July 11, 2010

அரச மரத்தின் அழிசாட்டியம்



நான் இப்போது வசிக்கும் ஃபிளாட்டின் முன் உள்ள பாதையின் முடிவில்(முட்டுச் சந்து) ஒரு அரச மரம் உள்ளது. கோடை வெயிலின் போது அதன் நிழல் சுகமாக இருந்தது, மேலும் குழந்தைகள் நிழலில் விளையாடும்போது (பாதை முடிவதால் வாகனங்கள் நடமாட்டம் இல்லை) சந்தோசமாகவும் இருக்கிறது. சுவாசிக்கிற காத்தயும் சுத்தம் பண்ணி தருது.
சில நாட்களாக எங்கள் குடியிருப்பின் வில்லனாக மாரிக்கொண்டிருக்கிறது, காரணம் இதுதான்:

50 அடி தள்ளி இருக்கும் அந்த அரசமரத்தின் வேர்கள், எங்கள் குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டியின்( sump) சுவரை பெயர்த்துக்கொண்டு உள்ளே வந்து , எங்கள் பயன்பாட்டுக்கு தேக்கி வைத்த நீரை குடித்துகொண்டிருக்கிரது, அதன் தேவைக்கு மட்டும் குடிக்க்கிறதா என்றால், சுவர் உடைபட்டதால் அந்த பிளவின் வழியே மொத்த நீரும் பூமிக்குள் செண்ரு விடுகிறது, இதனால் மெட்ரோவட்டர் பயன்படுத்த முடியாமல், கிணற்று நீர் பயன்படுத்தும் நிலை.

இத்தனைக்கும் ஒரு வருடத்திற்கு முன் இதே பிரச்சினையில், சிறிது வேரை வெட்டி( அதி ஆசிட் உற்றி மீண்டும் வளராமல் இருக்க) புதிதாக கட்டிடப் பொறியாளரை வைத்து கட்டிய தொட்டி அது.

இப்போது மீண்டும் தொட்டியை கட்ட வேண்டிய நிலை. இந்த அரசமரத்தின் வேர்கள் 10 அடி தூரத்தில் உள்ள மற்ற வீடுகளின் தொட்டிகளுக்கு செல்லாமல், தொடர்ந்து எங்க வீட்டின் தொட்டியை உடைத்து நீர் பருகுவதிலேயே குறியாய் இருக்கிறது. இந்த அரசமரம் ஏன் அழிச்சாட்டியம் செய்துகொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு நாளைக்கு இவ்வளவு லிட்டர் நீர் வேண்டும் என்று பேச்சுவார்த்தைக்கு வந்தாலாவது அதன்படி நீர் ஊற்றி விடலாம், எங்களுக்கு அதன் மொழி தெரியாததால் பேச்சுவார்த்தைக்கும் வழியில்லை.

இப்போது கட்டிடப்பொறியாளரிடம் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது, எவ்வளவுதான் வேரைவெட்டி அதில் ஆசிட் ஊற்றினாலும், அதன் அடுத்த வேர் வந்து உங்கள் தொட்டியை உடைக்கும் என்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன.

மரத்தை வெட்டுவதுதான் இதுக்கு ஒரே தீர்வு என்ற எண்ணம் இப்போது நான் குடியிருக்கும் ஃபிளாட்டின் மற்றவர்களின் கருத்தாக இருக்கிறது. பொறுங்கள் டெக்னாலஜி வளர்ந்துவிட்டது, மரத்தை வெட்டாமல், வேறு நல்ல தீர்வு கிடைக்கிறதா பார்ப்போம் என்று தற்காலிகமாக மற்றவர்களை சமாதானம் செய்திருக்கிறேன்.

இதிற்கிடையில், அரச மரம் சாமி(கடவுள்) மரம் அதுல கையை வச்சா அவ்வளவுதான் எனக்கு கெட்ட கோவம் வரும், வேணும்னா புதுசா தொட்டிகட்டிய பிறகு தினமும், 5 குடம் நீர் ஊத்துரோம், வேர் தொட்டி பக்கத்துக்கு வரக்கூடாதுன்னு வேண்டிகிட்டு வருகிற சித்திரையில் பூக்குழி இறங்கிருங்க சரியாப் போயிரும்னு!!! சொல்ற வீட்டு அம்மணீயின் லாஜிக்கிலாத ஆலோசனை வேறு.

வீட்டு அம்மணியின் ஆலோசனையை புரம்தள்ளினாலும், உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும்( 1 அறிவு இருக்குனு சொல்ற அமீபா-விலிருந்து 6 அறிவு இருக்கிறதா மார்தட்டிட்டிருக்கிற மனுசங்க வரைக்கும்) அதற்கு தேவயான உணவை தேடிக்கொள்வதற்கு அதுகளுக்கு உரிமையில்லையானு என் மண்டைல ஓரத்துல ஒரு மணியடிக்குது.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் இச்சகத்தினை அழித்திடுவோம் -னு சொன்ன பாரதி, மனுசனுக்கு மட்டும் இல்லாம தனியொரு உயிருக்கு-னு, சொல்லிருக்கனும்னு நினைக்குற சாதி நம்ம சாதி.  இப்போ உயிர்வாழ நீர் தேடி வந்த இந்த மரத்தை என்ன பன்றது?.


  1. மரத்தோட வேர தொட்டிபக்கம் வராம தடுக்குரதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா?. அந்த சைடுல வர்ற வேருக்கு மட்டும் ஏதாவது கெமிக்கல் ஊத்தி, மத்த வேர்களும் அந்த சிடுக்கு வராம செய்ரதுக்கு யாய்கிட்டயாவது ஐடியா இருக்கா?.


  2. என்ன ஸ்ட்ராங்க தொட்டிய கட்டினாலும், வேர் வந்து தொட்டிய நோண்டத்தான் செய்யும்னு சொலறத கேட்டு அரச( சாமி !!!) மரத்தை வெட்டிடலாமா?


