June 25, 2010

கொஞ்சம் திரும்பி பாருங்கள்

     அது ஒரு பொருளாதர ரீதியாக பின்தங்கிய ஊர். அங்கு மனித நேயமிக்க தச்சு வேலை தொழிலாளி, அதிகாலை அடுத்த ஊருக்கு வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் சராசரி வழ்க்கை. அந்த ஊரில் இறந்தவர்களை மரத்தாலான சவப்பெட்டியில் வைத்து புதைக்கும் பழக்கம். ஒவ்வொரு இறப்பின் போதும் இறந்தவரை சார்ந்த குடும்பம், உள்ளூரில் சவப்பெட்டி கிடைக்காமல் அடுத்த ஊர் சென்று அதிக விலை கொடுத்து வாங்கி வரவேண்டிய நிலை, இதனால் பொருளாதார பற்றாக்குறை மற்றும் அலைச்சல் சேர்ந்து, உயிர் இழப்பின் துக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. 

       அந்த தச்சு தொழிலாளிக்கு, அந்த மக்களின் துயரத்தை போக்க, இறப்பு ஏற்படுகிற நாள் மட்டும் வேலைக்கு விடுப்பு கொடுத்து விட்டு, அடக்க விலையில் சவபெட்டிசெய்து உதவி செய்யும் எண்ணம் எழுகிறது. அதை செயல் படுத்தும் போது சக மனிதர்களுக்கு உதவியதில் உள்ளூர ஆனந்தம். நாட்கள் நகர்கின்றன, இடையில் சில காலம் இறப்பின் எண்ணிக்கை கூட , ஏற்கனவே செய்து வந்த வேலையை விட்டு விட்டு சவப்பெட்டி செய்வதை முழு நேர தொழிலாக தொடர்கிறார். தன் வாழ்க்கை தேவைக்காக அடக்கவிலையுடன் சிறிதளவு லாபம் கூட்டி விற்கும் நிலை. ஊரில் உள்ள மக்களுக்கு தச்சரின் மேல் அன்பும் பாசமும் அதிகரிக்கிறது, தச்சனுக்கும் தான் மக்களுக்கு உதவியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

   சிறிது காலம் செல்கிறது ஊரில் இறப்புகள் குறைகிறது. தச்சனுக்கு வருமானம் குறைகிறது. ஒரு காலை நேரம் தச்சன், வீட்டு திண்ணையில் உட்கர்ந்து கொண்டு யாராவது சவபெட்டி வாங்க வருகிறார்களா என்று எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான்.

   திடீரென்று தான் எதை எதிபார்த்து கத்திருக்கிரோம் என்ற நினைப்பு அவனை துனுக்குற வைக்கிறது, கண்ணில் தாரைதாரையாக நீர்.


  தச்சன், தான் சக மனிதனின்  துயரததை போக்க மேற்கொண்ட ஒரு செயல், தன்னையும் அறியாமல் யாருக்காவது மரணம் ஏற்பட்டு, சவப்பெட்டி வாங்க வரமாட்டார்களா? என்ற நிலையில் இருப்பதை எண்ணி வருந்துகிறான்.

   மீண்டும் அடுத்த ஊர் வேலை, விடுமுறை நட்களில் சேவை, சேர்த்த பொருளின் மீதியில் அடுத்தவருக்கு உதவி, இது தச்சனின் புதிய வாழ்க்கை.

   பின் குறிப்பு : சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், மெரினா கடற்கரையில் சுண்டல் சாப்பிட்டு (உபயம் - சுண்டல் விற்கும் சிறுவன் ) அந்த பேப்பரில் படித்த கதை, எழுதியவர் பெயர்/ எந்த பத்திரிக்கை எனக்கு நினைவில்லை.

   அந்த எழுத்து நடையின் வீச்சு மற்றும் ஆழம் அதிகம். என் நினைவில் நின்ற கருவை வைத்து இங்கு பதிவிடுகிறேன்.

இந்த கதை சொல்லும் நீதி :

இன்று பல்வேறு துறைகள்  (தனியார், அரசுத் துறைகள், தன்னார்வ அமைப்புகள் etc…)  எந்த நோக்கத்த்ற்காக அது தோற்றுவிக்க பட்டதோ , அந்த அடிப்படை அடிப்படை நோக்கத்தில்/கொள்கையில்/செயல்பாடுகளிலிருந்து வெகுதூரத்தில் வந்து நிற்கின்றன, ஏன் இன்னும் சொல்லப்போனால் அதன் நோக்கத்திற்கு எதிர்மறையாக கூட செயல்பட்டுகொண்டிருக்கின்றன.

என் கன்னோட்டத்தில் சில அமைப்புகள், தனியார்  மற்றும் அரசு துறைகள் பற்றி சுருக்கமாக ;

  1. அரசியல்வாதிகள் : தன்னலம் இல்லாமல் மக்களை கல்வி, பொருளாதரம் ,சுகதாரம், வழிகாட்டுதல் என்று சமூக மேம்பாட்டுக்காக செயல்பட வேண்டியவர்கள்,  அதற்கு நேரெதிராக சுயநலமாகவும், சமூக அக்கறை இன்றியும் செயல்பட்டுகொண்ட் இருக்கிறார்கள்.(இவர்கள் தெரிந்தே தவறு செய்து கொண்டிருக்கிறார்கள் )
  2. காவல்துறை : சுருக்கமாக சொன்னால் மக்களுக்கு உற்ற நண்பனா இருந்து, சமூகத்தில்  நிலவும், பல்வேறுதரப்பட்ட குற்றங்களை குறைத்து அமைதியை ஏற்படுத்துவது அதன் அடிப்படை நோக்கம். ஆனால், இன்று பெரும்பாலும் அதிகாரத்தை பயன்படடுத்தி எந்தெந்த வழிகளில் பணம் பன்னுவது என்ற ரீதியில் தான் செயல்படுகிறது.

