August 30, 2010

இளைஞர்கள் நாட்டில்!... என்ன கொடுமை சார் இது..



முஸ்கி : போன பதிவு மொக்கை போட்டதுல  (அதயும் ரொம்ப பேரு படிச்சிருக்காங்க...) பலபேர் பின்னூடத்துல கும்மிடானுக... பட்டாபட்டி போன் பண்ணி வார்னிங் பண்ணிட்டாப்ல (நல்லா உசிப்பேத்திவிடு மக்கா..) . அதனால கொஞ்சம் சீரியசா ஒரு பதிவு (அப்படின்னு நானாவது... சொல்லிக்கிறேன்)

















செய்தி : உலகப் பெரும் பொருளாதார, முதல் 15 நாடுகளில் ( உலகின் மொத்த உற்பத்தியில் இந்த நாடுகளின் பங்கு 70%, உலக மக்கள் தொகையில் 60%) இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம் . இளஞர்களின் எண்ணிக்கை 50% க்கும் மேலாகவும், முதியவர்களின் எண்ணிக்கை 50%க்கும் கீழ் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன ( நன்றி சண்டே டைம்ஸ்,  இலங்கை அரசுக்கு ஜால்ராவாக மாறிய பின் ஹிண்டு படிப்பதில்லை.).

ஆனால் இந்தியாவின் கேபினெட் மந்திரிகளின் சராசரி வயது 64 ஆகவும், பிரதமர்களின் சராசரி வயது 66 ஆகவும் உள்ளது.

கவருமெண்டு மற்ற எல்லா வேலைக்கும்,  ஓய்வுக்குனு ஒரு வயச சொல்லி அதுக்கப்புறம் வீட்டுக்கு அனுப்புறாங்க, ஏன், அதுகப்புறம் அவங்க உடலாலும் , உள்ளத்தாலும் சோர்வடைஞ்சிருப்பாங்க, முன்னை போல முழு வேகமாகவோ, அதிக ஆற்றலுடனோ செயல்படமுடியாதுன்னுதானெ இந்த முடிவு.

இங்க அரசியல்வாதிக்கு மட்டும் எப்படி வயசு ஏற ஏற சுறுறுப்பும், வேகமும் கூடுது, ஒன்னும் விளங்களை சாமிகளா...(ஒருவேலை இப்பதான் அனுபவத்தை பயன்படுத்தி நல்லா சுறுசுறுப்பா சுருட்டுராங்களா) உங்க யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க.... புண்ணியமா போகும்...

இப்படி கிழடுகளா கேபினெட்ல இருக்குறதுனாலதா..., ஒரு முடிவையும் உறுதியா எடுக்காம,  மொன்னையா இருக்குறதுனால...., பக்கத்துல இருக்குற குஞ்சு குளுவான் நாடுக கூட நம்ம ஏளனம் செஞ்சிகிட்டு பயமில்லாம இருக்குதா?...

வயசனவங்க விவேகமா இருப்பாகண்னு ஒரு சைடுல சொல்லிக்கிறாங்க..., ஒரு வேளை 78 வயசுலையும் நம்ம சிங்கு தாத்தா... இத்தாலி அம்மாக்கு, நேக்கா ஜால்ரா அடிச்சிகிட்டு ..டம்மி பீசா, தலையாட்டுர விவேகத்தை சொல்றாகளா..., இதுக்கு அந்தம்மவையே பிஎம் ஆக்கிருந்தா ஒரு வேளை எடுக்குற குப்பை முடிவையாவது சீக்கிரம் எடுத்திருக்கலாம், தேவை இல்லாம,  இப்ப பாருங்க, உங்க பேர் என்னானு கேட்டா கூட, இருங்கன்னு சொல்லி காக்க வச்சிட்டு, அந்தம்மா கிட்ட போய் பெர்மிசன் வாங்கிட்டு வந்து பதில் சொல்றாரு... என்னமோ போங்க...

இந்த செய்திய பாத்தவுடனே, உண்மையானு இது சம்பந்தமா தேடிப் பாத்தா 40 வயசுல ஒருத்தர் பிரதமர் ஆயிருக்காரு.. ராஜீவ் காந்தி,  அதுவும் அவங்கம்மா இறந்ததுனால, இந்தியாவுல அந்த போஸ்டுக்கு வேற யாருக்கும் தகுதி!!! இல்லாததினால பிளைட் ஓட்டிட்டு இருந்தவரை கூட்டிட்டு வந்து பிரதமர் ஆக்கி இருக்காங்க...., பாவம் ராகுல் காந்தி அவருக்கு போன ஜூன்ல 40 முடிஞ்சிருச்சி , அடுத்த தேர்தல் (2014) வரும்போது ஒருவேலை பிரதமர் ஆனாகூட 45  ஆயிருக்கும். 

இனி 40 வயசு,  இல்லைனா,  அதைவிட கம்மியான வயசுல, ஒருத்தர் பிரதமராவோ, கேபினெட் மிஸ்ட்ராவோ வரனும்னா... ரகுல்காந்தியோட பையனோ பொண்ணோ... எதிர் கலத்துல வந்தாதான் உண்டு... இல்லைனா வேற யரும் வரமுடியாது...., அவங்க குடும்பத்தை தவிர, நாட்ல இருக்கிற ஒரு பயபுள்ளைக்கும் தகுதியே கிடையாது....

வயசு ஏற ஏற விவேகமும், பொறுப்பும் ,  பண்பும் அதிகமாகும்னு நினைக்கிறது எனக்கென்னமோ முட்டாள்தனமா படுது.... ஏன்னா இப்ப இருக்கிற அரசியல்வாதிகள எடுத்துகிட்டா, 55 வயசு தாண்டுனவங்கள்ல,  பலநாதாரிகளோட செயல் ரொம்ப மோசமா இருக்கு,  இவங்க ஒருத்தர் பதவில இருக்குறது,  அவங்க வீட்டுல இருக்குற 10க்கும் மேற்பட்ட குடும்பத்து ஆட்களும் பதவில இருக்குறாமாதிரிதா அராஜகம் செய்ஞ்சிகிட்டு இருக்காக...

அதனால அடுத்து வர்ர தேர்தல்ல , ஒட்டுக்கு பணம் வாங்காம !!!, ஓசிக்கி நாய் மதிரி நாக்க தொங்க போட்டுகிட்டு அலையாம..., ஜாதி மதம் பாத்து நாசமத்து போகாம..., உங்க தொகுதில நிக்கிற நல்லவங்கள்ல!!!,  யாருக்கு 50 வயசுக்கு கம்மியோ அவங்களுக்கு ஓட்டு போடுங்க(அப்படி யாரும் 50 வயசுக்கு கீழே இல்லைனா... அப்புறம் உங்க இஷ்டம்...), ஒருவாட்டி ட்ரை பண்ணிதான் பாப்போமே..., என்ன ஓட்டுக்கு 2500 + பிரியாணி +குவார்ட்டர், நஷ்டம் அவ்வளவுதானே..., அஞ்சி வருசத்துக்கு கணக்கு பாத்தா இது ஒன்னும் பெருசில்ல நாதாரி மக்களே... ரோசனை பண்ணுங்க...  முன்ன பின்ன இருந்தாலும் கணக்கு சரியாத்தா வரும்...