  3. இல்லை பேசாம வீட்டு அம்மணி சொல்றத கேட்டு, 3 நாள் லீவுதானேனு ஊருக்கு போய் பூக்குழி இறங்கி சாமிய அரச மரத்துகிட்ட தூதனுப்பி நீர் தொட்டிய ஒன்னும் செய்யாதேனு மிரட்ட சொல்லலாமா?.


  4. இல்லை வேற ஏதாவது தீர்வு இருக்கா?

மக்களே, இந்த பதிவுலகத்துல கெட்டிகார/ மூளைக்கார பதிவர்கள் நெறய பேர் இருக்குறத நம்பி, ஆலோசனை கேட்டு வந்திருக்கேன். என்னோட எதிர்பார்ப்பை ஏமாத்தாம ஏதாவது நல்ல தீர்வை சொல்லிட்டிபோங்க.

டிஸ்கி 1 : ஒரு நல்ல தீர்வை பின்னூட்டத்துல சொல்லுங்க, மெயிலுக்கு அனுப்புனாலும் சர்தான். , உங்களுக்கு டவுட்டா இருந்தா உங்க நண்பர்கள் கிட்டயும் கேட்டு சொல்லுங்க கோச்சுக்க மாட்டேன் ..)










அரசமரத்தை பற்றி வலையுலகத்தில் படித்தது கீழே :




  • நம்ம ஊரு சித்தார்த்தர் இந்த மரத்துக்கு கீழே உக்கார்ந்திருந்த போதுதான் , ஞானம் கிடச்சி புத்தர் -ஆ மாறி உலகமுழுக்க கடவுளா மாறினாராம். ( இந்த மரத்துக்கு boo bodhi-னு பேர் இருக்காம், அதிலிருந்துதான் புத்தர்-னு பேர்வந்துச்சாம்)



  • பஞ்சபாண்டவர்கள் ஒரு வருசம் விராட நாட்ல அன்யாதவாசம் இருக்கும்போது இந்த மரப்பொந்துலதான் தங்களோட ஆயுதங்கள மறைத்து வைத்தார்களாம்..



  • கி.மு. 228-ல இலங்கை-ல நட்ட அரச மரம் இன்னும் இருக்காம்(படம் கீழே) ,மனிசன் நட்டமரங்களிலேயே இதுதான் உலகத்துலேயே வயசான மரமாம்.(நான் கணக்குல வீக் அதனால நட்ட வருஷத்த வச்சி நீங்களே வயச கண்டுபிடுச்சிக்குங்க).




  • கடுமையான வரட்சியானாலும், பனிபொழிஞ்சி ஐஸ்கட்டியானலும் தாங்குமாம்..



  • இந்தியாவுல முதன்முதலா இந்த மரத்தைதான் சித்திரமா வரஞ்சாங்களாம். கி.மு.3000 – கி.மு.1700க்கு இடைப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்துக்கு அடையாளமான, மொஹஞ்சதாரோவில், இந்த மரத்தோட சித்திரம் இருக்குதாம், அந்த கலகட்டத்திலேயே , இந்த மரத்துக்கு தெய்வ வழிபாடு நடத்தி இருக்காங்களாம்.



  • இந்து மதத்துல அரசமரம் ஆண் மரமாகவும், வேப்பமரம் பெண்ணாகவும் சொல்லப்பட்டிருக்காம் (ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்-ல மட்டும் மாத்தி சொல்லப்பட்டிருக்காம்).


  • அரசமரத்தை சுத்திவந்து கும்பிட்டா கன்னிப்பெண்களூக்கு கல்யாணம் நடக்குமாம், குழந்தை இல்லாதவங்க கும்பிட்டா குழந்த வரம் கிடைக்குமாம்.( எங்க கிராமத்தில கூட இப்போதும் சுத்திவந்து கும்பிட்டுகிட்டுதான் இருக்காங்க).



  • இந்துமதத்தோட மும்மூர்த்திகள்( பிரம்மா, விஸ்னு,சிவன்) குடியிருக்கிற ஒரே இடம் இந்த மரம்தானாம் (வேர்ல பிரம்மாவும், நடுவுல விஸ்ணுவும் , மேல்பாகத்துல சிவனும் பாகப்பிரிவினை செஞ்சிகிட்டு குடித்தனம் செய்றாங்களாம்)



  • அரசமரத்தை நட்டவங்களுக்கு நேரா சொர்க்கம்னு வராக புராணத்துல சொல்லப்பட்டிருக்காம்.( எல்லா மொள்ளமாரித்தனங்களையும் செஞ்சிட்டு காலம்போன கடைசில ஒரு அரசமரத்த நட்டுட்டு நேரா சொர்க்கதுக்கு டிக்கெட் வாங்கிறலாம்னு கிளம்பிராதீக மக்களே.)



  • மத்த மொழிகள்ல அரசமரத்தோட பேரு கீழே:
ஹிந்தி : பிபல்( PIPAL)
கன்னடம் : அரளி( ARALI)
சான்ஸ்கிரீட் : அச்யுடவாஸ், அஸ்வதா ( ACHYUTAVAS, ASHVATHA)
மலையாளம் : அரச்சு, அரயல் ( ARACHU, ARAYAL)
தெலுங்கு : அஸ்வத்தாமு , போதி( ASHVATTHAMU, BODHI)
உருது : பீபல்(PEEPAL)
ஆங்கிலம் : பீபுள் ட்ரீ(PEEPUL TREE)
பொட்டானிகல் பெயர் : ஃபிகஸ் ரிலிஜியோசா( FICUS RELIGIOSA)
குடும்ப பெயர் : மொரசியே ( MORACEAE)


கி.மு. 228-ல இலங்கை, அனுராதபுரத்துல நட்ட அரசமரம். புத்தர் தவம் செஞ்ச மரத்தோட மரக்கன்று எடுத்து போய் அங்க நட்ட வளர்ந்த மரமாம்.


