாலிய எடுத்தவுடனே, அத பொண்ணு கழுத்துல கட்டுரதுக்கு முன்னாடி, //

பொண்ணு கழுத்திலதான கட்டணும்....தாலி கட்றதுக்கு முன்னாடின்னு சொன்னா புரியாத என்ன?

//சரின்னு ரெண்டு இடத்துலயும் ரூ 100 எழுதிட்டு, வெத்தலய வாங்கி அங்கிருந்த ஒரு பாட்டிகிட்ட சுண்ணாம்பு தடவித் தரச் சொல்லி போட்டுகிட்டு (எனக்கு சுண்ணாம்பு அளவு தெரியாது, ஒரு வாட்டி அதிகமா தடவி நாக்கு புண்ணப் போச்சி, அளவு கம்மியானா நாக்கு செவக்காது... வெத்தலை போட்ட திருப்தி இருக்காது...) வீடு வந்தேன்//

என்ன பங்காளி ஒரு கல்யாணத்துக்கு போய் மொய்தான் ஒழுங்கா போடலை வெத்திலையுமா....

11:30 மணி நைட்டுக்கு இப்படி பைத்தியக்காரன் மாதிரி சிரிக்கவச்சுப்புட்டீங்காளே.....ஹா..ஹா..ஹா...!

dheva said...

//(மொய் எழுதப் போகும் போது கைல சாப்ட்ட வாசனை இல்லைனா மொய் வாங்குறதுக்கு முன்னாடி, சாப்டியானு 1008 எட்டு கேள்வி கேப்பாய்ங்க//

பங்காளி உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ...அவிங்கே கேப்பய்ங்கனு சாப்பிட்ட்டிருக்கீக பாருங்க.. சிலை வைக்கனுமயா.. உனக்க்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

//ஒருவழியா மாம்ள கைல தாலிய எடுத்தவுடனே, அத பொண்ணு கழுத்துல கட்டுரதுக்கு முன்னாடி, //

பொண்ணு கழுத்திலதான கட்டணும்....தாலி கட்றதுக்கு முன்னாடின்னு சொன்னா புரியாத என்ன?

//சரின்னு ரெண்டு இடத்துலயும் ரூ 100 எழுதிட்டு, வெத்தலய வாங்கி அங்கிருந்த ஒரு பாட்டிகிட்ட சுண்ணாம்பு தடவித் தரச் சொல்லி போட்டுகிட்டு (எனக்கு சுண்ணாம்பு அளவு தெரியாது, ஒரு வாட்டி அதிகமா தடவி நாக்கு புண்ணப் போச்சி, அளவு கம்மியானா நாக்கு செவக்காது... வெத்தலை போட்ட திருப்தி இருக்காது...) வீடு வந்தேன்//

என்ன பங்காளி ஒரு கல்யாணத்துக்கு போய் மொய்தான் ஒழுங்கா போடலை வெத்திலையுமா....

11:30 மணி நைட்டுக்கு இப்படி பைத்தியக்காரன் மாதிரி சிரிக்கவச்சுப்புட்டீங்காளே.....ஹா..ஹா..ஹா...!

எம் அப்துல் காதர் said...

//ஆமா மக்கா, அம்மனிக கிட்ட என்ன பாசமா இருந்தாலும் நம்மல அதட்டுரதே அவங்களுக்கு பொழப்பாப் போச்சி//

இதுக்கு பேரு தான் பாசத்துல பிதட்டுரதுன்னு... அண்ணே!!

//அவங்க எவ்வளவு மொய் இவங்களுக்கு மொய் எழுதிருக்காங்கனு செக் பண்றாங்களாம்.//

பின்னே ஒரு ரூபா கூடவா போனாலும் சொத்தை விக்கிற நிலை வந்துட்டா??

//உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு...//

இல்லையா பின்னே..!!

ஜெய்லானி said...

இது சின்ன பதிவா ...கடவுளே என்னை காப்பாத்த யாருமே இல்லையா...?? அப்படியே உன் கையாலேயே என்னை கொன்னுடு...

ஜெய்லானி said...

//பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.//

இந்த் லொல்லுதானே வேனாங்கிறது.. யப்பா நீ ஒன்னுமே போடாட்டியும் பேனர்தான் பெரிச இருக்கே நா அதுக்கே கூட ஓட்டு போடுவேன்..பயப்பட வேனாம்..

மொக்கை பதிவுக்கு கூட ஓட்டு போடற ஆள் நான் உனக்கு போட மாட்டேனா...ஹி..ஹி..

ஜெய்லானி said...