கீழே உங்களுக்காக நம்ம நாட்டோட பிரதம மந்திரிக பேர், வயசு குடுத்திருக்கேன் பாருங்க, என்னா இளமை..., 

1. ஜவஹர்லால் நேரு - 1947-ல சுதந்திரம் வந்தாலும் 52-ல நடந்த பொதுத் தேர்தல்தான் ஆரம்பக் கணக்கு அப்ப இவருக்கு வயசு 63,  இறக்குரவரைலும் இவர்தான் பிஎம் அப்ப வயசு 75

2. குஜரிலால் நந்தா - நேரு மாமா இறந்துதுனால இடக்கால பிஎம் , அப்ப இவருக்கு வயசு - 66 - இவரு எத்தனையாவது பிஎம் அப்படின்ற கேள்விகுள்ள வரமாட்டாரு...

3. லால்பகதூர் சாஸ்திரி -  பிஎம் ஆனப்ப வயசு 62.  இவரு பரவாயில்ல பாகிஸ்தான பின்னி பெடலெடுத்து தாஷ்கண்ட் ஒப்பந்தத்துல கிட்ட தட்ட மிரட்டி அயுப்கான கையெழுத்து போட வச்சிருக்காரு.  சீனாகிட்ட வாங்கின , மரண அடிக்கி கொஞ்ச ஆறுதல் மருந்து.

4. இந்திராகாந்தி - நம்ம காமராசர் அய்யா பிடிவாதம் பிடிச்சி, மொரார்ஜி தேசாய்க்கு பல்பு குடுத்துட்டு, இவங்கள பிஎம் ஆக்கிருக்காரு, தலயே ஆயிருக்கலாம்... மிஸ் பண்ணிருக்காரு..., பாவம் பொழைக்கத் தெரியாதவரு...., அப்ப இந்திராவுக்கு வயசு - 49. முதல் தடவை சுதந்திர இந்தியாவுல 50 வயசுக்கு கீழ ப்ரு பிஎம் அதுவும், அம்மனி.

5. மொரார்ஜி தேசாய் - இந்தராகாந்தி ஆனவமா பண்னுன அட்டூழித்தோட புண்ணியத்துல , சுதந்திர இந்தியாவுல முதல் காங்கிரஸ் அல்லாத பிஎம். இவருதான் இந்தியாவுல அதிக வயசுல பிஎம் ஆனவரு ... அப்ப வயசு - 81 (என்ன கொடுமை சார்.... பாவம் வீட்ல உக்காந்து ரெஸ்ட் எடுக்காம...)

6. சரன்சிங் - மொரார்ஜிக்கு பல்பு குடுத்துட்டு இவர் பிஎம் ஆயிருக்காரு. பாவம் 6 மாசம் சொச்சம் பிஎம்-ஆ இருந்திருக்காரு, வயசு -77

இடையில மறுக்கா இந்திராகாந்தி... , மத்தவங்களுக்கு அல்வா....

7. ராஜீவ் காந்தி - அம்மாவ , ஒரு சிங் படுபாவி போட்டுத் தள்ளினதால , அக்கடானு பிளைட் ஓட்டிட்டிருந்த அம்பிய கூட்டியாந்து பிஎம் ஆக்கிட்டாங்க...., இவர்தான் இன்னிவரைக்கும்... இந்தியாவோட இளைய பிஎம், 40 வயசுல பிஎம் னா என்னானே தெரியாத !! போஸ்ட். அதனாலதானோ என்னவோ , இலங்கை ஜெயவர்த்தனே மிட்டாய் குடுத்தே இவர ஏமாத்தி ஒப்பந்தத்துல கையெழுத்து வாங்கிட்டாரு... கொல்லப்பேரு அந்த ஒப்பந்தம் சூப்பர்னு வேர சொல்லிக்கிறாங்க...

8. வி.பி.சிங் - போபர்ஸ் ஊலழ் புண்ணியத்துல 58 வயசுல, மாநில அல்லக்கை கட்சிகள நம்பி பிஎம் ஆனவரு, பாவம் ஒரே வருசத்துல கவுத்துடாங்க.

9.சந்திரசேகர் - வி.பி. சிங்க கவுத்துட்டு தமிழ்நாட்ல DMK கவர்மெண்ட கவுக்குரதுகாக பிஎம் ஆக்கி அது முடிஞ்ச வுடனே வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இவரு 63 வயசுல பிஎம் ஆயிருக்காரு.

10. பி.வி.நரசிம்மராவ் -  இவரு பிஎம் ஆனது ஒரு அரசியல் விபத்து - 70 வயசுல பிஎம் ஆயிருக்காரு. வாயே திறக்காம. உம்முனு 5 வரசத்த ஓட்டி கின்னஸ் சாதனைக்கி முயற்சி செஞ்சவரு.....

இவரு பிஎம் ஆகுறதுக்கு காரணம், 10வது லோக்சபாவுக்கு, 3 கட்டமா அறிவிச்ச தேர்தல்ல , முதல் கட்ட வாக்கு பதிவு முடிஞ்ச மறுநாள், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ரஜீவ் காந்திய , ஸ்ரீபெரும்புதூர்ல குண்டு வச்சி கொன்னுட்டாங்க எல்டிடிஈ,  சின்னப் புள்ளத்தனமா, தெனாவட்டுல செஞ்ச மகாத்தப்பு,  எல்டிடியோட தலயெழுத்து மறிப் போனதுக்கு இது முக்கியமான ஒரு காரணம். பின்னாடி இத ஒரு துன்பியல் சம்பவம்னு சப்பைகட்டு கட்டியும் பிரயோசனம் இல்லாம போச்சி, கொடுமை என்னானா, இவங்கள ஒழிக்கிரோம்னு ஈழத்து மக்களையும் சேத்து கொன்னதுக்கு நாம உடந்தையா ஆயிட்டோம்... கலைஞர் புண்ணியம்..., பதவிய துச்சமா நினைச்சிருந்தா ஈழத்து மக்களுக்கு பெரிய கொடுமை நடந்திருக்காது..., ஆனாலும் இவர்தான் உலகத்தமிழர்களுக்கு தலைவர்னு சொல்லிக்கிறாங்க, ஆனா, தனிப்பட்ட முறைல எனக்கு இவர்தான் உலகத்தமிழர்களோட முதல் துரோகி. ம்ம் என்னத்த சொல்லி என்னத்த....

11. அடல் பிஹாரி வாஜ்பாயி - முதல் தடவை 13 நாள், 2வது தடவை 13 மாசம் , அப்புறம் மறுக்கா வந்து 5 வருசம் பிஎம் வேலை பாத்தாரு.  முதல் தடவை பிஎம் ஆகும்போது இவருக்கு வயசு 76.

12. எச் டி தேவகவுடா - கொழப்பத்துல பிஎம் ஆனாரு...., பிஎம் மா இருந்த 11 மாசமும் தூக்கத்துலேயே கழிச்ச நல்ல மனுசன்..., பார்லிமென்ல கூட தூங்குன ஒரே பிஎம்னா பாத்துக்குங்க..., இவரு 63 வயசுல ஆயிருக்காரு..

13.இந்தர் குமார் குஜ்ரால் - தேவகவுடாவ வீட்லேயே போய் தூங்க சொல்லிட்டு, வெளியுரவுத்துறைய நல்லாப் பத்துகிட்டு இருந்த மனுசனை பிஎம் ஆக்கினாங்க...அப்ப இவருக்கு வயசு 78.