டிஸ்கி 2 : மேலே சொன்ன தவல்களிலிருந்து ஏதும் கேள்விகள் இருந்தா என் கிட்ட வ்ளக்கம் கேட்ராதீங்க சாமிகளா, நம்ம எழுதுன பதிவுல அரசமரம் வந்துட்டதால அதப்பத்தி நெட்ல தேடும்போது என் கண்ணுல பட்ட விசங்கள ஒரு இதுக்காக எழுதியிருக்கேன், , ஹி... ஹி...

79 comments:

ஜெய்லானி said...

தலீவா இப்ப இன்னன்ரே..!! சந்தேகம் வந்துகினா அப்பாலிகா எங்கைய்ல குடுக்காம ஜகா வாங்றே இன்னா விசியம். இப்டி சூடு

(1) ராமதாசுக்கு ஒரு லட்டர் போடு . அன்பு மணிக்கு நா கேரண்டின்னு அடுத்த நிமிசம் மரத்துக்கு வேரே இருக்காது

ஜெய்லானி said...

(2) அதுக்கு பக்கத்தில அதாவது மரத்துக்கு பக்கத்தில தண்ணீர் தொட்டி ஒன்னு கட்டு அது அதை விட்டு நாக்கை ச்சே..வேரை விடாது. அதுல கால்வாசி பழைய தண்ணிய விடு போதும் ( அதாம்பா பாத்திரம் கழுவுற தண்ணீ)

ஜெய்லானி said...

(3)தொட்டிக்கு கட்ட காசு வேனுமா ? மரத்தடியில ஒரு ஊண்டியல வை தானா காசு வரும் ( அப்பாலிகா நீ கழுத்துல பட்டாபட்டிய கட்டிகினு வேலைக்கு லோலோன்னு அலையான் வானாம் பாரு )

ஜெய்லானி said...

(4) பேசாம தொட்டியை மாத்து கேட்டா வாஸ்து சரியில்லைன்னு சொல்லி இடத்தை மாத்தி கட்டு

ஜெய்லானி said...

(5)மங்கு மாதிரி யாராவது கிடைச்சா அதுக்கு பலி குடுக்கிரதா வேண்டிக்கோ அப்புறமா அது பயந்து போய் வேர் என்ன காய்ந்த இலைய கூடஅந்த பக்கம் போடாது

ப்ரியமுடன் வசந்த் said...

பிரச்சினை அதிகம்னா வெட்டிடுங்க ஆனா அதுக்கு பதிலா ஒரு மரம் நட்டு வச்சுடுங்க அடுத்த முறை யாருக்கும் இடைஞ்சல் வராத இடத்திலாக அதை நட்டுவைத்தால் இன்னும் நலம்...

ஜெய்லானி said...

இன்னும் ஐடியா வேனுமின்னா ட்பிள்யூ..டபிள்யூ..சந்தேக மணி டாம் காமுக்கு ( அதான் யா என் அட்ரஸ் ) கொசு மெயில் அனுப்பு . உடனே பறந்து வரேன் .

வறட்டா கண்ணு...

ஜெய்லானி said...

ஐடியாவுக்கு டாலரா என் சுவிஸ் அக்கொவுண்டுக்கு ஷிஃப்ட் பண்ணீடு ..
மேஹ் யஹாங் இந்தஜார் கருங்காஹ்..!! டீ ஹை..?

Jey said...

ஜெய்லானி said...

ஐடியாவ அள்ளிதெளிச்சிருக்க தல, செயற்குழு கூட்டி முடிவெடுக்க வேண்டியதுதான்:)

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
பிரச்சினை அதிகம்னா வெட்டிடுங்க ஆனா அதுக்கு பதிலா ஒரு மரம் நட்டு வச்சுடுங்க அடுத்த முறை யாருக்கும் இடைஞ்சல் வராத இடத்திலாக அதை நட்டுவைத்தால் இன்னும் நலம்...//

வந்து உங்க கருத்த சொன்னதுக்கு நன்றி, நண்பரே.பிளாட்ல இருக்கிற மத்த மூனு ஃபேமிலி அததான் சொல்லிகிட்டு இருக்காங்க. அது முடிவாச்சின்னா, ஒரு மரக்கண்று நடவேண்டியதுதான்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது ஈஸிப்பா..


பக்கத்தில “No entry" போர்ட் வெச்சு.. தொப்பையோட ஒரு ஆள நிறுத்து..

அதையும் மீறி வந்திருமா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது முடிவாச்சின்னா, ஒரு மரக்கண்று நடவேண்டியதுதான்.
//

ஆனா .. அது மரமாகும்வரை..பழைய மரத்தை வெட்டக்கூடாது..ஓ.கேவா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எதுக்கும் டெல்லிக்கு ஒரு லெட்டர் போட்டுப்பாரேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எவனாவது மண்ணாங்கட்டி மினிஷ்டரை விட்டு, பார்டரை கிராஸ் பண்ணினா, வெட்டத்தான் செய்வாங்கனு, ஒரு அறிவுப்(?) பூர்வமான பேட்டிய வெளியிடலாம்...


மீறி வந்தா, டெல்லிக்கு, தந்தி அடிச்சுட்டு..குடும்பத்தோட ஏதாவது விழாக்குப் போகலாம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட வேண்டாய்யா.. மரத்தோட வேர்ல, காண்டம் மாட்டி விட்டுடு..

( முக்கியமா.. அந்த பார்ட்டிய (“கொட்ட பாக்கும்..கொழுந்து வெத்தலையும்” ) கூப்பிட்டு, விழா எடுத்து மாட்டிவிடு...

ஆனா விழாவுக்கு மிக முக்கியம்.. அந்த ”நார்வே பதிவர்” விட்டு வெட்டனும்.. ( ரிப்பனை..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

காந்தீய வழியில், மரத்தையும், உங்க வீட்டையும் பிரித்துவிடலாம்..
( இந்தியா..பாகிஸ்தான் போல..)