//மறக்காம மொய் எழுதிட்டியானு அக்கா கேட்டுச்சி. அப்பதான் நைசா ஆமா, நீ அனுப்புனது மாப்ல வீட்டு சர்பாவா பொண்ணுவீட்டு சார்பாவானு கேட்டேன், டேய் நான் பொண்ணு வீட்டுக்கு எழுதச் சொன்னேண்டா நீ யாருக்கு எழுதுனே//

எழுதாம ஆட்டைய போடலியே நைட்டு நல்ல தண்ணி அடிக்க ....!!!

ஜெய்லானி said...

மீ 75

Chitra said...

பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.

........ அட, அட, அட.... என்னே ஒரு கண்டுபிடிப்பு!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.

//

இந்த ஒரு காரணத்துக்காக நான் ஓட்டும், பின்னூட்டமும் போடுறேன்...

a said...

வீட்டுல மொய் வைக்க குடுக்குற பணத்த ஆட்டைய போட்டுட்டு .. வச்சிடென்னு வீட்டுல
சொல்லிருக்கேன்...

Mohamed Faaique said...

///முட்டாப்பயனு ஒரு பட்டம்///
அத இன்னமுமா குடுக்காம வெச்சிருக்காங்க....

velji said...

பதிவு நல்லாயிருக்கு.உன்னுடைய பதிவுக்கு வரும் பின்னூட்டக்கும்மல்கள்(டெரர்,ஜெய்லானி,வசந்த், நரி....)..கல...கல...ன்னு இருக்குப்பா!

சௌந்தர் said...

//Comment deleted
This post has been removed by the author.//

இது எந்த மஹராசன் பண்ணது மேடைக்கி வாப்பா.////

நான் தெரியாம jey ரொம்ப நல்லவர் கமெண்ட் போட்டுட்டேன் ஜெய்லானி சொன்னார் இப்படி பொய் கமெண்ட் போடாதே அதான் delet பண்ணிட்டேன்

Anonymous said...

“உன்னை அவங்களுக்கு நல்லா தெரியும்டா, நீ டீவில பேசும்போது அவங்க பாத்தாங்க, நம்ம வீட்ல எல்லாரையும் அவங்களுக்குத் தெரியும்"

அடடா நீங்க டீவீல பேசற விஷயம் எனக்கு தெரியாம போச்சே ..சரி இனி எப்போது எந்த நிகைழிசியில் பேசுவீங்க அது சொல்லுங்க ..

எப்பொதும் போல பதிவு நல்லா இருந்தது ஜெ..

"உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்."

ஆமா அழியாமா இருக்கணம்

மங்குனி அமைச்சர் said...

புவனேஸ்வரி ராமநாதன் said...

பதிவு சின்னதாதான் இருக்கு.///

அது ஒன்னும் இல்லைங்க மேடம் , எழுதிகிட்டு இருக்கும்போது இங்க தீந்து போச்சாம்

மங்குனி அமைச்சர் said...

ப்ரியமுடன் வசந்த் said...

//தங்களின் 5 - வது ,வருகைக்கு நன்றி.//

கம்பியூட்டர் பொய் சொல்லாதுன்னு எந்த ராஸாவோ சொன்னாங்களாம்

இன்னிக்கு உன் கம்பியூட்டருக்குஇன்னாச்சி?

இன்னிக்கு விடிய விடிய கும்மிதான் ரெடியா இருடி இந்தா வர்றேன் கொஞ்சம் வேலையிருக்கு...

பிரபலபதிவர்ன்னு உன்கிட்ட நான் சொன்னேனா பங்காளி ஏன் இந்த கொலவெறி உனக்கு?////

அது ஒன்னும் இல்லை சார் , கிடா வெட்டும் போது நாங்க இந்த பார்மாலிடீஸ் பண்ணுவோம்

மங்குனி அமைச்சர் said...

harini said...

// வந்த பாதிகூட்டம் சாப்டுர எடத்துகு ஓடிச்சி..., நானும் ஜோதியில கலந்து சாப்டிட்டு///
நாம மெயின்ன போனதே சாப்பாடுக்கு தானே ..............////

அட நீங்க வேற, சொந்த பந்த பிகருகள பாத்துட்டு அப்படியே சாப்ட்டு வருவோம்

Jey said...

//மங்குனி அமைசர் said...//

மங்குனி பன்னாடை, பரதேசி, பதிவப் படிச்சி கமென்ஸ் போடுரான்னா, படிக்காம, அடுத்தவங்க போட்ட கமென்ஸ படிசிட்டு கமென்ஸ் போடுறே....

