January 13, 2013

சென்னை புத்தகத் திருவிழாவில்....



36-வது சென்னை புத்தகத் திருவிழா 2013






வீட்டிலிருந்து மாலை 3 மணி சுமாருக்கு கிளம்பி 4 மணிக்குள் ஸ்டால் இருக்கும் இடம் சேர்ந்துவிட்டோம். இடையில் வண்டி நிறுத்த 10 நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது, பார்க்கிங் ஃபுல். 

ஸ்டால் இருக்குமிடம் போகும் வழியிலேயே சிறுவர்களை ஈர்க்கும் விதமாக கார்டூன் கதாபாத்திர டிசைன்கள் ஓரமாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள், வீட்டில் எதுவும் கேக்கமாட்டோம் என்றவர்கள், அங்கேயே பிள்ளையார் சுழி போட்டு வாங்க வைத்தார்கள்....

ஸ்டால்கள் இருக்கும் இடத்திற்கு சற்று முன்னர் இருந்த ஆடிட்டோரியத்தில் மணிமேகலை பிரசுரத்தாரின் புத்தக வெளியீடு தொடர்பான நிழச்சி நடந்து கொண்டிருந்தது. வலைப்பதிவு நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களின் கவிதை புத்தகமும் இன்று வெளியாகிறது, அதற்கு அழைப்பும் விடுத்திருந்தார். வரும்போது அவரின் புத்தகத்தை நம் இணைய நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் காம்ளிமெண்டரி காபியாக ஒரு புத்தகம் அளித்தார்.


ஸ்டாலின் ஆரம்பம் கடைசி ஸ்டால் எண்ணிலிருந்து ஆரம்பித்திருந்தது... ஒவ்வொருகடையாக ஏறி இறங்க, குழந்தைகள் புத்தகம் வாங்கித்தருமாறு கேக்க ஆரம்பித்துவிட்டார்கள், குழந்தகளுக்கான கடை வரும் அப்போது வாங்கித்தருகிறோம் என்று சொன்னாலும் சமாதானமாகவில்லை.... பயந்ததுபோல் பையன் ஒரு புத்தகைத்தை கையில் எடுத்துக்கொண்டு அது வேண்டும் என்று சொல்லிவிட்டான். சரி என்ன புத்தகமென்று பார்க்கலாம், குடுடா என்று பார்த்தால்... அவ்வ்வ்வ்... அது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பாகம் 3.  நான் சொல்லிக் கேட்கவில்லை... வீட்டம்மனி சொல்லியும் முடியாதுனு சொன்னதில் எனக்கு மனதிருப்தி. முடிவில், கடைக்காரரை இது காலேஜ் படிக்கிறவங்க படிக்கிறது, ப்ரீகேஜிக்கி வேற கடையில் புத்தகம் இருக்கு என்று சொல்லச் சொல்லி, அவர் சொன்னதும் சமர்த்தாக குடுத்துவிட்டான்.
இனி சமாளிக்க முடியாதென்று அங்கிருந்து நேராக நம் நண்பரின், டிஸ்கவரி புக் ஸ்டால் (43& 44) சென்றோம். அங்கு குழந்தைகளுக்கான புக்ஸ் இல்லையென்று அறிந்து அதனை ஒட்டியிருந்த கடையில் புக்ஸ் வாங்கினோம்... பாப்பாவுக்கு 5 எண்ணிக்கையில், பையனுக்கு ஏற்ற புக் ஒன்றுதான் கிடைத்தது, சரி உனக்கு அடுத்த கடையில் வாங்கித்தருகிறோம் என்று சொல்லியும், அக்காக்கு மட்டும் நிறைய புக்ஸ், எனக்கு ஒன்னு மட்டும்தான்...நிறைய வேணும்னு சொல்லி ஸ்டாலை விட்டு வரமுடியாதென்று தர்ணா......


கடைசியில், கடை முதலாளி வந்து *பென்டென்* ப்ளாஷ் கார்டு செட் ஒன்றை அவனுக்கு அன்பளிப்பாக குடுத்ததும்தான்( நான் வேண்டாம் என்று சொல்லியும் அந்த அம்மனி ஆசையாக குடுக்கிறேன் என்று சொல்லி குடுத்துவிட்டார்கள்) கடையை விட்டு வெளியே வந்தான். அதை வாங்கி விலை பார்த்தால் ரூ125 என்றிருந்தது, வாங்கிய ஐநூத்தி சொச்ச மதிப்பிலான புத்தகங்களுக்கு 125ஐ லவட்டிவிட்டான், புத்திசாலிதான் :-)))


மேலும் சிலகடைகள், சென்று ஹிந்தி சொல்லித்தருவதற்கான புக் ஒன்று வீட்டம்மனி வாங்கியவுடன், வெளியே வந்து குழந்தைகளுக்கும் &அம்மனிக்கிம் ஐஸ்கிரீம், நான் ஸ்வீட் கார்ன் என்று முடித்துக்கொண்டு, இரண்டு வாட்டர் பாட்டில்கள் வாங்கி அதை கார்கோ பேண்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டு மீண்டும் அரங்கினுள். எல்லாக் குழந்தகளும் பலூன் வைத்திருந்தைப் பார்த்து பைசங்களும் கேட்க, விசாரித்தால் அது Z தமிழ் ஸ்டாலில் குடுப்பதாகச் சொன்னார்கள். அங்கு சென்று நாலைந்து வாங்கி பசங்களிடம் குடுத்தோம்.


அடுத்து கிட்ஸ் புன்னகை ஸ்டால் (Kids Punnagai -  GK TREASURE FOR JUNIOR STUDENTS) , ஜனவரி மாத இதழ் வாங்கிய கையோடு வருட சந்தாவுக்கும் அப்ளைசெய்துவிட்டு ( LKG to 5th STD படிக்கும் குழந்தகளுக்கு மிகவும் பயனுள்ள இதழ்), அடுத்ததாக  விவேகானந்தர் ஸ்டால், அங்கே ஒரு 3D சாமி படம், ஒரு கோல்டு கோட்டட் பிரிண்டிங் சாமி படம், சுற்றில் தொங்கவிட புதிதாக ஒரு விவேகானதர் படம்.


பக்கத்து ஸ்டாலில்(ஊட்டி ஸ்டால்) சமையல் தொடர்பான பொருகள் வைத்திருந்தார்கள். அதில் பட்டை, சோம்பு,மிளகு, சீரகம்னு  எல்லாத்திலேயும் ஒரு பாக்கெட் பார்சேல்ல்ல்ல் :-)))


சரி அடுத்து எந்தக்கடை என்று யோசித்துகொண்டே நகர்ந்த போது போன் மணி அடித்தது, கையில் பிடித்திருந்த பையனின் விரலை நழுவவிட்டு போன எடுத்தால் அஞ்சா சிங்கம் செல்வின். நாங்களும்  அரங்கில் தான் இருக்கிறோம் என்று. நான் நிற்கும் இடம் சொல்லிவிட்டு, போனை அணைத்து (30 செகண்ட் பேசியிருப்பேன்), சரி வாடா போலாம் என்று திரும்பி பார்த்தால், பையனைக்காணோம்...........


*10 நிமிடத்தில் அறிவிப்பு செய்யிம் இடத்தில் செய்த அறிவிப்பில் அங்கே சென்று அழைத்து வந்தோம். அந்த பத்து நிமிட பரபரப்பு.....  பிலாஸபி பிரபாகர், மெட்ராஸ் பவன் சிவக்குமார் என்று நண்பர்களும் ஓடியாடியது.... தனியாக எழுதுகிறேன்...*


பையனுக்கு என் மேல் சரியான கோபம். 10 நிமிடம் செலவளித்து பின் சமாதானம். சகஜமாக சிரிக்க ஆரம்பித்தான்.


மறுபடியும் டிஸ்கவரி ஸ்டால்... அங்கு பிளாக் & பிளஸ் நண்பர்கள் ஓவ்வொருவராக வர களைகட்டியது... வீட்டம்மனிக்கி எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தேன்,  ஒதுங்கி நிற்காமல் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தாள்.( நண்பர்களை பார்க்கத்தான் இங்கே கூப்பிட்டு வந்தீர்களா, எங்களுக்காக என்று பொய் சொன்னீர்களா என்று கேள்வி,அப்படி இல்லையென்றேன்), கிளம்புவதற்கு சற்று முன் மணிஜி அண்ணேன் மகளுடன் வந்திருந்தார் அவருடன் சிறிது அலவலாவல்.

கிளம்பும் முன் அனைவரையும் பார்த்து ஒரு நாள் வீட்டிற்கு அனைவரும் வாருங்கள், என்று அம்மனி அழைப்பு விடுத்தார்கள், அதற்குள் ஒரு அந்நியோன்யம் ஆகிவிட்டிருந்தார்கள், என்னிடமும், ஒரு நாள் அனைவரையும் அழைத்துவாருங்கள் என்றார்கள். பாப்பா அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துகள் சொன்னாள்.


அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, வரும் வழியில் வடபழனியில், நாளை பொங்கள் வைக்க மண்பானை ஒன்றும், மண் அடுப்பு ஒன்றும் வாங்கிக் கொண்டு வீடு வந்தாயிற்று.


குழந்தைகள் அவர்களுக்காக வாங்கி வந்த புத்தகங்களை விரித்து வைத்துக்கொண்டு.... இன்று இரவு 1 மணிக்கு மேல்தான் தூங்கச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்......


புத்தகக் திருவிழா விசிட் பசங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகிவிட்டது....................


டிஸ்கி : வீட்டம்மனி முன் பதிவர் நண்பர்கள் என்னை தொடர்ந்து கலாய்த்ததை, அம்மனியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை கலாய்த்ததை எழுதாமல் மறைத்து விட்டேன்)


என்றும் அன்புடன்

6 comments:

priyamudanprabu said...

:)

மகேந்திரன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்..

அஞ்சா சிங்கம் said...

:-))

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//கடைசியில், கடை முதலாளி வந்து *பென்டென்* ப்ளாஷ் கார்டு செட் ஒன்றை அவனுக்கு அன்பளிப்பாக குடுத்ததும்தான்( நான் வேண்டாம் என்று சொல்லியும் அந்த அம்மனி ஆசையாக குடுக்கிறேன் என்று சொல்லி குடுத்துவிட்டார்கள்) கடையை விட்டு வெளியே வந்தான். அதை வாங்கி விலை பார்த்தால் ரூ125 என்றிருந்தது, வாங்கிய ஐநூத்தி சொச்ச மதிப்பிலான புத்தகங்களுக்கு 125ஐ லவட்டிவிட்டான், புத்திசாலிதான் :-)))//
இதுக்குத்தான் குழந்தைகளையும் கூட்டிட்டுப் போகனுங்கறது.

மனோ சாமிநாதன் said...

தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

LinkWithin

Related Posts with Thumbnails