ஆனா..மரத்துக்கு 70 கோடி கொடுக்கனும்..ஓ.கேவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வேர் தொட்டி பக்கத்துக்கு வரக்கூடாதுன்னு வேண்டிகிட்டு வருகிற சித்திரையில் பூக்குழி இறங்கிருங்க சரியாப் போயிரும்னு!!!//

கண்டிப்பா பூக்குழி இறந்குரதுல நீங்கதான் பேமஸ் ஆச்சே. வேணும்னா உங்க கூட பட்டா, முத்து, பண்ணி மற்றும் இலுமியை இறக்கிடுவோம்

Jey said...

பட்டாபட்டி.. said...

//பக்கத்தில “No entry" போர்ட் வெச்சு.. தொப்பையோட ஒரு ஆள நிறுத்து..

அதையும் மீறி வந்திருமா?//

நம்ப முடியாது நிழல லஞ்சமா வங்கிட்டு விட்ருவாங்க.

// பட்டாபட்டி.. said...
எதுக்கும் டெல்லிக்கு ஒரு லெட்டர் போட்டுப்பாரேன்..//
நம்ம கலிஞர் மாறி?!!!!...

//ஆனா விழாவுக்கு மிக முக்கியம்.. அந்த ”நார்வே பதிவர்” விட்டு வெட்டனும்.. ( ரிப்பனை..)//

யார் தல இது??!!!

//காந்தீய வழியில், மரத்தையும், உங்க வீட்டையும் பிரித்துவிடலாம்..
( இந்தியா..பாகிஸ்தான் போல..)

ஆனா..மரத்துக்கு 70 கோடி கொடுக்கனும்..ஓ.கேவா?//

சொந்த செலவுல சூனியம் வச்சுக்குங்கன்றே, நல்லா இரு தல!!!!...

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்டிப்பா பூக்குழி இறந்குரதுல நீங்கதான் பேமஸ் ஆச்சே. வேணும்னா உங்க கூட பட்டா, முத்து, பண்ணி மற்றும் இலுமியை இறக்கிடுவோம்///

ஐடியா நல்லா இருக்கே!!!. ஆனா சின்ன அடிஷன், உங்களையும் சேத்து இரக்குறதா வேண்டிக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என் கண்ணுல பட்ட விசங்கள ஒரு இதுக்காக எழுதியிருக்கேன்///

யோவ் நீ எழுதுறதுதான் விஷம். அது விசங்கள இல்ல விசயங்கள். போய் நியூ வாட்டர் குடிச்சிட்டு வாயா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த தண்ணில விஷம் கலந்துள்ளதுன்னு போர்டு வைங்க பாஸ். அப்புறம் எப்படி அரசமரம் வரும்ன்னு பாத்துடலாம்

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த தண்ணில விஷம் கலந்துள்ளதுன்னு போர்டு வைங்க பாஸ். அப்புறம் எப்படி அரசமரம் வரும்ன்னு பாத்துடலாம் ///

அதுக்கு என்ன மொழி தெரியும்னு தெரியலையே.........!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அதுக்கு என்ன மொழி தெரியும்னு தெரியலையே.........!!!! //
google translater use பண்ணி எல்லா மொழிகல்லையும் போர்டு வைங்க

Jey said...

அத்தனை போர்டு வைக்க இடம் பத்தலைனா, வீட்டை கொஞ்சம் இடிச்சிருங்கனு அடுத்த சொல்றது என்னக்கு புரியுது. சிரிப்பு போலீஸ்னு அடிக்கடி ஞாபகப்படுத்தாதேயா....

ILLUMINATI said...

உங்க engineer கிட்ட கேட்டு உங்க தொட்டிய ஸ்ட்ராங் ஆக்குங்க.அந்த வேர எல்லாம் வெட்டி விடுங்க.அந்த மரத்துக்கு பக்கத்துல இன்னொரு தொட்டி கட்டி விடுங்க.அது எனக்கு தெரிஞ்சி பெஸ்ட்.

மரத்த எல்லாம் வெட்ட வேணாம்.அதனால நமக்கு கிடைக்குற நன்மைகள் கொஞ்சமா?ஒரு சின்ன பிரச்சனைக்காக அதை வெட்டுறது சரியா?

சௌந்தர் said...

முடிந்த வரை பதிவ சின்ன போடுங்கள். இல்லை என்றால் இரண்டு பதிவ போடுங்கள்

Jey said...

ILLUMINATI said...
உங்க engineer கிட்ட கேட்டு உங்க தொட்டிய ஸ்ட்ராங் ஆக்குங்க.அந்த வேர எல்லாம் வெட்டி விடுங்க.அந்த மரத்துக்கு பக்கத்துல இன்னொரு தொட்டி கட்டி விடுங்க.அது எனக்கு தெரிஞ்சி பெஸ்ட்.

மரத்த எல்லாம் வெட்ட வேணாம்.அதனால நமக்கு கிடைக்குற நன்மைகள் கொஞ்சமா?ஒரு சின்ன பிரச்சனைக்காக அதை வெட்டுறது சரியா? ///

யோசனைக்கு நண்ரி இலுமி. இதுவும் ஒரு ஆப்சந்தான்.

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
Jey said...

சௌந்தர் said...
முடிந்த வரை பதிவ சின்ன போடுங்கள். இல்லை என்றால் இரண்டு பதிவ போடுங்கள்//

அடுத்த பதிவிலிருந்து சின்னதாக்க முயற்ச்சி செய்றேன், செளந்தர்.
வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது said...

குளிர்ச்ச்யும் ,நிழலும் தரும் அந்த பழைய மரத்தை வெட்டாதீர்கள்.
வேறு மாற்று ஏற்பாடுகளை செய்யலாம் தானே. வீட்டின் அருகில் மரங்கள் இருபது
வெப்பத்தையும் குறைக்கும், நிழலும் ,குளிர்ச்ச்யும் தந்து மனத்தை அமைதி படுத்தும் .