3.  வங்கிகள் : இவைகளின் செயல்பாடும் பல சமயங்களில் அதன் நோக்கத்திலிருந்து மாறுபட்டே செயல்படுகிறது. சமீபத்தில் சக பதிவர் திரு. திரவிய நடராஜன் சார் அவர்கள் கூட, ஒருகுறிப்பிட்ட சேவை குறைபடு பற்றி கோபத்தோடு பதிவிட்டிருந்தார்கள்

இதுமாதிரி, வருமானவரித்துறை, கல்வி, சுகாதாரத்துறை, சட்டம், நீதிதுறை (சமீப காலங்களில் பல சர்ச்சைகள்) etc…  என்று தனிதனியாக பதிவிடலாம்.

என் மனதுக்குள் தோன்றுவதை முழுமையாக எழுத்துக்களில் வெளிப்படுத்தும் திறமை என்னிடம் இல்லை என்பதை  எழுத ஆரம்பித்தவுடனே தெரிந்துகொண்டேன்.

இது எனது முதல் பதிவு, எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் இருப்பின் பொறுத்துக்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்

93 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப நல்ல பதிவு. செதுக்க செதுக்கத்தான் சிற்பமாகும். அது போல எழுத எழுத உங்கள் எழுத்துகள் அழகாகும். முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். பின்ன எங்களுக்கும் கலாய்க்க புது ஆள் வேணாமா?

111 said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப நல்ல பதிவு. செதுக்க செதுக்கத்தான் சிற்பமாகும். அது போல எழுத எழுத உங்கள் எழுத்துகள் அழகாகும். முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். பின்ன எங்களுக்கும் கலாய்க்க புது ஆள் வேணாமா?///

உற்சாகப்படுதியதற்கு நன்றி. டவுசரை கிழிக்கும்போது வலிக்காம கிழிக்குமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

வால்பையன் said...

//
1. அரசியல்வாதிகள் : தன்னலம் இல்லாமல் மக்களை கல்வி, பொருளாதரம் ,சுகதாரம், வழிகாட்டுதல் என்று சமூக மேம்பாட்டுக்காக செயல்பட வேண்டியவர்கள், அதற்கு நேரெதிராக சுயநலமாகவும், சமூக அக்கறை இன்றியும் செயல்பட்டுகொண்ட் இருக்கிறார்கள்.(இவர்கள் தெரிந்தே தவறு செய்து கொண்டிருக்கிறார்கள் )//


இவனுங்க திருந்தினா போதும் தல, எல்லாம் சரியா நடக்கும், இத்தனைக்கும் இவர்கள் மக்களால் மக்கலுக்காக தேர்தெடுக்கப்பட்டவர்கள், ஆனால் பாருங்கள் துரோகம் ஒன்றே அவர்களது தொழிலாக இருக்கிறது!

Jey said...

ஆமாம், வால், இதை நீங்கள் எழுதியிருந்தால், இன்னும் அழுத்தமாகவும், ஆக்ரோசமாகவும் வெளிப்பட்டிருக்கும், தப்பிச்சனுக தல.
வந்து கருத்து சொன்னதற்கு நன்றி வால்.

Anonymous said...

தம்பி.
உங்கள் பதிவு நன்றாகவே உல்ளது. எழுத்தில் கவ்ர்ச்சி அல்ல்து எதுகைமோனை தேவையில்லை. நீங்க்ள் நினைப்பதை எழுத வேண்டும் அதை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டூம் அவ்வளவுதான்.நான் உங்களை பின் தொடர கிளிக் செய்துவிட்டேன். வாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்லாத்தானே இருக்கு..அப்புறம் என்ன தயக்கம்?...

வாழ்த்துக்கள் ஜெ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Word verification யை எடுத்து விடவும்..ஒவ்வொருமுறை கமென்ஸ்ப் போடும்போது கண்ணைக் கட்டுது...

Jey said...

பட்டாபட்டி.. said...
நல்லாத்தானே இருக்கு..அப்புறம் என்ன தயக்கம்?...

வாழ்த்துக்கள் ஜெ...//

அப்ப நான் நெசமாவே பிரபல பதிவர் ஆயிட்டேன பட்டா?.( சும்மா கண்டுக்காதே தல).

நான் தமில் பிளாக்குல வந்து படிச்ச முதல் பதிவு உன்னோடது பட்டா, 2 மாசத்துக்கு முன்னாடி வரயிலும் இப்படி ஒரு உலகம் இருக்குனு தெயாத போச்சி தல.

Jey said...

திரவிய நடராஜன் said...
தம்பி.
உங்கள் பதிவு நன்றாகவே உல்ளது. எழுத்தில் கவ்ர்ச்சி அல்ல்து எதுகைமோனை தேவையில்லை. நீங்க்ள் நினைப்பதை எழுத வேண்டும் அதை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டூம் அவ்வளவுதான்.நான் உங்களை பின் தொடர கிளிக் செய்துவிட்டேன். வாழ்த்துக்கள்//

உற்சாகபடித்தியதற்கு நன்றி சார்

Jey said...

பட்டாபட்டி.. said...
Word verification யை எடுத்து விடவும்..ஒவ்வொருமுறை கமென்ஸ்ப் போடும்போது கண்ணைக் கட்டுது...///

எப்படி அத எடுத்து விடுரதுன்னுதான் , தடவிக்கிட்டு இருக்கேன்( புதுசுதானே), எப்படியாவது கண்டுபிடிச்சி தூக்கிடுறேன் சார்.