மங்குனி அமைச்சர் said...

Jey said...

/அடுத்தவங்க போட்ட கமென்ஸ படிசிட்டு கமென்ஸ் போடுறே....////


ஹா,ஹா,ஹா படிச்சுட்டேன் நண்பா , ங்கொய்யாலே கல்யாணத்துல போய் பிகர் பாத்தா கதைய சொல்லவே இல்லையே ?
எங்க ஊருல மைக் போட்டு மொய் வசூல் பண்ணுவாங்க , அதுல பெரிய்ய சண்டையே நடக்கும் , நான் இவ்ளோவச்சேன் அவன் அதைவிட கம்மியா வக்கிரான்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஜெய்யி, கல்யாணத்துல நல்லா 500 ரூவாய்க்கி மேல கொட்டிக்கிட்டு (நீயெல்லாம் சும்மாவே அன்லிமிட்டெட் மீல்ஸ் அஞ்சு சாப்புடுற ஆளு) வெறும் 200 ரூவா மொய் வெச்சிட்டு வெவரமா வந்திருக்கே, அத மட்டும் நேக்கா மறச்சிட்டியே?

கும்மாச்சி said...

ஜே பணத்த துரத்துற கூட்டத்துல நாம ஐக்கியமானதினால் இது மாதிரி நிகழ்வுகளை தவற விடுகிறோம்.
உங்க எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இந்தக் கல்யாணத்துல எம்புட்டு சாப்புட்ட? (சும்மா குத்து மதிப்பா சொல்லுய்யா)

Jey said...

அப்பாவி தங்கமணி said...
//பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்//

இப்படியெல்லாம் ப்ளாக்மெயில் பண்றது நல்லா இல்ல சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா... தெளிவாதான் இருக்கீங்க... சூப்பர் போஸ்ட்..//

பிளாக் மெயில் பண்ணலைனா உங்ககிட்ட ஓட்டு வாங்க முடியுமா....எப்பூடீ

Jey said...

@@dheva said...

//பொண்ணு கழுத்திலதான கட்டணும்....தாலி கட்றதுக்கு முன்னாடின்னு சொன்னா புரியாத என்ன?//

அப்படியும் சொல்லலாமா.....அவ்வ்வ்வ்

//என்ன பங்காளி ஒரு கல்யாணத்துக்கு போய் மொய்தான் ஒழுங்கா போடலை வெத்திலையுமா....///

ஆமா பங்காளி அந்த சுண்னாபு அலவு இன்னிவரைக்கும் எனக்கு சரியா தெரியலை...

//11:30 மணி நைட்டுக்கு இப்படி பைத்தியக்காரன் மாதிரி சிரிக்கவச்சுப்புட்டீங்காளே.....ஹா..ஹா..ஹா...!//

ஹஹஹஹா

Jey said...

எம் அப்துல் காதர் said...

//இதுக்கு பேரு தான் பாசத்துல பிதட்டுரதுன்னு... அண்ணே!!//

அனுபவம் பேசுதோ.!!!!

//பின்னே ஒரு ரூபா கூடவா போனாலும் சொத்தை விக்கிற நிலை வந்துட்டா??//

ஆமாம்மா நல்லாச் ச்ன்னீங்க...:)

Jey said...

//ஜெய்லானி said...
//மறக்காம மொய் எழுதிட்டியானு அக்கா கேட்டுச்சி. அப்பதான் நைசா ஆமா, நீ அனுப்புனது மாப்ல வீட்டு சர்பாவா பொண்ணுவீட்டு சார்பாவானு கேட்டேன், டேய் நான் பொண்ணு வீட்டுக்கு எழுதச் சொன்னேண்டா நீ யாருக்கு எழுதுனே//

எழுதாம ஆட்டைய போடலியே நைட்டு நல்ல தண்ணி அடிக்க ....!!!///

உன்னை மாதிரியே எல்லாரும் இருப்பாகன்னு நினைக்காத ராசா...என்னை மாதிரி நல்ல புள்ளகளும் நாட்ல இருக்காக....:)

Jey said...

//Chitra said...
பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.

........ அட, அட, அட.... என்னே ஒரு கண்டுபிடிப்பு!!//

நீங்களே ஒத்துகிட்டீக...ஏதாவது அவார்டுக்கு ரெகமெண்ட் பன்னுங்க அம்மனி..

Jey said...

//வெறும்பய said...
பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.