Jey said...

கக்கு - மாணிக்கம் said...
குளிர்ச்ச்யும் ,நிழலும் தரும் அந்த பழைய மரத்தை வெட்டாதீர்கள்.
வேறு மாற்று ஏற்பாடுகளை செய்யலாம் தானே. வீட்டின் அருகில் மரங்கள் இருபது
வெப்பத்தையும் குறைக்கும், நிழலும் ,குளிர்ச்ச்யும் தந்து மனத்தை அமைதி படுத்தும் .///

ஆலோசனைக்கு நன்றி கக்கு சார். என்னோட எண்ணமும் அதுவாத்தான் இருக்கு சார்.

Anonymous said...

மரம் வெட்டறது ரொம்ப ஈசி புது மரம் நட்டு அது வளர நிறையே சமயம் எடுக்கும் தோழா .நீங்க பேசாமல் தொட்டி வேறே இடத்தில மாதி கட்டறது தான் என் கருது மீதி உங்க இஷ்டம் .

Jey said...

sandhya said...
மரம் வெட்டறது ரொம்ப ஈசி புது மரம் நட்டு அது வளர நிறையே சமயம் எடுக்கும் தோழா .நீங்க பேசாமல் தொட்டி வேறே இடத்தில மாதி கட்டறது தான் என் கருது மீதி உங்க இஷ்டம் .//

இன்னீக்கு காலையில வந்த பொறியாளர் நீங்க சொல்றததான் சொன்னார்.99.9999% மரத்துல கை வைக்குறது வேண்டாம்னுதான் இன்னிக்கு காலைல ஃபிளாட் மீட்டிங்ல முடிவு எடுத்துருக்கு மேடம்.
வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி மேடம்.

Swengnr said...

Okay, Super!

Jey said...

Software Engineer said...
Okay, Super!///

என்ன சார், ரொம்ப ஆனியா?. அளக் காணோம்?.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் ஜெ ,
மரத்தை அது போலவே வளர விடு ..,தொட்டியை வேற இடத்தில கட்டு !

Anonymous said...

ரொம்ப சந்தோஷம் ஜெய் ..மரம் வெட்ட போறாங்களோன்னு நினைச்சு ரொம்ப கவைலையா இருந்தது ..இப்போ சரியா போச்சு நன்றி

முத்து said...

ஜெய்லானி said...

(1) ராமதாசுக்கு ஒரு லட்டர் போடு . அன்பு மணிக்கு நா கேரண்டின்னு அடுத்த நிமிசம் மரத்துக்கு வேரே இருக்காது//////////////


இது கொஞ்சம் நல்ல யோசனையா இருக்கே

முத்து said...

ஜெய்லானி said...

(5)மங்கு மாதிரி யாராவது கிடைச்சா அதுக்கு பலி குடுக்கிரதா வேண்டிக்கோ அப்புறமா அது பயந்து போய் வேர் என்ன காய்ந்த இலைய கூடஅந்த பக்கம் போடாது///////////////////////////



மங்கு வேண்டாம் அதுக்கு பதில் நம்ம சிப்பு போலிசை நர பலி குடு எல்லாம் சரியாகிடும்

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்டிப்பா பூக்குழி இறந்குரதுல நீங்கதான் பேமஸ் ஆச்சே. வேணும்னா உங்க கூட பட்டா, முத்து, பண்ணி மற்றும் இலுமியை இறக்கிடுவோம்//////////////////


உன்னை பலி குடுக்கும் போது நாங்க பூக்குழி இறங்கவா மாட்டோம்,போயி மஞ்ச தானி ஊத்திகிட்டு வா

முத்து said...

பட்டாபட்டி.. said...

காந்தீய வழியில், மரத்தையும், உங்க வீட்டையும் பிரித்துவிடலாம்..
( இந்தியா..பாகிஸ்தான் போல..)




இதில் எதுவும் உள்குத்து இல்லையே பட்டா

Jey said...

முத்து said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்டிப்பா பூக்குழி இறந்குரதுல நீங்கதான் பேமஸ் ஆச்சே. வேணும்னா உங்க கூட பட்டா, முத்து, பண்ணி மற்றும் இலுமியை இறக்கிடுவோம்//////////////////


உன்னை பலி குடுக்கும் போது நாங்க பூக்குழி இறங்கவா மாட்டோம்,போயி மஞ்ச தானி ஊத்திகிட்டு வா //

ரமெஷு, டீல் முடிஞ்சிருச்சி, உன்ன பலிகொடுத்தா , இவங்க பூக்குழி இறங்குராங்களாம், வந்து நீயா தலைய குல்லுக்கிட்டு நின்னுருப்பா ராசா....!!!

முத்து said...

பட்டாபட்டி.. said...

அட வேண்டாய்யா.. மரத்தோட வேர்ல, காண்டம் மாட்டி விட்டுடு..

( முக்கியமா.. அந்த பார்ட்டிய (“கொட்ட பாக்கும்..கொழுந்து வெத்தலையும்” ) கூப்பிட்டு, விழா எடுத்து மாட்டிவிடு...

ஆனா விழாவுக்கு மிக முக்கியம்.. அந்த ”நார்வே பதிவர்” விட்டு வெட்டனும்./////////////




யாருப்பா அந்த நாறிப்போன பதிவர் ச்சே நார்வே பதிவர்

முத்து said...

Jey said...
ரமெஷு, டீல் முடிஞ்சிருச்சி, உன்ன பலிகொடுத்தா , இவங்க பூக்குழி இறங்குராங்களாம், வந்து நீயா தலைய குல்லுக்கிட்டு நின்னுருப்பா ராசா....!!!/////////////


ஜெ ஆடு மிரளபோகுது சத்தம் போடாமல் பிடிங்க பட்டா கத்தியை குடு

Jey said...