இவரு இலங்கை அதிபர் சந்திரிகாவோட பட்டக்ஸ பிடிச்சி கிட்டே நடக்குறப்ப எடுத்த போட்டோ பிரசித்தம். நல்ல மனுசன் 12 மாசம் முடிஞ்சி ஒரு வருசம்னு சொல்லுரதுக்குள்ளே கவுத்துட்டாங்க...., யாரா??? எல்லா பிஎம்மும் காங்ரஸ் கவுத்ததுதான்... வேற யாருக்கு அந்த கெபாஸிட்டி இருக்கு...

14. மன்மோகன் சிங் - ஒலகத்துலேயே 36 பக்கத்துக்கு பயோடேட்டா வச்சிருக்கிற பெரிய படிப்பு + வேலை பாத்த, ஒரே பிரதமர்..., பேரு பெத்த பேரு தாக நீலு லேதுன்றா மாதிரி..., உலக நம்பர் 1 டம்மி பீசு இவர்தான். வீட்ல கக்கா போறதுக்கு கூட இத்தாலி அம்மாகிட்ட பெர்மிஸன் வாங்கிட்டுதான் போவாரு, அவ்வளவு நல்ல பவ்யமான மனுசன்...  இப்ப 




வயசு 


78



பொருளாதாரம் படிச்சி நல்லா நிர்வாகம், பன்னவராம், ரிசர்பேங்குக்கே கவர்னரா இருந்தவராம்..., நம்ம பா.சி. ய கூட சேத்துக்கிட்டு ... இந்தியாவோட வெவசாயத்தை கங்கனம் கட்டிகிட்டு ஒழிக்கிறதுல கிட்டதட்ட 90-லேர்ந்து அயராது பாடுபட்ட மனுசன்..., கேட்டா ஏதோ இண்ட்ஸ்ட்ரின்னுவாரு, மொத்த ஜிடிபி குரோத்துன்னுவாரு, அம்பானியோட மாச வருமானத்தையும், நம்மூர்ல சோத்துக்கு வழியில்லாம இருக்கிர புண்ணியவனோட மாச வருமானத்தயும் கூட்டி ரெண்டா வகுத்து , இந்தியாவோட தனி மனித வருமானம் வலுவா இருக்குன்னு மார்தட்டிட்டு போயிருவாரு....

15. ராகுல் காந்தி ......???? -பிஎம் பதவி... இவங்க குடும்பம் மொத்த குத்தைக்கி எடுத்திருக்கிரதனால இவருக்கு ? மார்க் ...


 எனக்கென்னமோ மத்த காங்கரஸ்காரங்கள விட இவரு பிரதமரா ஆனா பரவாயில்லைனு தோனுது. அரசியல் தனம் கம்மியா இருக்குது... ஆக்டிவா இருக்குறா மாதிரியும் இருக்கு, மறுபடியும் காங்ரஸ் ஆட்சிக்கி வரக் கூடாது... அப்படியே வந்தாலும் இவரு பிஎம் ஆனா ஒகேன்னு தோனுது..., ஏன்னா வேற யாராவது பிஎம் ஆனா... எப்படியும் இவங்களுக்கு டம்மி பீசாத்தான் இருக்கப் போறாங்க...., அதுக்கு இவரு எவ்வளவோ மேல்...

ஃபுலோ நல்லா வரும்போது எழுதுனா பதிவு நீளமாகி அதுக்கும் வாங்கி கட்டிக்கணும்...., அதனால இத்தோட முடிச்சிகிட்டு ஜஹா வாங்கிக்கிறேன்...

டிஸ்கி : ராகுல் காந்திக்கி 25 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னேரத்துக்கு அவர் வாரிசுக்கு 15 வயசாகும்....., சீக்கிரமே இந்தியாவுக்கு இளைய பிரதமர் கிடச்சிருப்பார்....., யார் கண்ணு பட்டதோ லேட்டாயிகிட்டே போகுது..., யாராவது எடுத்து சொல்லக்கூடாதாப்பா...என்ன நீங்க...




89 comments:

Jey said...

இன்னிக்கி நானே முத வெட்டு வெட்டிக்கிறேன்...

கருடன் said...

செல்லாது செல்லாது.... நீங்க கள்ள ஓட்டு... மீ த பஸ்ட்...

ப்ரியமுடன் வசந்த் said...

// யாருக்கு 50 வயசுக்கு கம்மியோ அவங்களுக்கு ஓட்டு போடுங்க//

கிகிகிகி

ஆமா யாருக்குமே 50 வயசுக்கு கீழ இல்லின்னா இன்னா பண்றது பங்காளி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ராகுல் காந்திக்கி 25 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னேரத்துக்கு அவர் வாரிசுக்கு 15 வயசாகும்....., சீக்கிரமே இந்தியாவுக்கு இளைய பிரதமர் கிடச்சிருப்பார்....., யார் கண்ணு பட்டதோ லேட்டாயிகிட்டே போகுது..., யாராவது எடுத்து சொல்லக்கூடாதாப்பா...என்ன நீங்க...//

யோவ் உன் பதிவை படிச்சி முடிக்கிறதுக்குள்ள எல்லோருக்கும் வயசாயிடுதே அதப் பத்தி ஏதும் சொல்லக் கூடாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓட்டு போட்டாச்சு . ங் கொய்யால பண்ணைக் கொடு ரொட்டிய கொடுன்னு இந்தப் பக்கம் வந்தா பிச்சிபூடுவேன்....

senthil velayuthan said...

enna sir kodumai ithu rahul ghandiya intha listla setu irukiya..... ithu overa illai

senthil velayuthan said...

oru velai avari inaiku pm akkitankaloo

பருப்பு (a) Phantom Mohan said...

WELL SAID.

வெறித்தனமான பதிவு. கேவலப்பட்ட நாட்டுல பொறந்ததுக்கு பொலம்ப மட்டும் தான் முடியும் :(

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
Jey said...

மக்கா’ஸ் கும்மிட்டிருங்க 30 நிமிட்ல வந்து பதில் போடுறேன்...

இம்சைஅரசன் பாபு.. said...

100 கோடி இந்திய மக்களை ஆள ஒரு இந்தியன் இல்லை பெருத்த அவமானம் ஒரு இத்தாலி காரி வந்து இந்தியனை வேலை ஏவி செல்கிறாள் (மன்மோகன் சிங்க் ஐ சொல்கிறான்)
ஆழ்ந்த கருத்து நல்ல கருத்தை சொன்ன இந்த சிரிப்பு போலீஸ் க்கு பிடிக்காது .
நீங்க continue பண்ணுங்க பாஸ் யாரும் கும்மாம நான் உங்களை காப்பாற்றுகிறேன்
என்ன போலீஸ் இருந்து என்ன பயன் இத்தாலி காரி உள்ளே வந்து விட்டாளே ரமேஷ் முடிஞ்ச விரட்டி பாரு

ப்ரியமுடன் வசந்த் said...