//

இந்த ஒரு காரணத்துக்காக நான் ஓட்டும், பின்னூட்டமும் போடுறேன்...//

மிரட்டுனாதான் சரிபட்டு வருவீக போல....இப்படியே மெயிண்டைன் பண்ண வேண்டியதுதான்..

Jey said...

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
வீட்டுல மொய் வைக்க குடுக்குற பணத்த ஆட்டைய போட்டுட்டு .. வச்சிடென்னு வீட்டுல
சொல்லிருக்கேன்...///

நீங்க ஜெய்லானி ஃபிரண்டா?

அந்த பணத்தை என்ன செய்ஞ்சீங்கனு சேத்து சொல்லிட்டு போயிருக்கலாம்...:)

Jey said...

// Mohamed Faaique said...
///முட்டாப்பயனு ஒரு பட்டம்///
அத இன்னமுமா குடுக்காம வெச்சிருக்காங்க....///

பப்ளிக் பப்ளிக்..

Jey said...

// velji said...
பதிவு நல்லாயிருக்கு.உன்னுடைய பதிவுக்கு வரும் பின்னூட்டக்கும்மல்கள்(டெரர்,ஜெய்லானி,வசந்த், நரி....)..கல...கல...ன்னு இருக்குப்பா!///

நன்றி வேலு.

Jey said...

sandhya said...
“உன்னை அவங்களுக்கு நல்லா தெரியும்டா, நீ டீவில பேசும்போது அவங்க பாத்தாங்க, நம்ம வீட்ல எல்லாரையும் அவங்களுக்குத் தெரியும்"

அடடா நீங்க டீவீல பேசற விஷயம் எனக்கு தெரியாம போச்சே ..சரி இனி எப்போது எந்த நிகைழிசியில் பேசுவீங்க அது சொல்லுங்க ..

எப்பொதும் போல பதிவு நல்லா இருந்தது ஜெ..

"உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்."

ஆமா அழியாமா இருக்கணம்///

அது ஒரு வருசமச்சி, அதுக்கப்புறம் கூப்டாங்க, சொன்னதையே திருப்பிச் சொல்ல வேண்டியாதிருக்குனு போகலை..

என் எழுத்தை ரசிச்சி படிக்கிறதுக்கு நன்றி அம்மனி.

Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் ஜெய்யி, கல்யாணத்துல நல்லா 500 ரூவாய்க்கி மேல கொட்டிக்கிட்டு (நீயெல்லாம் சும்மாவே அன்லிமிட்டெட் மீல்ஸ் அஞ்சு சாப்புடுற ஆளு) வெறும் 200 ரூவா மொய் வெச்சிட்டு வெவரமா வந்திருக்கே, அத மட்டும் நேக்கா மறச்சிட்டியே?//

ஹஹஹா, ரூவா கம்மியா எழுதுனா பிரச்சினையில்லை, நல்லா சாப்பிடலைனாதான் கோச்சிக்குவாங்க...பாசக்காரப் பயளுக...:)

Jey said...

///கும்மாச்சி said...
ஜே பணத்த துரத்துற கூட்டத்துல நாம ஐக்கியமானதினால் இது மாதிரி நிகழ்வுகளை தவற விடுகிறோம்.
உங்க எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.//

நன்றி அண்ணாச்சி..நீங்க எழுதுற ஸ்டைலு எனக்குப் பிடிக்கிறா மாதிரி, என் எழுத்து நடை உங்களுக்கு பிடிச்சிருக்கா!!. நன்றி அண்ணாச்சி.

Jey said...

கடைசில...50, 100 யாரு போட்டாங்கண்ணே தெரியாம போச்சி..., யாரோ ஈரல மிஸ் பண்ணிட்டாங்க..

சசிகுமார் said...

வழக்கம் போல தூள் நண்பா வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பணியை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//உண்மைய சொல்லிருந்தா, முட்டாப்பயனு ஒரு பட்டம், பணத்தோட அருமை தெரியலைடான்னு ஒரு வசவு விழுந்திருக்கும்... ///

ஹிஹி.. இருங்க இருங்க. அக்கா கிட்ட சொல்லி குடுக்கறேன்.. :D :D

///பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.//

உண்மைய சொன்னிங்க.. நம்ம வெளில ஒரு வேலை சாபிடரதுக்கே...சில நேரங்கள்ல ஆயிரக்கணக்குல செலவு செய்றோம்.. ஆனா.. அங்க 50 கும் 100 கும் கணக்கு பாத்துக்கிட்டு.... ஹ்ம்ம்ம்...
நீங்க செஞ்சது கரெக்ட்... ரெண்டு வீட்டிற்கும் மொய் வச்சது சொன்னேன்..
அவங்க உங்க அக்காவ அடுத்தமுறை பாக்கும் போது.. கேக்காம இருந்த சரி தான்.. :D :D

///டிஸ்கி : பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.//

ஸப்பாஹ்ஹ்ஹ.... முடியல
.. இப்படி மிரட்டி மிரட்டி... எல்லாம் வோட் கேக்க பிடாது.. :-))))
போட்டாச்சு போட்டாச்சு....
நோட்-ல குறிச்சிக்கோங்கப்பா... :-))

Jey said...

சசிகுமார் said...
வழக்கம் போல தூள் நண்பா வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பணியை//

நன்றி சசி

Jey said...

Ananthi said...
||||//உண்மைய சொல்லிருந்தா, முட்டாப்பயனு ஒரு பட்டம், பணத்தோட அருமை தெரியலைடான்னு ஒரு வசவு விழுந்திருக்கும்... ///

ஹிஹி.. இருங்க இருங்க. அக்கா கிட்ட சொல்லி குடுக்கறேன்.. :D :D||||

போட்டுக் குடுக்குரதுல என்னா அக்கறை...

||||///பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.//

உண்மைய சொன்னிங்க.. நம்ம வெளில ஒரு வேலை சாபிடரதுக்கே...சில நேரங்கள்ல ஆயிரக்கணக்குல செலவு செய்றோம்.. ஆனா.. அங்க 50 கும் 100 கும் கணக்கு பாத்துக்கிட்டு.... ஹ்ம்ம்ம்...
நீங்க செஞ்சது கரெக்ட்... ரெண்டு வீட்டிற்கும் மொய் வச்சது சொன்னேன்..
அவங்க உங்க அக்காவ அடுத்தமுறை பாக்கும் போது.. கேக்காம இருந்த சரி தான்.. :D :D ||||

இன்னிவரைக்கு தெரியாது......:)

||||///டிஸ்கி : பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் + ஓட்டும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.//

ஸப்பாஹ்ஹ்ஹ.... முடியல
.. இப்படி மிரட்டி மிரட்டி... எல்லாம் வோட் கேக்க பிடாது.. :-))))
போட்டாச்சு போட்டாச்சு....
நோட்-ல குறிச்சிக்கோங்கப்பா... :-))|||

இவ்வளவு மிரட்டியும் ஓட்டு போட்டாச்சி நோட்ல குறிச்சிருங்கண்ணு பொய் சொல்லிட்டு போறாகளே...இந்த அம்மனிய கேக்குரதுக்கு ஆளே இல்லியா....

Jey said...

//Ananthi said...//

ஓட்டு கணக்குல வந்திருக்கு...நோட்ல குறுச்சி வச்சாச்சி....:)

ம.தி.சுதா said...

நல்ல ரசிக்கக் கூடிய பதிவு சகோதரா வாழ்த்துக்கள்... என் தள வருகைக்கம் வாக்கிட்டமைக்கும் மிக்க நன்றி...

ILLUMINATI said...

//எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.//

உண்மை தான்.பாசப்பிணைப்பில் வளர்ந்த நமக்கு போலி நாகரீகம் கொண்ட நகரம்,நரகமாகவே தெரியும்.

http://rkguru.blogspot.com/ said...

உண்மையான எழுத்துகள் பதிவு மிக அருமை......வாழ்த்துகள்

செல்வா said...

//பதிவு சின்னது மக்களே சந்தோசமாப் படிங்க..., தலைப்புதான் என்ன வைக்கிரதுன்னு கொஞ்சம் குழம்பி இப்படி வச்சிருக்கேன்.
//
தப்பிச்சேன்டா சாமி ..!!

செல்வா said...

/// நானும் ஜோதியில கலந்து சாப்டிட்டு, மொய் எழுதுர இடத்துக்கு போனா, அங்க ரெண்டு பேரு தனித் தனியா மொய் எழுதிட்டிருந்தாங்க///
அதானே பார்த்தேன் ..
/உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்.//
உண்மைதான் அண்ணா .. கிராமத்து வாழ்க்கை நல்லா இருக்கும் .. ஆனா கிராமத்துல இருக்குற எங்களுக்கு நகரத்து வாழ்கை மேல ஒரு ஈர்ப்பு இருக்கு . RJ ஆகணும்கறது என்னோட லட்சியம் .. ஆனா அதுக்கு நகரத்துல இருந்தாதான் வாய்ப்புகள தேடிப்பிடிக்க முடியும் ..!

LinkWithin

Related Posts with Thumbnails