யாருப்பா அந்த நாறிப்போன பதிவர் ச்சே நார்வே பதிவர் //

எனக்கும் தெரியல முத்து.

Jey said...

//
ஜெ ஆடு மிரளபோகுது சத்தம் போடாமல் பிடிங்க பட்டா கத்தியை குடு //

சண்டே சினிமா போயிருக்கும், வந்ததும் கட்டிவக்கிறேன்.

முத்து said...

அந்த மரத்தின் வேரில் கொஞ்சம் சிங்கை புகழ் நியூ வாட்டரை ஊற்றுங்கள் பிறகு பாருங்கள் கச்சேரியை

முத்து said...

49

முத்து said...

50

Jey said...

//முத்து said...
அந்த மரத்தின் வேரில் கொஞ்சம் சிங்கை புகழ் நியூ வாட்டரை ஊற்றுங்கள் பிறகு பாருங்கள் கச்சேரியை //

இந்த ஐடியாவ பட்டா கூட சொல்லலையே முத்து.....

முத்து said...

நியூ வாட்டர்க்கும் மசியவில்லை என்றால் சொல்லுங்கள் கலா அக்காவிடம் சொல்லி மானாட மயிலாட க்ரூப்பை வைச்சு ஒரு குத்து டான்ஸ் போட சொல்லலாம்

Jey said...

இஙகயும் நீதான் வடைய கவ்வியிருக்கியா???!!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/////670 பக்கங்களில் 1947 ஆகஸ்டு 15 இல் இந்தியா விடுதலை அடைந்த நிகழ்வுகளை
வரலாற்று ஆவணங்களோடு இந்நூலுள் பதிவுசெய்யப்பெற்றளன.இந் நூலாசிரியர்கள்
டொமினிக் லேப்பியர்,லேரி காலின்ஸ் ஆவர்.தமிழாக்கம் செய்தவர்கள்
வி.என். ராகவன்,மயிலை பாலு ஆவர். தமிழாக்கம் மூலநூலைப் படிப்பது போன்ற
உணர்வினை ஏற்படுத்துகின்றது.////
முத்து ,
நள்ளிரவில் சுதந்திரம் புக் நியூ புக் லாண்டில் கிடைக்கிறது ...அவசியம் படிக்க வேண்டியது

முத்து said...

Jey said...


இந்த ஐடியாவ பட்டா கூட சொல்லலையே முத்து.....///////////


பட்டாவுக்கு புகழ்ச்சி பிடிக்காது

முத்து said...
This comment has been removed by the author.
முத்து said...

முத்து said...

பனங்காட்டு நரி said...

/////670 பக்கங்களில் 1947 ஆகஸ்டு 15 இல் இந்தியா விடுதலை அடைந்த நிகழ்வுகளை
வரலாற்று ஆவணங்களோடு இந்நூலுள் பதிவுசெய்யப்பெற்றளன.இந் நூலாசிரியர்கள்
டொமினிக் லேப்பியர்,லேரி காலின்ஸ் ஆவர்.தமிழாக்கம் செய்தவர்கள்
வி.என். ராகவன்,மயிலை பாலு ஆவர். தமிழாக்கம் மூலநூலைப் படிப்பது போன்ற
உணர்வினை ஏற்படுத்துகின்றது.////
முத்து ,
நள்ளிரவில் சுதந்திரம் புக் நியூ புக் லாண்டில் கிடைக்கிறது ...அவசியம் படிக்க வேண்டியது/////////////////


ரொம்ப நன்றி சார் கூடிய விரைவில் வாங்கி படிக்கிறேன்

senthil velayuthan said...

do u want serious remedy

Jey said...

senthil1426 said...
do u want serious remedy ////

yes sir, i'm not joking, its real issue.

Gayathri said...

உலகமே Global Warming ல பாதிக்க பட்டு கஷ்டபடுது இப்போ போய் ஒரு மரத்த வெற்றது என்பது வேன்டாமே.இப்படி ஒரு ஒரு காரனுத்துக்காக மரத்த வெட்டிட்டே போனா உலகத்துகே கேடு.
முடிந்தால் மரம் வெட்ட படுவதை தடுங்கள் தோழரே.தொட்டிதானே தள்ளிக் கட்டிக்கலாமே மரத்த தள்ளிவக்கவா முடியும் ?!#

Jey said...

Gayathri said...
உலகமே Global Warming ல பாதிக்க பட்டு கஷ்டபடுது இப்போ போய் ஒரு மரத்த வெற்றது என்பது வேன்டாமே.இப்படி ஒரு ஒரு காரனுத்துக்காக மரத்த வெட்டிட்டே போனா உலகத்துகே கேடு.
முடிந்தால் மரம் வெட்ட படுவதை தடுங்கள் தோழரே.தொட்டிதானே தள்ளிக் கட்டிக்கலாமே மரத்த தள்ளிவக்கவா முடியும் ?!# ||||||

பிளாட்ல நாலு குடும்பம் இருக்கு, ட்ண்ணீர் ப்ரிச்சினை சென்னைல ரொம்ப பெரிய பிரச்சினை மேடம், சேனைல ஒவ்வொரு சதுர அடியயும் வீணாகுரது இல்லன்ற பேர்ல, பிளாட்கட்டும்போதே, நீர் தொட்டிக்குனு ஒரு சின்ன இடத்தை ஒடுக்கிட்டு மீதிய முழுசா கட்டடம் கட்டி தொலைச்சிருராங்க, அதனால, நீர் தொட்டிக்குனு இருக்கிற ஒரே இட அது மட்டும்தான், கடந்த 3 வருஷத்துல இது மூனாவது வாட்டி புது தொட்டி கட்டவேண்டியதாச்சு, அதனாலதான், மரத்தோட அருமை தெரிஞ்சும் எமொஷனலா, அத வெட்டுர பேச்சு கிளம்பிருச்சு, உண்மையிலேயே 20 வருசத்துக்கு மேல வயசான மரத்தை செட்டனும்னு எழுந்த பேச்சுல , மனசு வலிச்சி எழுதுனதுதான் இந்த பதிவு. மரத்தை வெட்டுரது இல்லைன்ற முடிவு இன்னிக்கு கலந்து பேசினதுல முடிவாயிருச்சி. பக்க வேரை 20 அடிக்கு முன்னாலேயே வெட்டி நுனியில அசிட் ஊத்திட்டு கட்டுரதுனு முடிவாயிருக்கு. அந்த ஒரு பக்க வேரால மரத்துக்கு ஒன்னும் ஆகாதுன்னும் இங்க பலபேர் சொல்றாங்க.முடிவுல எனக்கு சந்தோசம்தான்.( நான் இந்த பதிவு எழுதுனதுகூட படிக்கிற யாராவது தன்களோட அனுபவத்துல பெட்டர் தீர்வு கொடுத்தா அத யூஸ் பன்றதுக்குதான்).