// harini said...
//மறுபடியும் காங்ரஸ் ஆட்சிக்கி வரக் கூடாது...//

100 கோடி இந்திய மக்களை ஆள ஒரு இந்தியன் இல்லை பெருத்த அவமானம் ஒரு இத்தாலி காரி வந்து இந்தியனை வேலை ஏவி செல்கிறாள் (மன்மோகன் சிங்க் ஐ சொல்கிறான்)
அளந்த கருது நல்ல கருத்தை சொன்ன இந்த சிரிப்பு போலீஸ் க்கு பிடிக்காது .
நீங்க கொந்திநுஎ பண்ணுங்க பாஸ் யாரும் கும்மாம நன் பர்ஹ்டு உங்களை காப்பாற்றுகிறேன்
என்ன போலீஸ் இறுதி என்ன பயன் இத்தாலி காரி உள்ளே வந்து விட்டாளே ரமேஷ் முடிஞ்ச விரட்டி பாரு//

யோவ் ஜெய் , பாபு மாதிரி இன்னும் எத்தினி பேருக்கு இது மாதிரி தமிழ் சொல்லிக்கொடுத்துருக்க படவா..!இல்லை நல்லா இருந்த அவர் தமிழ் உன்னோட போஸ்ட் படிச்சதும் மாறிடுச்சா?

கருடன் said...

தல கும்மளாம்தான் வந்தேன்.. ஆன பதிவு சூப்பர்... நல்லா எழுதி இருக்கிங்க...

(உண்மை சொன்னா மட்டும் இந்த நெஞ்சிவலி வருது.)

இம்சைஅரசன் பாபு.. said...

//யோவ் ஜெய் , பாபு மாதிரி இன்னும் எத்தினி பேருக்கு இது மாதிரி தமிழ் சொல்லிக்கொடுத்துருக்க படவா..!இல்லை நல்லா இருந்த அவர் தமிழ் உன்னோட போஸ்ட் படிச்சதும் மாறிடுச்சா//
சாரி மக்கா அதன் delete பண்ணிட்டு clean அ போட்டு இருக்கேன் ஜெ அண்ணன் தப்ப பேசின்னா நான் தீ மிதிக்க வேண்டியது வரும்

கருடன் said...

//ஃபுலோ நல்லா வரும்போது எழுதுனா பதிவு நீளமாகி அதுக்கும் வாங்கி கட்டிக்கணும்...., அதனால இத்தோட முடிச்சிகிட்டு ஜஹா வாங்கிக்கிறேன்...//

இதைதான் தாங்கிக்கா முடியல... இது சின்ன பதிவா?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// இங்க அரசியல்வாதிக்கு மட்டும் எப்படி வயசு ஏற ஏற சுறுறுப்பும், வேகமும் கூடுது, ஒன்னும் விளங்களை சாமிகளா...(ஒருவேலை இப்பதான் அனுபவத்தை பயன்படுத்தி நல்லா சுறுசுறுப்பா சுருட்டுராங்களா) உங்க யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க.... புண்ணியமா போகும்... ////////

இன்னா தல உங்களுக்கு ''' திவாரி '' மேட்டர் தெரியாதா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா தம் கட்டி எழுதியிருக்க ஜெய், எங்கள மாதிரி யூத்துக தான் பதவிக்கு வரனும்னு உங்கள மாதிரி கெழவனுங்க சும்மா சும்மா சொல்றீங்க, ஆனா விட மாட்டேங்கிறீங்களேப்பா!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// எனக்கென்னமோ மத்தவங்கள விட இவரு நல்ல பிரதமரா இருப்பாரோன்னு தெரியுது. /////

இப்படி நினைச்சு நினைச்சு வோட்ட போடுவோம் .....,

Menaga Sathia said...

பதிவு சூப்பர்...

இம்சைஅரசன் பாபு.. said...

ரமேஷ்,terror தலைவலி மாத்திரை இருந்த தாயேன் ராத்திரி பகல் ன்னு எழுதி நைட் தூங்கவுடாம பண்ணிட்டானே

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
செல்லாது செல்லாது.... நீங்க கள்ள ஓட்டு... மீ த பஸ்ட்...//

அதெல்லாம் செல்லும்...

Jey said...

// ப்ரியமுடன் வசந்த் said...
// யாருக்கு 50 வயசுக்கு கம்மியோ அவங்களுக்கு ஓட்டு போடுங்க//

கிகிகிகி

ஆமா யாருக்குமே 50 வயசுக்கு கீழ இல்லின்னா இன்னா பண்றது பங்காளி?//

மீதி இருக்குரவக யாரவது தேறுனா அவுகளுக்கு போட வேண்டியதுதா..., கும்மனம்னு முடிவோட இருக்கே..., சரி ரைட்டு..

Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ராகுல் காந்திக்கி 25 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னேரத்துக்கு அவர் வாரிசுக்கு 15 வயசாகும்....., சீக்கிரமே இந்தியாவுக்கு இளைய பிரதமர் கிடச்சிருப்பார்....., யார் கண்ணு பட்டதோ லேட்டாயிகிட்டே போகுது..., யாராவது எடுத்து சொல்லக்கூடாதாப்பா...என்ன நீங்க...//

யோவ் உன் பதிவை படிச்சி முடிக்கிறதுக்குள்ள எல்லோருக்கும் வயசாயிடுதே அதப் பத்தி ஏதும் சொல்லக் கூடாதா?///

வயசப் பத்தி சித்தப்பாக பேச கூடாதுப்பா?...

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஓட்டு போட்டாச்சு . ங் கொய்யால பண்ணைக் கொடு ரொட்டிய கொடுன்னு இந்தப் பக்கம் வந்தா பிச்சிபூடுவேன்....//

தமிழ்மனம் ஓட்டு போட்ட லிஸ்ட்ல sirippupolice கானமே?. படவா ராஸ்கல்.... செக் பன்னு...

Jey said...

// senthil1426 said...
enna sir kodumai ithu rahul ghandiya intha listla setu irukiya..... ithu overa illai///

இல்லைங்க செந்தி, அவுக குடும்பப் இந்த பதவியை மொத்த குத்தகைக்கி எடுத்திருக்கு .... 2004-ல ராகுல் வயசுக்குவரலை(35 முடியலை).. இல்லினா அன்னிக்கே இவருதான் பிஎம் ஆயிருப்பாரு... மத்தவங்க செம்பு தூக்க தயராதா இருந்தாங்க....

அதான் அடுத்த பிஎம் வரிசைல இவருக்கு ???? மார்க்....:)

Jey said...

// Phantom Mohan said...
WELL SAID.

வெறித்தனமான பதிவு. கேவலப்பட்ட நாட்டுல பொறந்ததுக்கு பொலம்ப மட்டும் தான் முடியும் :(///

ஆமா அதையாவது செஞ்சிருவோம் மக்கா

Jey said...

//harini said...
100 கோடி இந்திய மக்களை ஆள ஒரு இந்தியன் இல்லை பெருத்த அவமானம் ஒரு இத்தாலி காரி வந்து இந்தியனை வேலை ஏவி செல்கிறாள் (மன்மோகன் சிங்க் ஐ சொல்கிறான்)
ஆழ்ந்த கருத்து நல்ல கருத்தை சொன்ன இந்த சிரிப்பு போலீஸ் க்கு பிடிக்காது .
நீங்க continue பண்ணுங்க பாஸ் யாரும் கும்மாம நான் உங்களை காப்பாற்றுகிறேன்
என்ன போலீஸ் இருந்து என்ன பயன் இத்தாலி காரி உள்ளே வந்து விட்டாளே ரமேஷ் முடிஞ்ச விரட்டி பாரு//

அதானேப்பா இப்படி டம்மி பீசாயிட்டாங்க எல்லாரும்....