முத்து said...

எடுத்தவுடன் சமுக அக்கறை சார்த்த பதிவு வாழ்த்துக்கள் jey

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said..
பின்ன எங்களுக்கும் கலாய்க்க புது ஆள் வேணாமா? /////


ரமேஷ் எப்படி இப்படி நான் நினைச்சதை கரெக்டா சொல்லுரிங்க

Jey said...

முத்து, ரமேஷ், பட்டா, பரா,மங்குனிக்கு, இந்த பெயர்களை தான் எனது அடுத்த பதிவில் போடவிருக்கும் பத்து ஜோக்ஸ்ல பயன்படுத்தியிருக்கேன்.

Jey said...

முத்து said...
எடுத்தவுடன் சமுக அக்கறை சார்த்த பதிவு வாழ்த்துக்கள் jey//

அடுத்து ஒரு ஜோக்ஸ் பதிவு.

Jey said...

word verification-ஐ, எப்படி தூக்குரதுன்னு சொல்லிக்கொடுத்த முத்துவிற்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

word verification-ஐ, எப்படி தூக்குரதுன்னு சொல்லிக்கொடுத்த முத்துவிற்கு நன்றி . கமன்ட் போடுறதுக்குள்ள நாக்கு தள்ளுது...

பனித்துளி சங்கர் said...

//
1. அரசியல்வாதிகள் : தன்னலம் இல்லாமல் மக்களை கல்வி, பொருளாதரம் ,சுகதாரம், வழிகாட்டுதல் என்று சமூக மேம்பாட்டுக்காக செயல்பட வேண்டியவர்கள், அதற்கு நேரெதிராக சுயநலமாகவும், சமூக அக்கறை இன்றியும் செயல்பட்டுகொண்ட் இருக்கிறார்கள்.(இவர்கள் தெரிந்தே தவறு செய்து கொண்டிருக்கிறார்கள் )//

ஆஹா முதல் பதிவெ சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு அருமை . அதிகாரம் சீர்திருத்தாத பல துறைகளை நமது எழுத்துக்கள் சீர்திருத்தட்டும் . பகிர்வுக்கு நன்றி !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Jey said...

முத்து, ரமேஷ், பட்டா, பரா,மங்குனிக்கு, இந்த பெயர்களை தான் எனது அடுத்த பதிவில் போடவிருக்கும் பத்து ஜோக்ஸ்ல பயன்படுத்தியிருக்கேன்.
//

இத எதுக்கு கேட்டுக்கிட்டு...
போட்டுத் தள்ளுங்க..

( ஆனா.. மொக்கை..மொக்கையா ஒரே மாறி எழுதினா..முத வெட்டு என்னொடதான் இருக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..இது மனசுல ஓரமா வெச்சுக்குங்க பிரதர்...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

( முக்கியமா இதுல உள்குத்து எதுவுமில்ல பிரதர்..)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போட்டோவுல கழுத்துல கோவணம் கட்டிட்டு உக்கார்ந்திருக்காரே அவர் யாருங்க?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அவருதான் ஜே..

(பட்டாபட்டி கழண்டு விழாம இருக்க..மேலிருந்து கயிறு கட்டியிருக்காரு போல..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முதல் பதிவு போட்டதும், படிச்சுப்பார்த்து நல்லா இருந்தா ப்ளோயர் ஆவேனு சொல்லியிருந்தேன்..

ஞாபகம் இருக்கா ஜெய்?

Jey said...

( ஆனா.. மொக்கை..மொக்கையா ஒரே மாறி எழுதினா..முத வெட்டு என்னொடதான் இருக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..இது மனசுல ஓரமா வெச்சுக்குங்க பிரதர்...)

ஒன்னுக்குள்ள் ஒன்னா பழகிட்டோம், வலிக்காம வெட்டு தல.

Jey said...

பட்டாபட்டி.. said...
முதல் பதிவு போட்டதும், படிச்சுப்பார்த்து நல்லா இருந்தா ப்ளோயர் ஆவேனு சொல்லியிருந்தேன்..

ஞாபகம் இருக்கா ஜெய்?//

அப்ப நல்லாத்தான் எழுதியிக்கேனா?. நாமவாட்டுக்கு பதிவுல நெறய கோபபட்டா, வீட்டுக்கு லாரி ஏதவது அனுப்பிறுவானுகளா?...
ஏன் கேக்குறேனா, எனக்கு ரொம்ப பயந்த சுபாவம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்ப..கதை..கவிதை..ஏன் பொனவு இது மாறி எழுத வேண்டியதுதான்..

Jey said...

//பட்டாபட்டி.. said...
அப்ப..கதை..கவிதை..ஏன் பொனவு இது மாறி எழுத வேண்டியதுதான்..//

அதுக்கெல்லாம் இன்னும் அனுபவப்படனும் தல., இந்த கவுஜன எனக்கு ரொம்ப தூரம் தல, எப்படி எழுதுராகனே தெரிய மாட்டேங்குது?.
( இத்தனைக்கும் ஒரு வருஷம் நம்ம சுஜாதா சாருக்கு, குட் மார்னிங் , குட் ஈவினிங் சொல்லிருக்கேன் , ஆனாலும் ஒன்னும் முடியலையே)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஏன் கேக்குறேனா, எனக்கு ரொம்ப பயந்த சுபாவம்.//
ரொம்ப பயந்த சுபாவம் அப்டின்னா நீங்க எப்படிய்யா பட்டா வோட பதிவெல்லாம் தைரியமா படிக்கிறீங்க..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்ப என்னொட பதிவுல நான் எழுதின கவிதைய பார்த்து பழகிக்க பிரதர்...