வருகைக்கும் கருத்துக்கும் நன்ரறி மேடம். ஜஸ்ட் ஒரு மரம்னு பாக்காம, தொலை நோக்கோட அட்னுகுற உங்க மனசுக்காதான், இந்த விளக்கம்:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////
ஜெ ஆடு மிரளபோகுது சத்தம் போடாமல் பிடிங்க பட்டா கத்தியை குடு //

சண்டே சினிமா போயிருக்கும், வந்ததும் கட்டிவக்கிறேன். ///

நான் சினிமா போனது உனக்கு எப்படியா தெரியும்..

வடுவூர் குமார் said...

என‌க்கு தெரிந்த‌ வ‌ழிக‌ள்....
ம‌ர‌த்தை வேறோடு பிடிங்கி வேறு இட‌த்தில் ந‌டுவ‌து
த‌ண்ணீர் தொட்டியை கான்கிரீட் சுவ‌ராக‌ மாற்றுவ‌து,இப்போது இருப்ப‌தே கான்கிரீட் சுவ‌ர் என்றால் வேர் வ‌ரும் ப‌குதியில் டேங்கின் சுவ‌ருக்கு ப‌க்க‌த்தில் ச‌ற்று இடைவெளிவிட்டு ம‌ற்றொரு த‌டுப்புச்சுவ‌ர் க‌ட்டுவ‌து.
கான்கிரீட் சுவ‌ர் க‌ட்டிவிட்டு அத‌னுள் பிளாஸ்டி டேங் வைப்ப‌து.
குடி நீர் வ‌ரும் பைப்பில் பூஸ்ட‌ர் ப‌ம்ப் வைத்து த‌ண்ணீரை மாடிக்கு மேல் ஏற்றி சேமிப்ப‌து.
இதில் ஏதாவ‌து ஒன்று ச‌ரியாக‌வ‌ரும் என்றால் ச‌ந்தோஷ‌மே!!

மங்குனி அமைச்சர் said...

தொட்டிக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" அப்படின்னு ஒரு போர்டு வச்சுடு

Jey said...

வடுவூர் குமார் said...

//இப்போது இருப்ப‌தே கான்கிரீட் சுவ‌ர் என்றால் வேர் வ‌ரும் ப‌குதியில் டேங்கின் சுவ‌ருக்கு ப‌க்க‌த்தில் ச‌ற்று இடைவெளிவிட்டு ம‌ற்றொரு த‌டுப்புச்சுவ‌ர் க‌ட்டுவ‌து.
கான்கிரீட் சுவ‌ர் க‌ட்டிவிட்டு அத‌னுள் பிளாஸ்டி டேங் வைப்ப‌து.
குடி நீர் வ‌ரும் பைப்பில் பூஸ்ட‌ர் ப‌ம்ப் வைத்து த‌ண்ணீரை மாடிக்கு மேல் ஏற்றி சேமிப்ப‌து.
இதில் ஏதாவ‌து ஒன்று ச‌ரியாக‌வ‌ரும் என்றால் ச‌ந்தோஷ‌மே!! ///

அரை அடி தள்ளி மற்றுருசுவர் கட்டுரது எற்கனவே முடிவுல இருக்கு,
அதுஉள்ள ஒரு பிளஸ்டிக் டேங்க் வைகிற ஐடியாவ இன்ஜினியர்கிட்ட கேகனும்.
தங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி வடுவூர் குமார்.
அடிக்கடி நம்ம கடை பக்கம் வாங்க:)

Jey said...

மங்குனி அமைச்சர் said...
தொட்டிக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" அப்படின்னு ஒரு போர்டு வச்சுடு //

எங்கேயா போயிருந்தே...., ரொம்ப சிம்பிளா, சூப்பரான ஐடியாவக் கொடுத்துருக்க, என் அருமை தெரியாம, நம்ம ஜெய்லானி பயபுள்ள , உன்னை பலிகொடுக்குரதா வேண்டிக்க சொல்லி ஆலோசன சொல்லிட்டு போய்ட்டான்யா...( ஏதும் உங்களுக்குள்ள வாய்க்கா தகராரு இருக்கா..)

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
////
ஜெ ஆடு மிரளபோகுது சத்தம் போடாமல் பிடிங்க பட்டா கத்தியை குடு //

சண்டே சினிமா போயிருக்கும், வந்ததும் கட்டிவக்கிறேன். ///

நான் சினிமா போனது உனக்கு எப்படியா தெரியும்..///

டேமேஜர் ரமேஷூக்கு, கமெடியான கேள்வியெல்லாம் இங்கெ தடை செய்யப்பட்டுள்ளது என்பதை பனிவண்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி அமைச்சர் said...
தொட்டிக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" அப்படின்னு ஒரு போர்டு வச்சுடு //

எங்கேயா போயிருந்தே...., ரொம்ப சிம்பிளா, சூப்பரான ஐடியாவக் கொடுத்துருக்க, என் அருமை தெரியாம, நம்ம ஜெய்லானி பயபுள்ள , உன்னை பலிகொடுக்குரதா வேண்டிக்க சொல்லி ஆலோசன சொல்லிட்டு போய்ட்டான்யா...( ஏதும் உங்களுக்குள்ள வாய்க்கா தகராரு இருக்கா..)////


அது ஒன்னும் இல்லை ஜெய், சின்னவயசுல இருந்தே இப்படிதான் , நான் அவன கேவலமா திட்டுவேன் , அவன் என்னைய ரொம்ப கேவலமா திட்டுவான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ஒரு ப்ளூ டூத் வங்கி தண்ணிய வேற எங்கயாவது transfer பண்ணு...