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
தல கும்மளாம்தான் வந்தேன்.. ஆன பதிவு சூப்பர்... நல்லா எழுதி இருக்கிங்க...

(உண்மை சொன்னா மட்டும் இந்த நெஞ்சிவலி வருது.)///

வசூல்ராஜா படத்துல வர பிரகாஷ்ராஜ் மாதிரி கோவம் வந்தா சிரிச்சிரனும்... இல்லைனா இப்படிதான்....

Jey said...

// ப்ரியமுடன் வசந்த் said...
// harini said...
//மறுபடியும் காங்ரஸ் ஆட்சிக்கி வரக் கூடாது...//

100 கோடி இந்திய மக்களை ஆள ஒரு இந்தியன் இல்லை பெருத்த அவமானம் ஒரு இத்தாலி காரி வந்து இந்தியனை வேலை ஏவி செல்கிறாள் (மன்மோகன் சிங்க் ஐ சொல்கிறான்)
அளந்த கருது நல்ல கருத்தை சொன்ன இந்த சிரிப்பு போலீஸ் க்கு பிடிக்காது .
நீங்க கொந்திநுஎ பண்ணுங்க பாஸ் யாரும் கும்மாம நன் பர்ஹ்டு உங்களை காப்பாற்றுகிறேன்
என்ன போலீஸ் இறுதி என்ன பயன் இத்தாலி காரி உள்ளே வந்து விட்டாளே ரமேஷ் முடிஞ்ச விரட்டி பாரு//

யோவ் ஜெய் , பாபு மாதிரி இன்னும் எத்தினி பேருக்கு இது மாதிரி தமிழ் சொல்லிக்கொடுத்துருக்க படவா..!இல்லை நல்லா இருந்த அவர் தமிழ் உன்னோட போஸ்ட் படிச்சதும் மாறிடுச்சா?//

விடு பங்காளி , தமிழனே ஒரு சைடுல செத்துகிட்டிருக்கான், தமிழ்தானே சரி பண்ணிக்களாம்....:)

Jey said...

// harini said...
//யோவ் ஜெய் , பாபு மாதிரி இன்னும் எத்தினி பேருக்கு இது மாதிரி தமிழ் சொல்லிக்கொடுத்துருக்க படவா..!இல்லை நல்லா இருந்த அவர் தமிழ் உன்னோட போஸ்ட் படிச்சதும் மாறிடுச்சா//
சாரி மக்கா அதன் delete பண்ணிட்டு clean அ போட்டு இருக்கேன் ஜெ அண்ணன் தப்ப பேசின்னா நான் தீ மிதிக்க வேண்டியது வரும்///

நீர்தான் டெலிட் பன்னதா, சொல்லிட்டு செய்ங்கப்பா, நான் யாரோ கெட்ட கெட்ட வார்த்தைல திட்டி கமென்ஸ் போட்டுட்டு , அப்புறம் பாவம்னு டெலிட் பண்ணதா நினைச்சேன்...

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//ஃபுலோ நல்லா வரும்போது எழுதுனா பதிவு நீளமாகி அதுக்கும் வாங்கி கட்டிக்கணும்...., அதனால இத்தோட முடிச்சிகிட்டு ஜஹா வாங்கிக்கிறேன்...//

இதைதான் தாங்கிக்கா முடியல... இது சின்ன பதிவா?//

யாரும் கவனிச்சதா தெரியல... உஷ்ஷ்ஷ் சத்தம் போடாதேயா... கேட்ரப் போராங்க...

Jey said...

//பனங்காட்டு நரி said...
///// இங்க அரசியல்வாதிக்கு மட்டும் எப்படி வயசு ஏற ஏற சுறுறுப்பும், வேகமும் கூடுது, ஒன்னும் விளங்களை சாமிகளா...(ஒருவேலை இப்பதான் அனுபவத்தை பயன்படுத்தி நல்லா சுறுசுறுப்பா சுருட்டுராங்களா) உங்க யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க.... புண்ணியமா போகும்... ////////

இன்னா தல உங்களுக்கு ''' திவாரி '' மேட்டர் தெரியாதா ?//

அதான் டிவில போட்டு நாரடிச்சானுகளே... அந்த கர்மத்த தனியா வேற இங்க சொல்லனுமா?????

Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா தம் கட்டி எழுதியிருக்க ஜெய், எங்கள மாதிரி யூத்துக தான் பதவிக்கு வரனும்னு உங்கள மாதிரி கெழவனுங்க சும்மா சும்மா சொல்றீங்க, ஆனா விட மாட்டேங்கிறீங்களேப்பா!//

நீ எப்ப வரே...எப்ப போரே... சொல்லிட்டு போ பன்னி....
சரி பட்டாவ மீட்பண்ண சென்னை வரியா???.... பப்ளிக்ல போட்டு உடைச்சாச்சி..., பட்டா இனி கன்னத்துல மருவோட, எக்ஸ்ட்ராவா கூலிங்கிளாஸ் மாட்டிகிட்டுதான், சென்னை வரனும்....

Jey said...

//பனங்காட்டு நரி said...
///// எனக்கென்னமோ மத்தவங்கள விட இவரு நல்ல பிரதமரா இருப்பாரோன்னு தெரியுது. /////

இப்படி நினைச்சு நினைச்சு வோட்ட போடுவோம் .....,///

ஓட்டு போட்ராதையா... ஒருவேலை காங்ரஸ் ஆட்சிய மறுக்கா பிடிச்சா இவரு வந்து தொலையட்டும்னுதான் சொன்னேன்...

Jey said...

/ Mrs.Menagasathia said...
பதிவு சூப்பர்...//

நன்றி அம்மனி, முதல் வருகைனு நினைக்கிறேன்...:)

என்னது நானு யாரா? said...

மாப்பு! ஹிஸ்ட்ரி அன்னா வரலாறு தானே! (வடிவேலு குரலில் படிக்கவும்)

என்னப்பா! ஹிஸ்ட்ரி வகுப்பு எடுத்திருக்க!

ஆனா நல்லா தான் சொல்லி இருக்கே மெசேஜ்! வருட்டா...

Jey said...

// harini said...
ரமேஷ்,terror தலைவலி மாத்திரை இருந்த தாயேன் ராத்திரி பகல் ன்னு எழுதி நைட் தூங்கவுடாம பண்ணிட்டானே///

குவார்ட்டர் அடிச்சா தானா தூக்கம் வரும்ய்யா ட்ரை பண்ணி பாரு....:)

Jey said...

என்னது நானு யாரா? said...
மாப்பு! ஹிஸ்ட்ரி அன்னா வரலாறு தானே! (வடிவேலு குரலில் படிக்கவும்)

என்னப்பா! ஹிஸ்ட்ரி வகுப்பு எடுத்திருக்க!

ஆனா நல்லா தான் சொல்லி இருக்கே மெசேஜ்! வருட்டா...///

ஹஹஹா..நல்லாதான் கமென்ஸ் போடுரீங்க...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/////// ஓட்டு போட்ராதையா... ஒருவேலை காங்ரஸ் ஆட்சிய மறுக்கா பிடிச்சா இவரு வந்து தொலையட்டும்னுதான் சொன்னேன்...//////

ஜென்மத்துக்கும் அந்த கூட்டத்துக்கு என் வோட்டு கிடையாது தல!!!! அப்புறம் 20,000 பேர் சாபத்தை என்னால தாங்க முடியாது:(

அருண் பிரசாத் said...

யோவ்... இந்தியானா பொறந்துட்டு இப்படி கேள்விலாம் கேக்கக்கூடாது.

1. கண்டுக்காம போகனும்

இல்லை

2. இப்படி கத்திட்டு வேலைய பாக்க போய்டனும்.

கத்தியாச்சு இல்ல, போ போய் வூட்டுகாரம்மா வர்றதுக்குள்ள சமைக்கிற வேலைய பாரு

Jey said...

//பனங்காட்டு நரி said...
/////// ஓட்டு போட்ராதையா... ஒருவேலை காங்ரஸ் ஆட்சிய மறுக்கா பிடிச்சா இவரு வந்து தொலையட்டும்னுதான் சொன்னேன்...//////

ஜென்மத்துக்கும் அந்த கூட்டத்துக்கு என் வோட்டு கிடையாது தல!!!! அப்புறம் 20,000 பேர் சாபத்தை என்னால தாங்க முடியாது:(///

அதுதான் என் கருத்தும் நரி....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன் .

Jey said...

//அருண் பிரசாத் said...
யோவ்... இந்தியானா பொறந்துட்டு இப்படி கேள்விலாம் கேக்கக்கூடாது.

1. கண்டுக்காம போகனும்

இல்லை

2. இப்படி கத்திட்டு வேலைய பாக்க போய்டனும்.

கத்தியாச்சு இல்ல, போ போய் வூட்டுகாரம்மா வர்றதுக்குள்ள சமைக்கிற வேலைய பாரு
///

வீட்ல அடி பலமோ கோவத்தை இங்க காட்ரே!!???.. சரி சரி விடு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தல முதல் பாரா படிச்சு முடிச்சிட்டேன். ரெண்டு நாள்ல படிச்சு முடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்...

சௌந்தர் said...

10. பி.வி.நரசிம்மராவ் - இவரு பிஎம் ஆனது ஒரு அரசியல் விபத்து - 70 வயசுல பிஎம் ஆயிருக்காரு. வாஅயே திறக்காம. உம்முனு 5 வரசத்த ஓட்டி கின்னஸ் சாதனைக்கி முயற்சி செஞ்சவரு.....///

இந்த சாதனையை தங்க பாலு முறியடித்து உள்ளார்

Jey said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரசித்தேன் .//

நன்றி சார் நீங்க நல்லா எழுதுரீங்க...

Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தல முதல் பாரா படிச்சு முடிச்சிட்டேன். ரெண்டு நாள்ல படிச்சு முடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்...//

எப்படியாவது படிச்சி மிடிச்சிரு போலீஷு, பாம்பு பிரியாணி வாங்கிதரேன்...

Jey said...

//சௌந்தர் said...
10. பி.வி.நரசிம்மராவ் - இவரு பிஎம் ஆனது ஒரு அரசியல் விபத்து - 70 வயசுல பிஎம் ஆயிருக்காரு. வாஅயே திறக்காம. உம்முனு 5 வரசத்த ஓட்டி கின்னஸ் சாதனைக்கி முயற்சி செஞ்சவரு.....///

இந்த சாதனையை தங்க பாலு முறியடித்து உள்ளார்//

அன்னை சோனிய அன்னை சோனியனு தினம் நாப்பது தடவை கோஷம் போடுராரேப்பா.. அதுக்காவது வாய் திரக்குறாருதானே...

அப்புறம் நான் லிஸ்ட் பண்ணது ஒன்லி பிஎம்’ஸ்.

சௌந்தர் said...

கத்தியாச்சு இல்ல, போ போய் வூட்டுகாரம்மா வர்றதுக்குள்ள சமைக்கிற வேலைய பாரு////

@@@அருண் இப்போதான் அருண் சமையல் முடித்துவிட்டு வந்தார்

சௌந்தர் said...

அப்புறம் நான் லிஸ்ட் பண்ணது ஒன்லி பிஎம்’ஸ்.///

@@@jeyஅது சரி தலைவரே ஆனா வாய் திறக்காம சாதனை செய்தால் அதை சொல்ல வேண்டாமா

Jey said...

// சௌந்தர் said...
கத்தியாச்சு இல்ல, போ போய் வூட்டுகாரம்மா வர்றதுக்குள்ள சமைக்கிற வேலைய பாரு////

@@@அருண் இப்போதான் அருண் சமையல் முடித்துவிட்டு வந்தார்//

செளந்தர் எங்களுக்கு பரவாயில்லை உனக்கு இருக்குடி.... நல்ல கும்முர அம்மனிகிட்டதா மாட்டுவே... தும் ததா..

சௌந்தர் said...

செளந்தர் எங்களுக்கு பரவாயில்லை உனக்கு இருக்குடி.... நல்ல கும்முர அம்மனிகிட்டதா மாட்டுவே... தும் ததா.////

நன்றி நன்றி நன்றி உங்கள் வாழ்த்துக்கு

Gayathri said...

ஹா ஹா என்ன சொல்ல...நாளைய இந்தியா இளைன்ஞர்கள் கையில் என்று சொல்வது உண்மைதான்..எப்படியும் இன்றைய இளைன்கர்கள் நாளைய முதியவர்கள் அல்லவா???

vinthaimanithan said...

பேசாம நீங்கலூம்ம்ம்ம் நானும் தேர்தல்ல நின்னுடலாமா?

Selvaraj said...

அய்யா! நம்ம தமிழக முதல்வரையும் இந்த பதிவில் சேர்த்திருக்கலாம். என்னுடையகட்டாய ஒய்வு அரசியல்வாதிகளுக்கு என்னும் பதிவையும் படியுங்கள்.

ஜில்தண்ணி said...

அடுத்த பிரதமரி jey வாழ்க வாழ்க :)

ஜில்தண்ணி said...

அச்சச்சோ இந்த டெர்ரரோட கும்மி அடிச்சி எனக்கும் தொத்திகிச்சி :)

Jey said...

Gayathri said...
ஹா ஹா என்ன சொல்ல...நாளைய இந்தியா இளைன்ஞர்கள் கையில் என்று சொல்வது உண்மைதான்..எப்படியும் இன்றைய இளைன்கர்கள் நாளைய முதியவர்கள் அல்லவா???///

முதியவர்களாயிட்டா அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டியதுதான்...வேறென்ன பண்ரது...

Jey said...

// விந்தைமனிதன் said...
பேசாம நீங்கலூம்ம்ம்ம் நானும் தேர்தல்ல நின்னுடலாமா?///

ஓகே டீல். எனக்கு நீங்க ஓட்டு போட்ருங்க , உங்களுக்கு நான் ஓட்டு போட்டுடுறேன். அது போக ஓட்டு போட தெரியாம மாத்தி அழுத்துன வகைல கொஞ்ச ஓட்டு தேறுனாலும் தேறும் என்ன சொல்றீங்க....:)

Jey said...

//Selvaraj said...
அய்யா! நம்ம தமிழக முதல்வரையும் இந்த பதிவில் சேர்த்திருக்கலாம். என்னுடையகட்டாய ஒய்வு அரசியல்வாதிகளுக்கு என்னும் பதிவையும் படியுங்கள்.//

அடுத்த ஒரு லிஸ்ட் எடுக்கனும்ணே நம்ம தமிழ்நால்ல்டு மூத்த முதல்வர்கள்னு ஒரு பதிவ தேத்த வேண்டியதுதான்....

ஆனா இவனுக ஆள் அனுப்பி அடிப்பானுகளாமே??? அப்படிங்களா?.

Jey said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
அடுத்த பிரதமரி jey வாழ்க வாழ்க :)//

நான் இன்னும் வயசுக்கு( 35 வயசாகனுமாம் எம்பி தெர்தல்ல நிக்க...) வரலை... இப்பதா 25 வயசு முடிஞ்சிருக்கு....:)

ஜில்தண்ணி said...

@@jey

/// நான் இன்னும் வயசுக்கு( 35 வயசாகனுமாம் எம்பி தெர்தல்ல நிக்க...) வரலை... இப்பதா 25 வயசு முடிஞ்சிருக்கு.... :) ///

என்னது வயசுக்கு வரலயாஆஆ ???

சரி பிரதமர் ஆகலன்னா பரவால்ல
அதான் பிரதர் ஆயிட்டீங்கல
ஒரு எழுத்து தானே அட்ஜெஸ்ட் பண்ணிகிங்க பிரதர் :)

வாழ்க பிரதர் jey :)

அலைகள் பாலா said...

அறுபது வருசத்துலயே இவ்வளவு கேவலமா போய்டோமே. நமக்கு அடுத்த தலைமுறையை நெனச்சா பாவமா இருக்கு.

Chitra said...

டிஸ்கி : ராகுல் காந்திக்கி 25 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னேரத்துக்கு அவர் வாரிசுக்கு 15 வயசாகும்....., சீக்கிரமே இந்தியாவுக்கு இளைய பிரதமர் கிடச்சிருப்பார்....., யார் கண்ணு பட்டதோ லேட்டாயிகிட்டே போகுது..., யாராவது எடுத்து சொல்லக்கூடாதாப்பா...என்ன நீங்க...

....... சே.... அறுபது வருசத்துல "பொறுப்பே" இல்லாமல் போய்ட்டாங்க..... நீங்களாவது, எழுதப்படிக்க தெரிஞ்சதுமே ப்லாக்ல வந்து இந்த யோசனையை சொல்லியிருக்கலாம்ல.....

ஜெய்லானி said...

//நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி. இங்கு தமிழில் உலகத்தரமான, கதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள் மற்றும் நீங்கள் எதிபார்க்கும் விசயங்கள் அனைத்தும் கொட்டி கிடக்கின்றன அவற்றைப் படித்து இன்புறுமாரும்,பயன்பெறுமாரும் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

படிச்சி முடிச்சி உங்களுக்கு ஏது கோவம் வந்தா(வரும்) ரோசனையே பண்ணாம ”இடுக்கன் வருங்கால் நகுக” மாதிரி சிரிச்சிகிட்டே போயிருங்க....//


யோவ் பதிவு எங்கைய்யா இருக்கு..சொல்லு...ஹி..ஹி..

velji said...

எத்தனை காலம் இப்படி போகும்...?

நல்ல பதிவு.

Chennai boy said...

ஆய்வறிக்கை நல்லாவே இருக்கு. 50க்கு கீழே உள்ளவங்களுக்கு ஓட்டு போடு சொல்றீங்க ஒரு வேளை நீங்க தேர்தலில் நிக்க போறீங்களா?

சில விசயங்கள் கமெண்ட் அடிக்க தோணியது.
\\அவங்க வீட்டுல இருக்குற 10க்கும் மேற்பட்ட குடும்பத்து ஆட்களும் பதவில இருக்குறாமாதிரிதா அராஜகம் செய்ஞ்சிகிட்டு இருக்காக...\\

ஒரு குடும்பம் இருந்தா பத்து பேரு ஆட்டம் போடுறாங்க. சில தலைவர்களுக்கு 2,3 குடும்பம் இருக்கிறதனால, அந்த 2,3
குடும்பத்தின் மொத்த கும்பலின் அராஜம் தாங்க முடியலயே அத என்னன்னு சொல்ல.

பொறவு நரசிம்பராவ் ஆட்சி காலத்துல நடந்த மிக மிக்கியமான கோடுமைய சொல்லலையே ஏன். அதாங்க இப்ப உடைக்க போறாங்க , இப்ப உடைக்க போறாங்கன்னு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து கொடுத்து உடைக்கவச்சாரே அந்த சாதனைய பத்தி ஒண்ணும் கண்டுக்கலயே நீங்கள். அதனால நாட்டில் ரத்த ஆறுகளை ஓட விட்டு வேடிக்கை பார்த்த மகா புண்ணியவான். பின்னாளில் அந்த காரணட்த்தாலே காங்கிரஸ் கட்சியிலுருந்து தூக்கியடிக்கப்பட்டார். காங்கிரஸுக்குள் ஒரு காவி.

ப.கந்தசாமி said...

நல்ல சூடு.

Jey said...

//அலைகள் பாலா said...
அறுபது வருசத்துலயே இவ்வளவு கேவலமா போய்டோமே. நமக்கு அடுத்த தலைமுறையை நெனச்சா பாவமா இருக்கு.//

நம்மளவுக்கு அடுத்த தலைமுறைக்கி பொறுமை இருக்கும்னு தோனலை, அதனால ஒரு விடிவு வந்தாலும் வரும் பாலா...

Jey said...

//ஜெய்லானி said...
//நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி. இங்கு தமிழில் உலகத்தரமான, கதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள் மற்றும் நீங்கள் எதிபார்க்கும் விசயங்கள் அனைத்தும் கொட்டி கிடக்கின்றன அவற்றைப் படித்து இன்புறுமாரும்,பயன்பெறுமாரும் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

படிச்சி முடிச்சி உங்களுக்கு ஏது கோவம் வந்தா(வரும்) ரோசனையே பண்ணாம ”இடுக்கன் வருங்கால் நகுக” மாதிரி சிரிச்சிகிட்டே போயிருங்க....//


யோவ் பதிவு எங்கைய்யா இருக்கு..சொல்லு...ஹி..ஹி..//

அடங்கொய்யாலே... கடைசிலே பதிவோட தலைப்பை கூட படிக்காம ஓடிட்டியா...., சரி விடு படிச்சிருப்பே...
அரசியல்னு நினைச்சி நெக்கா பெருக்கு ஒரு கமென்ஸ் போட்டு ஓடிட்டே....

Jey said...

///சீனி said...
ஆய்வறிக்கை நல்லாவே இருக்கு. 50க்கு கீழே உள்ளவங்களுக்கு ஓட்டு போடு சொல்றீங்க ஒரு வேளை நீங்க தேர்தலில் நிக்க போறீங்களா?

சில விசயங்கள் கமெண்ட் அடிக்க தோணியது.//

சார், நீங்க திட்டி கூட கமென்ஸ் போடலாம், இங்க கமென்ஸ் மாடுரேஷன் கிடையாது..., இது என்னோட பார்வை சார், இதில எல்லாருக்கும் சம்மதம் இருக்காது...., இந்திய மக்கள் தொகையோட சராசரி வயசு 26, ஆனா பாருங்க மினிஸ்ட்ரில இருக்குறவங்களுக்கு 66, 3 மடங்கு வயசு வித்தியாசம் இருக்கு, புரிதல்ல தலைமுறை வித்தியாசம் இருக்கு... அது ஆரோக்யமா இருக்கதுன்றது என் பார்வை சார்.

மத்தபடி தேர்தல் நிக்கப் போரேன்னானு கேட்ட் கிண்டல் பண்ணாதீக சாரே.


////ஒரு குடும்பம் இருந்தா பத்து பேரு ஆட்டம் போடுறாங்க. சில தலைவர்களுக்கு 2,3 குடும்பம் இருக்கிறதனால, அந்த 2,3
குடும்பத்தின் மொத்த கும்பலின் அராஜம் தாங்க முடியலயே அத என்னன்னு சொல்ல. ////

ஹஹஹா, அது ஊர் உலகத்துக்கே ரொம்ப நல்லா தெரியுமே சார்,விட்டுப் போனதை நீங்க சொல்லிட்டீக...நன்றி.

Jey said...

// DrPKandaswamyPhD said...
நல்ல சூடு.//

வாங்க அய்யா..., இங்க நீங்க வந்து , இந்த பதிவுக்கு ஆதரவு தருவது ஹைலைட்..., நான் சரியாதான் சொல்லிருக்கேன்னு ஒரு ஆறுதல்..

நன்றி அய்யா.

Jey said...

//velji said...
எத்தனை காலம் இப்படி போகும்...?

நல்ல பதிவு.//

நன்றி வேல்.

Anonymous said...

இவங்களை பத்தி பெரியா ஆராய்ச்சியே பண்ணிட்டே போல ..என்ன இருந்தாலும் உங்க ஊரு விசேஷம் எழுதற மாதிரி இல்லை இந்த பதிவு ...நன்றி

செல்வா said...

இந்தியாவின் பிரதமர்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
ஆனா உங்களை பாராட்டியே ஆகணும் .. ஏன்னா உண்மையாவே நல்லா எழுதிருக்கீங்க.. படிக்க ஆரம்பிக்கும் போதே பெரிய பதிவாத்தான் இருக்கும் அப்படின்னு நினைச்சேன்.. இருந்தாலும் படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் நல்ல விஷயம் தானே அப்படின்னு சந்தோசமா இருக்கு ..

சசிகுமார் said...

அடி தூள் கிளப்பிடீங்க சார் வாழ்த்துக்கள் மேலும் எதிர் பார்க்கிறோம்.

Jey said...

sandhya said...
இவங்களை பத்தி பெரியா ஆராய்ச்சியே பண்ணிட்டே போல ..என்ன இருந்தாலும் உங்க ஊரு விசேஷம் எழுதற மாதிரி இல்லை இந்த பதிவு ...நன்றி///

Jey said...

// ப.செல்வக்குமார் said...//

நன்றி திரு கோமாளி செல்வா அவர்களே...:)

Jey said...

//சசிகுமார் said...
அடி தூள் கிளப்பிடீங்க சார் வாழ்த்துக்கள் மேலும் எதிர் பார்க்கிறோம்.//

நன்றி சசி..

Riyas said...

soooper post jey...

Jey said...

///Riyas said...
soooper post jey...///
nanri riyas

அஹோரி said...

யோவ் புரியாத ஆளு ,
இந்த ஊர் இளைஜர் அணி தலீவருக்கு வயசு 58 . இந்த கூத்துக்கு என்ன சொல்லறீங்க?

Jey said...

//அஹோரி said...
யோவ் புரியாத ஆளு ,
இந்த ஊர் இளைஜர் அணி தலீவருக்கு வயசு 58 . இந்த கூத்துக்கு என்ன சொல்லறீங்க?//

நாமெல்லாம் இன.வானா-னுசொல்றேன் அண்ணாச்சி...:)

Jey said...

//அஹோரி said...//

நீங்க எழுதுனா சூப்பரா எழுதுவீங்கன்னு தெரியுது... சட்டு புட்டுனு ஒரு பதிவு எழுதிப் போட்டுட்டு....தகவல் சொல்லுங்க....வந்து படிக்கிறோம்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

மூத்தோர் சொல்லும் முதி நெல்லிகாயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்னு சின்னதுலையே சொல்லி குடுத்துட்டாங்களே... அப்படியே நானும் நம்பிட்டு ஓட்டு போடறோம் போல இருக்கு... ஹும்... நல்ல (சீரியஸ் - அப்படி தானே சொன்னீங்க கரெக்ட்ஆ?) பதிவு

Jey said...

// அப்பாவி தங்கமணி said...
மூத்தோர் சொல்லும் முதி நெல்லிகாயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்னு சின்னதுலையே சொல்லி குடுத்துட்டாங்களே... அப்படியே நானும் நம்பிட்டு ஓட்டு போடறோம் போல இருக்கு... ஹும்... நல்ல (சீரியஸ் - அப்படி தானே சொன்னீங்க கரெக்ட்ஆ?) பதிவு //

மூத்தவங்க அறிவுறைய, கேட்டுக்களாம், பவர்ல இருந்துகிட்டு செயல்படுத்துறது இளைஞர்களா இருந்தா நல்லாருக்குமில்ல....:)

நன்றி அம்மனி.

அஹோரி said...

//நீங்க எழுதுனா சூப்பரா எழுதுவீங்கன்னு தெரியுது... சட்டு புட்டுனு ஒரு பதிவு எழுதிப் போட்டுட்டு....தகவல் சொல்லுங்க....வந்து படிக்கிறோம்... //

அண்ணாச்சி ...
ஒரே ஒரு பதிவ போட்டுட்டு நண்பர்களிடம் வாங்கி கட்டி கொண்டது தான் மிச்சம். எழுதணும் ன்னு இருந்த ஆசையோட ஆணி வேற புடுங்கி ஆசிட் அடிச்சிடாயிங்க. ஊக்க படுத்தும் உங்கள் வார்த்தைக்கு நன்றி ( ஆமா ... நக்கல் பண்ணத நான் சீரியஸா எடுத்து கிட்டனோ ? )

Jey said...

//அஹோரி said...
//நீங்க எழுதுனா சூப்பரா எழுதுவீங்கன்னு தெரியுது... சட்டு புட்டுனு ஒரு பதிவு எழுதிப் போட்டுட்டு....தகவல் சொல்லுங்க....வந்து படிக்கிறோம்... //

அண்ணாச்சி ...
ஒரே ஒரு பதிவ போட்டுட்டு நண்பர்களிடம் வாங்கி கட்டி கொண்டது தான் மிச்சம். எழுதணும் ன்னு இருந்த ஆசையோட ஆணி வேற புடுங்கி ஆசிட் அடிச்சிடாயிங்க. ஊக்க படுத்தும் உங்கள் வார்த்தைக்கு நன்றி ( ஆமா ... நக்கல் பண்ணத நான் சீரியஸா எடுத்து கிட்டனோ ? )//

நக்கல் இல்லை அண்ணாச்சி... எழுதுங்க..., பயபுள்ளக பாசத்துல கும்மிருப்பாங்க...., தைரியமா எழுதுங்க...:)

ஜெய்லானி said...

//அரசியல்னு நினைச்சி நெக்கா பெருக்கு ஒரு கமென்ஸ் போட்டு ஓடிட்டே..//

எப்பத்திலிருந்துய்யா புத்திசாலியா மாறினே நீ...ஹா..ஹ..

LinkWithin

Related Posts with Thumbnails