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போட்டோவுல கழுத்துல கோவணம் கட்டிட்டு உக்கார்ந்திருக்காரே அவர் யாருங்க?//


பட்டாபட்டி.. said...
அவருதான் ஜே..

(பட்டாபட்டி கழண்டு விழாம இருக்க..மேலிருந்து கயிறு கட்டியிருக்காரு போல..)||||

ஏம்ப்பா இந்த கொலைவெறி?. இப்பதான் மொத [அதிவ போட்டுருக்கேன், அதுக்குள்ள தொங்கவிட ஐடியா பன்றீங்களே, இது ஞாயமா?. முத்து வந்து காப்பாத்துப்பா.

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஏன் கேக்குறேனா, எனக்கு ரொம்ப பயந்த சுபாவம்.//
ரொம்ப பயந்த சுபாவம் அப்டின்னா நீங்க எப்படிய்யா பட்டா வோட பதிவெல்லாம் தைரியமா படிக்கிறீங்க..//

அதெல்லாம் எட்ட நின்னுதான் படிச்சிட்டு இருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இத்தனைக்கும் ஒரு வருஷம் நம்ம சுஜாதா சாருக்கு, குட் மார்னிங் , குட் ஈவினிங் சொல்லிருக்கேன் , ஆனாலும் ஒன்னும் முடியலையே//

நாய்க்கு பேரு வச்சியே அதுக்கு சோறு வச்சியா அப்டிங்கிற மாதிரி இருக்குய்யா உங்க கதை. சுஜாதாவுக்கு வணக்கம் வச்சியே. அவர்கிட்ட நல்லா எழுதுறது எப்படின்னு கேட்டு வச்சிருக்கலாம்ல..

Jey said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...


ஆஹா முதல் பதிவெ சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு அருமை . அதிகாரம் சீர்திருத்தாத பல துறைகளை நமது எழுத்துக்கள் சீர்திருத்தட்டும் . பகிர்வுக்கு நன்றி !//

ஏதோ நம்ம மனக்குறைய துப்பிட்டு போறதுக்கு ஒரு இடம் கெடச்சிருக்கு, மத்தபடி நம்ம எழுதி இவனுக திருந்துவாங்கன்றீங்க?..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாய்க்கு பேரு வச்சியே அதுக்கு சோறு வச்சியா அப்டிங்கிற மாதிரி இருக்குய்யா உங்க கதை. சுஜாதாவுக்கு வணக்கம் வச்சியே. அவர்கிட்ட நல்லா எழுதுறது எப்படின்னு கேட்டு வச்சிருக்கலாம்ல//


யோவ்.. ரமேஸ்..ரொம்ப நக்கலையா உமக்கு..
முதல் பதிவ போட்டிருக்காரு..

பாவம் ..விட்டு பிடிக்கலாம்....

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இத்தனைக்கும் ஒரு வருஷம் நம்ம சுஜாதா சாருக்கு, குட் மார்னிங் , குட் ஈவினிங் சொல்லிருக்கேன் , ஆனாலும் ஒன்னும் முடியலையே//

நாய்க்கு பேரு வச்சியே அதுக்கு சோறு வச்சியா அப்டிங்கிற மாதிரி இருக்குய்யா உங்க கதை. சுஜாதாவுக்கு வணக்கம் வச்சியே. அவர்கிட்ட நல்லா எழுதுறது எப்படின்னு கேட்டு வச்சிருக்கலாம்ல..////

அப்படி நான் கேடிருந்து அவரும் என் மண்டைல ஏத்துரதுக்கு ம்யற்ச்சி செஞ்சிருந்தாருன்னா, டென்ஷனாகி ஒரு வருஷத்துக்கு முனாடி போயிருப்பரு, அதான், வணக்கத்த மட்டும் வச்சிட்டு பொது சேவ செஞ்சிட்டென்)

Jey said...

நம்ம ரேஞ்சுக்கு பட்டாபட்டிதான் சரி.( தக்காளி பயப்படாதயா, நல்லா சொல்லிதந்தா சீக்கிரம் டவுசர மாட்ட பழகிக்குவேன்)

மங்குனி அமைச்சர் said...

ஜெய் , நல்லாருக்கு , எதுக்கும் தயங்காதே

ஜெய்லானி said...

முதல் பதிவு என்பதால் ( போன பதிவு நீ அனா, ஆவன்னா எழுதி கத்துகிட்டதால அது பதிவில் சேர்த்தி இல்ல ) அமைதியா போகிறேன். அடுத்த அடுத்த பதிவுகளில் வந்து கலக்குறேன்.

பதிவு சூ....சூ...ச்சே..சூ...சூ...சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அப்ப என்னொட பதிவுல நான் எழுதின கவிதைய பார்த்து பழகிக்க பிரதர்... //


ஏனடா எடுத்த உடனே சூசைடுக்கு டிரைபண்ண சொல்ல பட்டா ????

மங்குனி அமைச்சர் said...

Jey said...

( ஆனா.. மொக்கை..மொக்கையா ஒரே மாறி எழுதினா..முத வெட்டு என்னொடதான் இருக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..இது மனசுல ஓரமா வெச்சுக்குங்க பிரதர்...)

ஒன்னுக்குள்ள் ஒன்னா பழகிட்டோம், வலிக்காம வெட்டு தல. ///


வலிக்காமலா ??? அத கதையெல்லாம் இங்க கிடையாதுடி , நரபளிதான் பாத்துக்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போட்டோவுல கழுத்துல கோவணம் கட்டிட்டு உக்கார்ந்திருக்காரே அவர் யாருங்க? ///


ரமேசு அது ஒன்னும் இல்ல , ஒரு சேபிடிக்கு ஸ்பேர் கோமணம்தான் அது

மங்குனி அமைச்சர் said...

என்னங்கடா கட காலியா இருக்கு , கட உணர எங்க , முத்த நாளே சரக்கடிக்க போயிட்டானா ??
(யப்பா தனியா இருக்க பயமா கிடக்கு )

Jey said...

வலிக்காமலா ??? அத கதையெல்லாம் இங்க கிடையாதுடி , நரபளிதான் பாத்துக்க//

மங்குனி, நான் உன் பக்கத்து ஊருயா, சலுகை காட்ட கூடாதா?

Jey said...

ஜெய்லானி said...
முதல் பதிவு என்பதால் ( போன பதிவு நீ அனா, ஆவன்னா எழுதி கத்துகிட்டதால அது பதிவில் சேர்த்தி இல்ல ) அமைதியா போகிறேன். அடுத்த அடுத்த பதிவுகளில் வந்து கலக்குறேன்.

பதிவு சூ....சூ...ச்சே..சூ...சூ...சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

வலிக்காமலா ??? அத கதையெல்லாம் இங்க கிடையாதுடி , நரபளிதான் பாத்துக்க//

மங்குனி, நான் உன் பக்கத்து ஊருயா, சலுகை காட்ட கூடாதா? ////


வேணும்ன்ன பழிபோட்ட உடன் ஒரு குட்றாலம் துண்டு இலவசமா தர்றோம்

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

என்னங்கடா கட காலியா இருக்கு , கட உணர எங்க , முத்த நாளே சரக்கடிக்க போயிட்டானா ??
(யப்பா தனியா இருக்க பயமா கிடக்கு )


மங்கு பயபடாதே நான் இருக்கேன்

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அப்ப என்னொட பதிவுல நான் எழுதின கவிதைய பார்த்து பழகிக்க பிரதர்... //


ஏனடா எடுத்த உடனே சூசைடுக்கு டிரைபண்ண சொல்ல பட்டா ???? /////////



இதுக்கு பதில் ஜெ நீங்க மங்கு டிவியில் வரும் சமையல் குறிப்பை பார்த்து பதிவு எழுத கத்துக்கோங்க

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

என்னங்கடா கட காலியா இருக்கு , கட உணர எங்க , முத்த நாளே சரக்கடிக்க போயிட்டானா ??
(யப்பா தனியா இருக்க பயமா கிடக்கு )


மங்கு பயபடாதே நான் இருக்கேன் //

வாப்பு , மொதோ பதிவுலே கும்மி அடிச்சுடுவமா ???

Jey said...

//வேணும்ன்ன பழிபோட்ட உடன் ஒரு குட்றாலம் துண்டு இலவசமா தர்றோம்//

துண்டு எதுக்கு, என்ன பொட்லம் கட்ரதுக்கா?...
அவ்வ்வ்வ்

Jey said...

பன்னிகுட்டி, பருப்பு எங்கே போனாங்க, ஆனியா, இல்ல வெள்ளிக்கிழமை லீவுனு மப்பேறி மட்டய போட்டுடாங்களா?

Jey said...

//இதுக்கு பதில் ஜெ நீங்க மங்கு டிவியில் வரும் சமையல் குறிப்பை பார்த்து பதிவு எழுத கத்துக்கோங்க//

ஆள காலிபண்றதுனு முடிவோடதான் இருக்கீங்களா?

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பன்னிகுட்டி, பருப்பு எங்கே போனாங்க, ஆனியா, இல்ல வெள்ளிக்கிழமை லீவுனு மப்பேறி மட்டய போட்டுடாங்களா? ///


இல்ல எண்டாவது (?????) கரகாட்டம் பாக்க போய்டானுகளா????

Jey said...

மங்குனி அமைச்சர் said...
Jey said...

பன்னிகுட்டி, பருப்பு எங்கே போனாங்க, ஆனியா, இல்ல வெள்ளிக்கிழமை லீவுனு மப்பேறி மட்டய போட்டுடாங்களா? ///


இல்ல எண்டாவது (?????) கரகாட்டம் பாக்க போய்டானுகளா????//

பாவம், இப்பொ அவங்க இருக்கிர இடத்துல கரகாடம் எல்லாம், இல்லையாம், பயபுள்ளக கய்ஞ்சி போய் கிடக்குது.

மங்குனி அமைச்சர் said...

Jey said...///




ஜெய், நீங்க எந்த ஊரு, இப்ப எங்க இருக்க ??

Jey said...

தேனி பக்கம் கிராமம், இப்போ சென்னைல இருக்கேன். உங்க ஜிமெயில் அனுப்புங்க, சாட் பண்ணலாம்

மங்குனி அமைச்சர் said...

yasinshaji@gmail.com

Jey said...

already invited this id from my gtalk, come online

மங்குனி அமைச்சர் said...

யப்பா நமக்கு சிஸ்டம் நாலேஜ் கம்மி , அது ஏன்னா gtalk?? mail
ல சாட்டிங் வா

மங்குனி அமைச்சர் said...

இரு ஒரு அரை மணி நேரத்துல வர்றேன்

Jey said...

yahoo messenger மாதிரி, ஜி மெயில் ஐடி-ல லாகின் ஆகி சாட் பற்ரதுக்கு, பெர்சனல அங்க பேசிக்கலாம்.

Jey said...

ஓகே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாருக்கு ஜெய், சத்தியமா முதல் பதிவுன்னு நம்ப முடியல! கலக்கு!

Jey said...

ஊக்கப்படித்தியத்ற்கு நன்றி, பரா.
ரொம்ப ஆனியா?. ஆள்க்காணோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு கொஞ்சம் டைம் இல்ல கண்ணு, நாளைக்கு உன் கடைலயே குமுறுவோம், வரட்டா!

Jey said...

ஓகெ.

vasu balaji said...

வாங்க ராசா!
/என் மனதுக்குள் தோன்றுவதை முழுமையாக எழுத்துக்களில் வெளிப்படுத்தும் திறமை என்னிடம் இல்லை என்பதை எழுத ஆரம்பித்தவுடனே தெரிந்துகொண்டேன்./

இத தூக்கி ஒரு ஓரமா வெச்சிட்டு, ஒரு டைரி எழுதறாமாதிரி எழுதுங்க போதும். எழுதிட்டு ஒரு வாட்டி படிச்சி பார்த்தா பிழை தெரியும். அவ்வளவுதானே.

ஆமாம். கவுஜ எழுதியிருக்கேன்னு சொன்னீங்க காணோம்?

Jey said...

வானம்பாடிகள் said...
வாங்க ராசா!
/என் மனதுக்குள் தோன்றுவதை முழுமையாக எழுத்துக்களில் வெளிப்படுத்தும் திறமை என்னிடம் இல்லை என்பதை எழுத ஆரம்பித்தவுடனே தெரிந்துகொண்டேன்./

இத தூக்கி ஒரு ஓரமா வெச்சிட்டு, ஒரு டைரி எழுதறாமாதிரி எழுதுங்க போதும். எழுதிட்டு ஒரு வாட்டி படிச்சி பார்த்தா பிழை தெரியும். அவ்வளவுதானே.

ஆமாம். கவுஜ எழுதியிருக்கேன்னு சொன்னீங்க காணோம்?///

வருகைக்கும், அறிவுரக்கும் நன்றி சார்.

ஒரு நாள் அதயும் எக்ஷுதாம விடப்போரதில்லை சார்.அதுக்குதான் அடிக்கடி உங்க வீட்டுபக்கம் வர்றது.:)

Swengnr said...

பாஸு - நீங்க நல்ல வருவீங்க பாஸு, முதல் பதிவை பார்த்தாலே தெரிது பாஸு! வாழ்த்துக்கள்!

வினையூக்கி said...

I am sure you would go places, really a good one. Good luck Sir !!

Jey said...

வினையூக்கி said...
I am sure you would go places, really a good one. Good luck Sir !! ////

thanks for your visit and encouragement sir.

Jey said...

/// Software Engineer said...
பாஸு - நீங்க நல்ல வருவீங்க பாஸு, முதல் பதிவை பார்த்தாலே தெரிது பாஸு! வாழ்த்துக்கள்///

வருகைக்கு நன்றி சார்.

Riyas said...

முதல் பதிவிலேயே கலக்கிட்டிங்க,,,

வாழ்த்துக்கள் தொடருங்கள்..

Jey said...

Riyas said...
முதல் பதிவிலேயே கலக்கிட்டிங்க,,,

வாழ்த்துக்கள் தொடருங்கள்..//

வருகைக்கும், வாழ்துக்கும் நன்றி சார்.
இவ்வளவு பேர் வந்து படிச்சிட்டு, ஓட்டும், பின்னூட்டமும் போடுவாங்கனு எதிர்பார்க்கல சார்.

பருப்பு (a) Phantom Mohan said...

அப்பிடிப் போடு முதல் பதிவே கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள். சமுதாயத்து மேல கோபம் கொண்டவர்கள் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே?

தண்டனைகள் கடுமையானா தான் தப்புகள் குறையும். எதுக்காக அவன் தப்பு பண்றான், ஊழல் பண்ணி வருமானத்துக்கு மேல சொத்து சேக்குறான்? அவன் ஒருத்தனுக்காகவா? இல்லை...அவன் குடும்பம் மொத்தத்துக்கும் சேர்த்து! சமுதாயத்தில மத்தவங்க அண்ணாந்து பார்க்கணும், பொறாமைப் படனும். உலகத்தில உள்ள எல்லா சுகங்களையும் அனுபவிக்கனும். அடிப்படை காரணம் இது தான். அவன் தப்பு பண்ணுவதற்கு முக்கியக் காரணம், அவன் குடும்பம் மற்றும் அவனைச் சுற்றி உள்ள சமுதாயம். (வேற யாரு நாம தான், அவனைத் தப்பு பண்ண தூண்டுறோம்!)

கார் வச்சிருந்தா, ப்ளைட்ல போனா, பெரிய பங்களா வச்சிருந்தா, ஸ்டார் ஹோடெல்லா சாப்பிட்டா..etc ., ஒரு பெருமை, ஒரு கெத்து, ஒரு கேவலமான அற்ப சந்தோசம். நம்மள மாதிரி பக்கிப் பசங்க அத அண்ணாந்து பார்ப்போம், பொறாமைப் படுவோம், நீங்க ரொம்ப பெரிய ஆளு சார்ன்னு அவன் கால நக்குவோம்! அதுக்கு ஆசைப்பட்டு தான் இந்த விலைமகன்கள் தப்பு பண்றானுங்க!

சிடிசன் படத்தில அஜித் சொன்ன தீர்ப்பு காமெடியா இருந்தாலும், ஒருத்தனுக்கு அந்த மாதிரி பண்னோம்ன்னு வச்சிக்க....அடுத்து ஒரு நாய் தப்பு பண்ணாது, அப்டியே பண்ண நெனைச்சாலும் அவன் கூட உள்ளவங்க, அவன் குடும்பத்தார் அவன செருப்பால அடிப்பாங்க!

இதப்பத்தி மிகப்பெரிய கட்டுரையே எழுதலாம். நாம தான் பொறுத்தார் பூமி ஆழ்வார் சங்கமாச்சே! இதப் பொறுத்துக்கிட்டு பொத்திக்கிட்டு போய் நம்ம வேலையைப் பார்க்க வேண்டியதுதான்!

பருப்பு (a) Phantom Mohan said...

நல்லா கும்மி அடிச்சிருக்கீங்க, என்னால கலந்துக்க முடியலை. காலைல இருந்து ஷாப்பிங்..ஊர்க்கு வர்றேன்ல அதான். நாளைக்கு லீவ் தான் கும்மி அடிப்போம், குஜாலா இருப்போம்.

யோவ் jey ஆனாலும் நீ முதல் பதிவே கலக்கலாப் போட்டு எங்க மானத்தக் காப்பாத்திட்டய்யா! (பின்ன ஒரு எழவும் எழுதாமலே ஒரு பத்து பேரு உன்ன பாலோ பண்ணோமே, எத்தன பேரு பார்த்திட்டு காறித்துப்பிருப்பான்!)

Jey said...

பருப்பு, இத நீங்க தனி பதிவாவெ போட்ருக்கலாம் போல, அவ்வளவு குமிரியிருகீங்க. இவங்க ஆடுரதுக்கு, நம்ம தப்பும் இருக்கத்தான் செய்கிறது.

Jey said...

Phantom Mohan said...
நல்லா கும்மி அடிச்சிருக்கீங்க, என்னால கலந்துக்க முடியலை. காலைல இருந்து ஷாப்பிங்..ஊர்க்கு வர்றேன்ல அதான். நாளைக்கு லீவ் தான் கும்மி அடிப்போம், குஜாலா இருப்போம்.

யோவ் jey ஆனாலும் நீ முதல் பதிவே கலக்கலாப் போட்டு எங்க மானத்தக் காப்பாத்திட்டய்யா! (பின்ன ஒரு எழவும் எழுதாமலே ஒரு பத்து பேரு உன்ன பாலோ பண்ணோமே, எத்தன பேரு பார்த்திட்டு காறித்துப்பிருப்பான்!)///

ஊருக்கு வாய்யா நேர்லயே கும்மி அடிப்போம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அக்கிரமங்களுக்கு எதிரான நமது கோபத்தை சரியான வழிகளில் செயல்படுத்தினால் விடிவு கிடைக்கலாம். நீதித்துறையில் இன்னும் ஓரளவேணும் உயிர் இருக்கிறது. எனவே இப்பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வழக்குத் தொடரலாம். இலவச சட்ட ஆலோசனை மையங்கள் மாவட்டம்தோறும் உள்ளன. சமூக இயக்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகள் பொதுநல வழக்குகள் தொடரலாம். இதற்கும் மேலாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் சரியாக பயன்படுத்தினாலே அரசுத்துறைகளை சீர் செய்து விடலாம். இது குறித்த விழிப்புணர்வும் , அக்கறையும் அவசியம். இதுபோன்ற விசயங்களை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டுவருதல், பிற்காலத்தில் மிகுந்த நன்மை பயக்கும்!

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் சரியாக பயன்படுத்தினாலே அரசுத்துறைகளை சீர் செய்து விடலாம். இது குறித்த விழிப்புணர்வும் , அக்கறையும் அவசியம். இதுபோன்ற விசயங்களை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டுவருதல், பிற்காலத்தில் மிகுந்த நன்மை பயக்கும்!///

சரியாக சொல்லியிருக்கிரீர்கள், அட்த்த தலைமுறைக்கு முழுமையான விளிப்புனைவை ஏற்படுத்திவிட்டால், 90% தீர்வு கிடத்துவிடும் என்பதே எனது கருத்து. நீங்க சீனியர், சீனியர்தான் பாஸ் அழகா சொல்ரீங்க.

Jey said...

டென்ஷனை குறைக்க 2 வதா நம்ம ஜொகெச் போட்ரிக்கேன், வந்து சிரிச்சிட்டு மட்டும்!!! போங்க சார்.

ILLUMINATI said...

அரசியல்வாதிங்க இன்னைக்கு அரசியல் வியாதிங்க ஆயிட்டாங்க தல.அதுங்கள நான் மனுஷ லிஸ்ட்லேயே செக்குறது இல்ல. திருந்தாத ஜென்மங்கள்.....

ஜெய்,நல்ல பதிவு.நாம நினைக்குரத எழுத தான் ப்ளாக்.உங்களுக்கு எது நல்லா எழுத வருமோ,அதை செய்ங்க.
அப்புறம்,இந்த மாதிரி நல்ல போஸ்ட் போட்டா வந்து தட்டிகுடுத்துட்டு போவேன்.தக்காளி,மொக்க போட்டீறு,கும்மில வந்து குமுறிடுவேன்.ஜாக்ரதை. :)

Jey said...

/// ILLUMINATI said...

ஜெய்,நல்ல பதிவு.நாம நினைக்குரத எழுத தான் ப்ளாக்.உங்களுக்கு எது நல்லா எழுத வருமோ,அதை செய்ங்க.
அப்புறம்,இந்த மாதிரி நல்ல போஸ்ட் போட்டா வந்து தட்டிகுடுத்துட்டு போவேன்.தக்காளி,மொக்க போட்டீறு,கும்மில வந்து குமுறிடுவேன்.ஜாக்ரதை. :)///

சாமி ஏற்கனவே நம்ம பயக ஆ ஊ நா உங்ககிட்டே சொல்லிருவேன்னு சொல்லி பயமுருத்துரானுக, நீங்க வேர நேரடியா வந்து....., எது மொக்கைனு தெளிவா சொல்லிட்டா நான் அந்த பக்கமே போகமாட்டென் இலுமி சார், நம்ம பட்டாபட்ட் சார் தலைமே அடிச்சி சத்தியம் பன்றேன்.

Anonymous said...

ஜெய் சூப்பர் பதிவு தான் இது ..அரசியல் வாதிகளும் காவல்துறையினரும் திருந்தினா ஆஹா நினைச்சாலே நல்லா இருக்கே ஆனா திருந்துவார்களா அது தான் கேள்வி குறியா இருக்கு

Jey said...

sandhya said...
ஜெய் சூப்பர் பதிவு தான் இது ..அரசியல் வாதிகளும் காவல்துறையினரும் திருந்தினா ஆஹா நினைச்சாலே நல்லா இருக்கே ஆனா திருந்துவார்களா அது தான் கேள்வி குறியா இருக்கு//

இவங்க திருந்துரதோ, இல்லை இவங்களை திருத்துரதோ நடக்குர காரியமா தெரியல மேடம், அடுத்த தலைமுரயில தான் விளிப்புணர்வை ஆரம்பிக்கனும் போல.
வருகைக்கு நன்றி.( எங்க நான் முதல்ல போட்ட அ ஆ நவ படிச்சிட்டு இந்த பக்கமே தலை வச்சி படுக்க மாட்டீங்கனு நினைச்சேன்)

ILLUMINATI said...

அப்பு,காமிச்சு பயமுறுத்த நான் என்ன பூச்சான்டியா?நீரு மைக் டெஸ்டிங் பண்ணுணீறு இல்ல.அந்த காமெடி இனி வேணாம்.சீரியஸ் எழுத்து உங்களுக்கு நல்லா வருது. அதையே செய்ங்க.வாழ்த்துக்கள்.

Jey said...

ILLUMINATI said...
அப்பு,காமிச்சு பயமுறுத்த நான் என்ன பூச்சான்டியா?நீரு மைக் டெஸ்டிங் பண்ணுணீறு இல்ல.அந்த காமெடி இனி வேணாம்.சீரியஸ் எழுத்து உங்களுக்கு நல்லா வருது. அதையே செய்ங்க.வாழ்த்துக்கள்.//

தல சொல்லிட்டீங்கள்ல, அப்படியே ஆகட்டும்.( சீரியசாவே இருந்தா சில சமயம் நம்மல வச்சி காமடி பன்னிருவாங்க இலுமி, அதான் சாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு, மத்தபடி, உண்மையாலுமே மனசுல இருக்கிரத கொட்றதுக்குதான் இந்த பதிவுலகத்த பயன்படுத்த போறேன்)

ILLUMINATI said...

நம்ம நக்கலை எல்லாம் கமெண்ட்ல காட்டிக்கலாம் தல. :)
அதுக்கு தான் கமெண்ட்ஸ் இருக்கு.

Jey said...

ILLUMINATI said...
நம்ம நக்கலை எல்லாம் கமெண்ட்ல காட்டிக்கலாம் தல. :)
அதுக்கு தான் கமெண்ட்ஸ் இருக்கு.//

இதுவும் கரெக்டாதான் இருக்கு. உடன்படுகிறேன்.

செல்வா said...

அருமையான பதிவு ...
//உற்சாகப்படுதியதற்கு நன்றி. டவுசரை கிழிக்கும்போது வலிக்காம கிழிக்குமாறு, கேட்டுக்கொள்கிறேன்///
பயப்படாம வாங்க ... !! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது ....

சாமக்கோடங்கி said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. ரொம்ப அதிகமா சமூக அக்கறையுள்ள பதிவே போடாதீங்க.. ஒடம்புக்கு நோவு வர்றது தான் மிச்சம்.. ஒண்ணும் ஆகப் போறதில்லை..

எங்க அண்ணன் பட்டாபட்டியே வந்து சொல்லிட்டார்.. அப்புறம் என்ன அசத்துங்க..

Jey said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. ரொம்ப அதிகமா சமூக அக்கறையுள்ள பதிவே போடாதீங்க.. ஒடம்புக்கு நோவு வர்றது தான் மிச்சம்.. ஒண்ணும் ஆகப் போறதில்லை..

எங்க அண்ணன் பட்டாபட்டியே வந்து சொல்லிட்டார்.. அப்புறம் என்ன அசத்துங்க..///

அதனாலதன் 2வது பதிவு ஜோக்ஸ் போட்டிடேன்.
http://pattikattaan.blogspot.com/2010/06/blog-post_26.html.

வருகைக்கு நன்றி தல.

Jey said...

ப.செல்வக்குமார் said...
அருமையான பதிவு ...
//உற்சாகப்படுதியதற்கு நன்றி. டவுசரை கிழிக்கும்போது வலிக்காம கிழிக்குமாறு, கேட்டுக்கொள்கிறேன்///
பயப்படாம வாங்க ... !! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது ....///

நம்பி வரலாமா?.

cheena (சீனா) said...

அன்பின் ஜெய்

கட்தையும் அருமை - அது சொல்லும் நீதியும் அருமை - அதன் விளைவாக எழுந்த எண்ணமும் அருமை

நல்வாழ்த்துகள் ஜெய்
நட்புடன் சீனா

Jey said...

// cheena (சீனா) said...
அன்பின் ஜெய்

கட்தையும் அருமை - அது சொல்லும் நீதியும் அருமை - அதன் விளைவாக எழுந்த எண்ணமும் அருமை

நல்வாழ்த்துகள் ஜெய்
நட்புடன் சீனா///

இதுதான் அண்ணே என்னோட முதல் பதிவு கணக்கு, இதை வலைச்சரத்துல நம்ம தேவா அறிமுகப்படுத்தி என்னை கவுரவிச்சிருந்தாரு...,

LinkWithin

Related Posts with Thumbnails