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் ஒரு ப்ளூ டூத் வங்கி தண்ணிய வேற எங்கயாவது transfer பண்ணு...////

வா ராசா, ஐடியா கொடுக்கிறேனு, நீயா வந்து மாட்டினயா..., மங்குனி ஆடு தானா வந்து மாட்டிகிச்சி, கட்டிவச்சிருக்கேன், சீக்கிரம் வா, இனி மஞ்சதண்ணி ஊத்தி பலியிடுரதுதான் பாக்கி, சீக்க்ரம்...சீக்கிரம்ம்...

சசிகுமார் said...

????????

ரகளை ராஜா said...

உங்க தகவலோட இதையும் சேத்துக்கங்க
ஒரு மனிதனனின் வாழ்நாள் முழுக்க போதுமான ஆக்சிஜனை நன்கு வளர்ந்த அரசமரம் ஒரு பகலில் வெளியிடும்.
அதிக ஆக்சிஜனை வெளியிட கூடிய மரங்களில் அரசமரம் முதலில் இருக்கிறது அடுத்து புங்கமரம்
தயவு செய்து அதை வெட்ட வேண்டாம்....

Jey said...

சசிகுமார் said...
???????? //

சார், நான் கொஞ்சம் டூப் லைட், எதுவா இருந்தாலும், வார்த்தைல சொல்லிருங்க. இல்லைனா எனக்கு புரியாது.

Jey said...

கடல்புறா said...
உங்க தகவலோட இதையும் சேத்துக்கங்க
ஒரு மனிதனனின் வாழ்நாள் முழுக்க போதுமான ஆக்சிஜனை நன்கு வளர்ந்த அரசமரம் ஒரு பகலில் வெளியிடும்.
அதிக ஆக்சிஜனை வெளியிட கூடிய மரங்களில் அரசமரம் முதலில் இருக்கிறது அடுத்து புங்கமரம்
தயவு செய்து அதை வெட்ட வேண்டாம்... ////

னீங்க சொல்லியிருக்கிறது , இன்னும் ஒரு 6 செய்தி எழுதல சார். எற்கனவே நான் பதிவுகள நீளமா போடுரதா புகார் இருக்கு, அதனாலதான், விட்டுட்டேன்:)

Gayathri said...

இத்தனை பொருமாயா பதில் சொல்லிருக்கேள் மிக்க நன்றி தோழரே ! நீங்கள் எடிதிர்க்கும் முடிவு நிம்மதியய் தந்தது.நன்றி

geeyar said...

பெட்ரோலிய பொருட்களை தொட்டிக்கும் மரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் ஆழமாக தோண்டி மணலுடன் கலந்து சில மீட்டர் பரப்பில் கொட்டிவிடுங்கள். குறைந்த செலவில் 2வீலர் ஒர்க்சாப்பில் கழிவு ஆயில் கிடைக்கும். அதிக அளவில் வாங்கி கொட்டுங்கள். பின்பு வேர் உங்கள் தொட்டி பக்கம் வராது.

Jey said...

geeyar said...
பெட்ரோலிய பொருட்களை தொட்டிக்கும் மரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் ஆழமாக தோண்டி மணலுடன் கலந்து சில மீட்டர் பரப்பில் கொட்டிவிடுங்கள். குறைந்த செலவில் 2வீலர் ஒர்க்சாப்பில் கழிவு ஆயில் கிடைக்கும். அதிக அளவில் வாங்கி கொட்டுங்கள். பின்பு வேர் உங்கள் தொட்டி பக்கம் வராது.///


முதன்முறையாக புது ஆலோசனை. நன்றிகள் பல.

palani said...

தடித்த கலாய் தகடினால் தொட்டிஎன் உள் அளவிற்கு டேன்க் செய்து தொட்டிக்குள் இறக்கி வைக்கவும். அல்லது இரும்பினால் அரை அங்குல மொத்த தொட்டியை வட்டேர்ப்ரூப் பெயிண்ட் செய்து சிமெண்ட் தொட்டிக்கு பதில் வைக்கலாம். பழைய மாட்டு வண்டி தண்ணீர் தொட்டிகள் கிடைக்குமே. அதை புதுபித்து தரை மட்டத்தில் வைத்து நீரை சேமித்து விடலாமே. எதற்கு பூமிக்கு அடியில்தான் சேமிக்க வேண்டுமா. கட்டாயம் இல்லையே.

Jey said...

palani said...
தடித்த கலாய் தகடினால் தொட்டிஎன் உள் அளவிற்கு டேன்க் செய்து தொட்டிக்குள் இறக்கி வைக்கவும். அல்லது இரும்பினால் அரை அங்குல மொத்த தொட்டியை வட்டேர்ப்ரூப் பெயிண்ட் செய்து சிமெண்ட் தொட்டிக்கு பதில் வைக்கலாம். பழைய மாட்டு வண்டி தண்ணீர் தொட்டிகள் கிடைக்குமே. அதை புதுபித்து தரை மட்டத்தில் வைத்து நீரை சேமித்து விடலாமே. எதற்கு பூமிக்கு அடியில்தான் சேமிக்க வேண்டுமா. கட்டாயம் இல்லையே.//

தங்களின் வருகக்கும், ஆலோசனைக்கும், நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails