January 20, 2013

சென்னை புத்தகத் திருவிழா- பார்ட் 2


கடந்த ஞாயிறு குடும்பத்துடன் புத்தகக் கண்காட்சி சென்று குழந்தைகள் தொடர்பான புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அதில் பார்பி & பென்டென் மொம்மை (சுவரில் ஒட்டுவது) மிஸாகி, ஒரு வாரமாக குழந்தைகள் படுத்தி எடுத்துவிட்டார்கள்.

நேற்று பதிவர் சத்ரியன் ( Gopal Kannan) அவர்களின் கண்கொத்திப் பறவை கவிதைப் புத்தக அறிமுக விழா, நமது டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் (ஸ்டால் எண் 43 & 44 ) முன் ஏற்பாடகி இருந்தது. கூடவே நமது மின்னல் வரிகள் பாலகணேஷ் அண்ணனின் சரிதாயணம் @ சிரிதாயணம் நகைச்சுவை கதைகள், மற்றும் பதிவர் நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களின்  அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா? என்ற கவிதைப் புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டது.

சத்ரியனின் கண்கொத்திப் பறவை அறிமுக வெளியீடு
கேபிள், புலவர்,முரளிதரன்






கவியாழி கண்ணதாசனின் அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?  கவிதை புத்தகம் அறிமுக வெளியீடு. மெட்ராஸ்பவன் சிகக்குமார் & கவியாழி கண்ணதாசன். பின்னனியில் தமிழ்அமுதன்(ஒயிட் &பிளாக் டி-சர்ட்) பாலகணேஷ், நான்,முரளிதரன், கேபிள் சங்கர் & கவிஞர் மதுமதி.

பாலகணேஷ் அண்ணனின் சரிதாயணம் @ சிரிதாயணம் புத்தக அறிமுக வெளியீடு. கவியாழி கண்ணதாசன், நான், கேபிள் சங்கர், பாலகணேஷ், புலவர், அஞ்சா சிங்கம்.


நான் மதியம் சாப்பாடு முடிந்து, நேராக மெட்ராஸ்பவன் சிவக்குமார் வீடு சென்றுவிட்டேன் அங்கே, டெர்ரர் பதிவர் ஆரூர் மூணா செந்தில் ஏற்கனவே அங்கே உக்கார்ந்து டீ சாப்பிட்டு கொண்டிருந்தார். சிவாவின் அம்மா எனக்கும் டீ குடுத்தார்கள். சக பதிவர்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, போன வாரம் புத்தகண்காட்சியில், என் பையனை தொலைத்து மீட்ட கதை கேட்டார்கள். பயபுள்ளை எல்லாத்தையும் அம்மவிடம் ஒப்பித்துவிடுவாம் போல் இருக்கிறது. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம், சிவா ஒரு பெண் பின்னாடி சுற்றுவதாகவும் விரைவில் கால்கட்டு போட்டுடனும்னு சொன்னோம், என்னிடம் அப்படி யாரையாச்சும் கூட்டிட்டு வந்தாலும் சந்தோசம் என்று சொன்னாலும், பிறகு சிவாவுக்கு மண்டகப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் ஒத்துக்கொள்ள மாட்டான்.

புத்தகக் கண்காட்சியில் நேற்று நுழைவு டிக்கெட் எடுப்பதற்கே நீண்ட வரிசை இருந்தது. எங்களுடன் பதிவுலகின் மற்றுமொரு ரெட்டையர்களான பிலாஸபி பிரபாகரன் & அஞ்சா சிங்கம் செல்வின் இருவரும் சேர்ந்து கொண்டார்கள். ஸ்டால் எண் 1 லிருந்து ஆரம்பித்து 43& 44 டிஸ்கவரி வந்ததும் அங்கே தெரிந்த முகங்கள் இருக்கிறதா என்று பார்த்தோம், பதிவர் கே ஆர் பி செந்தில் தனது இரு பையன்களுடன் நின்றிருந்தார். பையன்கள் பக்கத்துக் கடையில் அஞ்சாரு புத்தகங்களை (கலரிங், ட்ராயிங் )ஆசையோடு கையில் வாங்கி வைத்திருந்தார்கள். (பசங்க படம் போடமாலா என்று நினைத்து, அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு போடலாமென்று இந்த பதிவில் போடவில்லை)

சிறிது நேரத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டது.... புலவர் அய்யா, கவியாழி கண்ணதாசன், பாலகணேஷ், சத்ரியன், அஞ்சாசிங்கம், ஆரூர் மூனா செந்தில், மதுமதி, பிலாஸபி பிரபாகரன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், கேபிள் சங்கர், தமிழமுதன், டிஎன் முரளிதரன், பெண்பதிவர்கள் சசிகலா, தமிழரசி, பத்மா நாரயணன், வெண்ணிலா, சாகிதா, செல்வி சமீரா,  மற்றும் எனக்கு அறிமுகமில்லாத நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.

புக் வெளியிட்டு பேசுவதற்கு நமது சக பதிவர் நண்பர் புதுகை அப்துல்லா அண்ணேன் வருவதாக இருந்தது, அவர் வீட்டி முதல் நாள் இரவில் துக்கம் நிகழ்ந்துவிட்டதால், ஊர் சென்று விட்டார், அவரால் கலந்து கொள்ள முடியாத நிலை.

எனவே இன்ஸ்டண்ட் உப்புமா போல், பதிவுலகின் உச்சம் பதிவர் கேபிள் சங்கர் அவர்களை அழைத்து புக் அறிமுகம் செய்து வெளியீடு செய்யப்பட்டது. கேபிள் வெளியிட புலவர் மற்றும் பெண்பதிவர்கள் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்கள். சத்ரியன் புத்தகம் பற்றி சிறிது பேசிவிட்டு நன்றியுரை ஆற்றினார்.

பின் அணைவரும் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடைக்கு பயணமானோம். கூடியிருந்தது 25 பதிவர்கள் எண்ணிக்கையில் இருக்கும், ஆனால் ஜூஸ் எண்ணிக்கை 50ஐயும் தாண்டிக் கொண்டிருந்தது,  

நான் ஒரு ஜூஸ்தான் குடித்தேன். 

 எப்படித்தான் இப்படி எல்லா வெரைட்டி ஜூஸ்களையும் ஒரே நேரத்தில் குடிக்கிறார்களோ!!! தெரியவில்லை :-))), அதுவும் சக பதிவர் வாங்கிக் குடுத்தால் மொட்டைதான் :-)))

இதில் பத்மா அக்கா மூன்று ஜூஸ் குடித்தார்கள், ஆப்பிள், ஆரஞ்சு & லிச்சி ஜூஸ், டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று செக் செய்தார்களாம் :-))
பத்மா அக்கா ரெண்டு ஜூஸ்களுடன், முடித்துவிட்டு முன்றவது ஜூஸ் குடித்தார்  :-))


பிலாஸபி பிரபாகரன் நான்கு ஜூஸ் என்று நினைவு, மெட்ராஸ் ரெண்டு, ஆரூர் மூனறா நான்கா என்று நினைவில்லை. செல்வின் ஓரத்தில் ரெண்டு ஜூஸ் கிளாசுடன் நின்றிருந்ததைப் பார்த்தேன் அது எத்தனையாவது ரவுண்ட் என்று தெரியவில்லை.

பெண்பதிவர்கள், ஜூஸ் பத்தவில்லை, நாங்கள் பக்கத்து ரெஸ்டாரண்ட் செல்கிறோம் வருகிறீர்களா என்று கூப்பிட்டார்கள், கைப்புள்ள சிக்கிறாத என்று உள்மனது விசில் அடித்ததால்,  நீங்க போயிட்டிருங்கக்கா பசங்க கூப்பிடுறாங்க என்று அவ்ர்களை அனுப்பிவிட்டு மறுபடியும் பசங்களோடு புக் ஸ்டால்கள் பயணம்.

நேற்றுதான் நாங்க ஐவரும் சேர்ந்து ஒரு ஸ்டால் விடாமல் விஜயம் செய்தோம். ஆரூர் மூனா செந்தில் சுமக்க முடியாத அளவுக்கு ( அவர் சைசுக்கு சும க்க முடியாத அளவுனா அது எம்புட்டுனு நீங்களே கணக்கு போட்டுக்குங்க மக்களே) புத்தகங்கள் வாங்கி விட்டார், என் கைகளில்ம் மூன்று பைகள் ஆகிவிட்டது.



சுயமரியாதை ஸ்டாலில் நாற்காலி போட்டிருந்ததால் நான் அதிலொன்றில் அமர்ந்தேன், பக்கத்து சேரில் திக கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர், புத்தக கண்காட்சி பயனுள்ளதாக இருந்ததா உங்களின் கருத்து என்ன என்ற கேள்வியுடன் உரையாடலை ஆரம்பித்தார்.... அது முடிவில் பெரியார் கொள்கைகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக இன்றைய காலகட்டத்தில் எப்படி இருக்கிறது,  பெரும்பாலும் இன்று அவருடைய கொள்கைகளை அரசியல் மற்றும் சொந்த நலன் வேண்டி தற்போதைய அதன் தலைவர்கள் நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள்,  பெரியாரின் அடிபப்டையான சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கு மக்களிடம் அமோக ஆதரவிருந்தாலும் அந்தக் கொள்கைகளை தற்போதைய யதார்தத்தில் எந்தளவுக்கு சரியாக பரப்புரை செய்கிறார்கள் என்கிற ரீதியில் இருந்தது.


ஆனால் கட்சியின் மாநில பொறுப்பில் உள்ள ஒருவர் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் தோளில் கைபோட்டுக்கொண்டு சரிசமமாக அவரின் கருத்துக்களை அழகாக பேசினார். அவர் பேசியது வெகு யதார்த்தமாக , இருக்கும் பிரிச்சினைகளின் அடிப்படையில் அதற்கான தீர்வாக ஒன்றைவைத்து போராடும் பெரியாரின் பேச்சுக்களின் சாரம் இருந்தது. அவருக்கு நன்றிகள் பல. அவரிடம் விடைபெற்று வெளியில் உள்ள மெடை அரங்குக்கு வந்தோம்.


சிறிது இளைப்பாறல் வைகோ பேசுவதாக இருந்தது , அங்கே அதற்காக அங்கே இளைஞர்கள் அதிகமான விகிதாச்சாரத்தில் அவரை எதிர் பார்த்துக் காத்திருப்பதாகவே பட்டது.
பிலாசபி பிரபாகரன், நான், அஞ்சாசிங்கம் செல்வின் & ஆரூர் மூனா செந்தில். ப்டம் பிடித்தது மெட்ராஸ்பவன் சிவக்குமார்.மேடைக்கு முன், நடந்து  கால் வலித்ததால் கொஞ்சம் ஓய்வு :-)))


வைகோவின் வரவை எதிர் பார்த்து! அரங்கில் கூட்டம்.

கைல இருக்கிற மொபைல் போனை வச்சிகிட்டு வளைச்சி வலைச்சி போட்டோ எடுத்துகிட்டேன் இருந்தான் சிவக்குமார், காமிக்கச் சொன்னா காமிக்கலை. அங்கே இருந்த ஒரு பெண் முறைக்கவும் ஓடிவந்து என் பக்கத்தில் அமர்ந்தார் என்பதை, நான் பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை.

இடையில் YMCA கேண்டீன் விஜயம், காபி பிஸ்கட்ஸ், ஆரூர் கலராக இருக்கிறதே என்று நீலக்கலர் எனர்ஜிட் டிரிங் வாங்கி, அதை ஒரு வாய் குடித்து விட்டு முகத்தை அஷ்டகொணலாக்கிக் காட்டியது சுவாரஸ்யம். மனுசன் இனிமேல் கிரிக்கெட் பார்க்கும் போது பயபுள்ளைக கலர்கலரா கலர் குடிப்பதைப் பார்த்து இனிமேல் சிரிப்பார் :-))

திரும்பும் முன் பார்பி & பென் டென் பொம்மை மறக்காமல் ( ஞாபகப் படுத்திய பிலாசபிக்கி நன்றி) வாங்கியாகிவிட்டது. வீட்டில் வந்து சுவற்றில் ஒட்ட குழந்தைகளுக்கு மகிழச்சியில் துள்ளிக் குதித்தார்கள்.
வீட்டில் வந்து சுவற்றில் ஒட்டப்பட்ட பார்பி & பென்டென் பொம்மைஸ்.



இப்படியாக நேற்றைய புத்தகக் கண்காட்சி விசிட் இனிதே முடிந்தது.



44 comments:

சசிகலா said...

தலைப்பை சரி பார்க்கவும். எப்படி புகைப்பபடங்கள் இல்லாமல் பதிவிடுவது என நினைத்தேன். சரியான நேரத்தில் பதிவிட்டு எனக்கு உதவியமைக்கு நன்றிங்க. சில படங்களை சுட்டுவிட்டேன்.

பட்டிகாட்டான் Jey said...

ட்லைப்பு சரி பார்த்து விட்டேன், சுட்டியமைக்கு நன்றி அம்மணி.

நீங்க இருந்த ப்டம் போடலாமா வேண்டாமா என்று சிறுது தங்கி பின் பெர்யரக்ள் மட்டும் குறிப்பிடாமல் போட்டுவிட்டேன்.

சத்திரியனின் புக் வெறியீடுக்கான வேறு படம் இல்லை. :-))

Anonymous said...


கூட இருந்த பதிவுலக நண்பர்களை கழற்றிவிட்டு முதல் படத்தில் இருக்கும் பெண் பதிவர்களிடம் நீண்ட நேரம் சொற்பொழிவு ஆற்றிய சிட்டிக்காட்டானே. நல்லா வருவீங்க!!

Anonymous said...

என் போட்டோவிற்கு கீழே சிகக்குமார் என்று எழுதியதை சரி செய்யவும்.

Anonymous said...

//பயபுள்ளை எல்லாத்தையும் அம்மவிடம் ஒப்பித்துவிடுவாம் போல் இருக்கிறது. //

உங்கள் கதையை கேட்காத ஒரே அம்மா 'ஜெ' மட்டுமே :))

Anonymous said...


// என்னிடம் அப்படி யாரையாச்சும் கூட்டிட்டு வந்தாலும் சந்தோசம் என்று சொன்னாலும், பிறகு சிவாவுக்கு மண்டகப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் ஒத்துக்கொள்ள மாட்டான்.//

ஹா..ஹா...வீட்டுக்கு தெரியாம 'பீர்' அடிச்சிட்டு நீங்க முதுகு பஞ்சர் வாங்கற மாதிரி வருமா???

பட்டிகாட்டான் Jey said...

எலேய் மெட்ராசூ அவங்களும் எனக்கு நண்பர்கள்தானே மக்கா, உங்களையாவது அடிக்கடி பார்ப்பேன் அதான் கொஞ்ச நேரம் அவங்களோட பேசினேன். :-)))

அவங்களாவது சாப்பிடக் கூப்பிட்டாங்க.... நீங்க கூப்பிட்டீங்களாடா... பேசுறத மட்டும் வக்கனையா பேசுங்க :-))))))

பட்டிகாட்டான் Jey said...

// என் போட்டோவிற்கு கீழே சிகக்குமார் என்று எழுதியதை சரி செய்யவும். //

என் பதிவுல வந்து எழுத்துப்பிழை கண்டுபிடிச்சிட்டு உன் வீரத்தக் காட்டாதே மக்கா ஊர் சிரிக்கப் போவுது.

என் பதிவுல எழுத்துப்பிழை இல்லனாதான் அதிசயம் :-)))

Anonymous said...


//பெண்பதிவர்கள் சசிகலா, தமிழரசி, பத்மா நாரயணன், வெண்ணிலா, செல்வி தூயா//

என்னா ஒரு ஞாபக சக்தி!!! பன்னிக்குட்டி பாத்துக்கங்க பட்டிக்ஸ் அப்டேட்டை.

Anonymous said...

//நான் ஒரு ஜூஸ்தான் குடித்தேன். //

இதுக்கு தனி பேராகிராப் அளவு இடம் வேற. கதைல முக்கியமான டுவிஸ்டு போல!!

Anonymous said...

//பெண்பதிவர்கள், ஜூஸ் பத்தவில்லை, நாங்கள் பக்கத்து ரெஸ்டாரண்ட் செல்கிறோம் வருகிறீர்களா என்று கூப்பிட்டார்கள், கைப்புள்ள சிக்கிறாத என்று உள்மனது விசில் அடித்ததால், நீங்க போயிட்டிருங்கக்கா பசங்க கூப்பிடுறாங்க என்று அவ்ர்களை அனுப்பிவிட்டு மறுபடியும் பசங்களோடு புக் ஸ்டால்கள் பயணம்.//

அந்த பயம் இருக்கட்டும்!!

Anonymous said...


//என் கைகளில்ம் மூன்று பைகள் ஆகிவிட்டது.//

'கைல என்ன'

'பையி'

'பைல என்ன'

'கையி'

'பைக்குள்ள என்னய்யா?'

Anonymous said...


// பக்கத்து சேரில் திக கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்,//

தெய்வமே...அவர் துணைப்பொதுச்செயலலாளர். கழகத்துல கலகத்தை உண்டாக்காமல் பிழையை சரி செய்யுங்க.

Anonymous said...



// அங்கே இருந்த ஒரு பெண் முரக்க ஓடிவந்து என் பக்கத்தில் அமர்ந்தார் என்பதை, நான் பொதுவெளியில் சொல்ல் விரும்பவில்லை.//

இந்த அல்வாவை வேறு கடையில் விற்கவும்.

Anonymous said...


//Sasi Kala said...
சில படங்களை சுட்டுவிட்டேன்.//

அந்த ரிவால்வர் ரீட்டா நீங்கதானா??

Anonymous said...


//பட்டிகாட்டான் Jey said...
எலேய் மெட்ராசூ அவங்களும் எனக்கு நண்பர்கள்தானே மக்கா, உங்களையாவது அடிக்கடி பார்ப்பேன் அதான் கொஞ்ச நேரம் அவங்களோட பேசினேன். :-)))

அவங்களாவது சாப்பிடக் கூப்பிட்டாங்க.... நீங்க கூப்பிட்டீங்களாடா... பேசுறத மட்டும் வக்கனையா பேசுங்க :-))))))//

குடும்ப பதிவர் பட்டிக்ஸ் வாழ்க!!

Anonymous said...

//பட்டிகாட்டான் Jey said...
ட்லைப்பு சரி பார்த்து விட்டேன், சுட்டியமைக்கு நன்றி அம்மணி.

நீங்க இருந்த ப்டம் போடலாமா வேண்டாமா என்று சிறுது தங்கி பின் பெர்யரக்ள் மட்டும் குறிப்பிடாமல் போட்டுவிட்டேன்.

சத்திரியனின் புக் வெறியீடுக்கான வேறு படம் இல்லை. :-))//

புக் 'வெறி' யீடா??? நல்லவரே எழுத்துப்பிழை கூட பரவாயில்லை. பொருட்பிழை பொங்கி வழிகிறது. சரி செய்யவும்.

Anonymous said...

//பத்மா அக்கா ரெண்டு ஜூஸ்களுடன், முடித்துவிட்டு முன்றவது ஜூஸ் குடித்தார் :-))//

ரெண்டாவது ஜூஸ் குடித்த பின்பு மூன்றாவது ஜூஸ் குடிப்பதை ஒரு செய்தியாக பகிர்ந்த பட்டிக்காட்டானை ஐ.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட உலக அதிசயமாக அறிவிக்கிறோம் அன்புடையீரே!!

வவ்வால் said...

பட்டிக்காட்டார்,

இந்த விசிட்டின் போது எதுவும் கலாட்டா இல்லாதது சப்புனு இருக்கு:-))
---------

ராமராஜன்,பாக்யராஜுக்கு அப்பாலிக்கா மெட்ராஸ் சிவக்குமார் தான் , இந்த மாதிரி ஆடை வடிவமைப்பை பயன்ப்படுத்துறார் :-))

நேரா சட்டை நல்லா தெரியிறாப்போல படம் போட்டிருக்கலாம் :-))
---------

அட டா பிலாசபியப்பார்த்தா இளையப்பெரியார் ஆகிடுவார் போல இருக்கே :-))
----------

ஜீசுல 3 வெரைட்டி மட்டும் தான் இருந்துச்சா , எல்லாம் 3 ஆவது ரவுண்டோட நிப்பாட்டிடாங்க?

பட்டிகாட்டான் Jey said...

[[[ //பெண்பதிவர்கள் சசிகலா, தமிழரசி, பத்மா நாரயணன், வெண்ணிலா, செல்வி தூயா//

என்னா ஒரு ஞாபக சக்தி!!! பன்னிக்குட்டி பாத்துக்கங்க பட்டிக்ஸ் அப்டேட்டை. ]]]

உங்க பேர் எல்லாம் எனக்கு ஞாபகம் எப்படி இருக்கோ அது மாதிரிதான் இதுவும்.:-))

பட்டிகாட்டான் Jey said...

// தெய்வமே...அவர் துணைப்பொதுச்செயலலாளர். கழகத்துல கலகத்தை உண்டாக்காமல் பிழையை சரி செய்யுங்க. //

சரி விட்ரா விட்ரா... இம்புட்டு ஞாபகம் வச்சிருந்ததே பெரிய விசயம் :-))))

பட்டிகாட்டான் Jey said...

[[[
// வவ்வால் said...
பட்டிக்காட்டார்,

இந்த விசிட்டின் போது எதுவும் கலாட்டா இல்லாதது சப்புனு இருக்கு:-))

--------

ராமராஜன்,பாக்யராஜுக்கு அப்பாலிக்கா மெட்ராஸ் சிவக்குமார் தான் , இந்த மாதிரி ஆடை வடிவமைப்பை பயன்ப்படுத்துறார் :-))

நேரா சட்டை நல்லா தெரியிறாப்போல படம் போட்டிருக்கலாம் :-))
---------

அட டா பிலாசபியப்பார்த்தா இளையப்பெரியார் ஆகிடுவார் போல இருக்கே :-))
----------

ஜீசுல 3 வெரைட்டி மட்டும் தான் இருந்துச்சா , எல்லாம் 3 ஆவது ரவுண்டோட நிப்பாட்டிடாங்க?
]]]]

வவ்வால் இந்த தடவை தனியா போனதால பயபுள்ளைக பம்மிட்டாய்ங்கே....:-)))

ஆமாம் அங்கே மூனு வெரைட்டிதான் வச்சிருந்தாங்க.... இவங்க குடிச்சி முடிஞ்சி கடையே காலிபண்ணிட்டு போய்டாங்க.... எல்லாத்தையும் குடுச்சிட்டா பிறகு அங்கே என்ன மீதி இருக்கும் :-)))))))

பட்டிகாட்டான் Jey said...

// ரெண்டாவது ஜூஸ் குடித்த பின்பு மூன்றாவது ஜூஸ் குடிப்பதை ஒரு செய்தியாக பகிர்ந்த பட்டிக்காட்டானை ஐ.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட உலக அதிசயமாக அறிவிக்கிறோம் அன்புடையீரே!! //

மெட்ராசூ, ரெண்டு கைலயும் ஜூஸ் கிளாஸ் வச்சிருக்கும் போது எப்படி ம்ன்னாவது கிளாஸ் கைல எடுக்க முடியும். அதான் அதை முடிச்சிட்டு முனாவதுனு சொல்லிருக்கேன், இடையில் கமா போட்டிருந்தேன் மக்கா, சரியா கலாய்க்கிர அவசரத்துல கவனிக்கலையோ :-)))

சத்ரியன் said...

நண்பர்கள் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

Philosophy Prabhakaran said...

// மெட்ராஸ்பவன் சிகக்குமார் //

எழுத்துப்பிழை இல்லாம எப்பதான் எழுதிப் பழகப்போறீங்களோ??

என்கிட்ட சகவாசம் வச்சிகிட்டும் இப்படி தப்பும் தறுமா எழுத்துப்பி ழையோட எழுதினா என்னை என்ன நினைப்பாங்க.... பார்த்துப்பா. :-))

Philosophy Prabhakaran said...

சத்ரியனும் கோபால் கண்ணனும் ஒரே ஆளுன்னு இப்பதான்யா தெரியுது...

Philosophy Prabhakaran said...

புலவர் அய்யா... ம்ம்ம் ம்ம்ம் நடத்துங்க...

Philosophy Prabhakaran said...

அப்புறம் பட்டிக்ஸ், திகவை பொறுத்தவரையில் பதவிகள் எல்லாம் ஹம்பக் தான்... வீரமணி ஆதிக்கம் பண்றாருன்னு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு சும்மாக்கா டம்மிகளை முக்கிய பொறுப்பில் உட்கார வைப்பார்கள்...

Philosophy Prabhakaran said...

மொத்தம் நாலு ஃப்ளேவர் இருந்துச்சு பட்டிக்ஸ்... லிச்சி, ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி...

கார்த்திக் சரவணன் said...

ஜூஸ் எதுவுமே ஒரிஜினல் இல்லை. ஏதோ எசென்ஸ் கலன்ட்னு விற்கிறார்கள். ஒரு கப் 15 ரூபாய். கொள்ளை லாபம்..

Anonymous said...



வவ்வால்

//ராமராஜன்,பாக்யராஜுக்கு அப்பாலிக்கா மெட்ராஸ் சிவக்குமார் தான் , இந்த மாதிரி ஆடை வடிவமைப்பை பயன்ப்படுத்துறார்//

போங்கண்ணே.. எனக்கு வெக்க வெக்கமா வருது.

பட்டிகாட்டான் Jey said...

சத்ரியன் உங்களோட அடுத்த கவிதை புக், ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வச்சி வெளியிடலாம், பஃப்வே மதியச் சாப்பாட்டோடு :-)))))))

சிங்கப்பூர்ல இருக்கிறவருக்கு அதுதான் அழகு :-)))

பட்டிகாட்டான் Jey said...

// சத்ரியனும் கோபால் கண்ணனும் ஒரே ஆளுன்னு இப்பதான்யா தெரியுது... //

ரைட்டூ :-)

//
புலவர் அய்யா... ம்ம்ம் ம்ம்ம் நடத்துங்க...
//

இது எதுக்குடா?

// திகவை பொறுத்தவரையில் பதவிகள் எல்லாம் ஹம்பக் தான்...
//
அதுவுஞ்சரித்தேன். மித்தவங்களை டம்மியா வச்சிகிட்டாதான் அவர் பொழைக்கமுடியும்!.

//
மொத்தம் நாலு ஃப்ளேவர் இருந்துச்சு பட்டிக்ஸ்... லிச்சி, ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி...
//

அதா நாலு கிளாஸ் குடிச்சியா... என் கிட்ட மூனு வெரைட்டி பேர்தான் சொன்னாங்க.

பட்டிகாட்டான் Jey said...

// ஸ்கூல் பையன் said...
ஜூஸ் எதுவுமே ஒரிஜினல் இல்லை. ஏதோ எசென்ஸ் கலன்ட்னு விற்கிறார்கள். ஒரு கப் 15 ரூபாய். கொள்ளை லாபம்..
//

ஆமாம்ப்பா, அப்படித்தான் தெரியுது... டேஸ்ட் அம்புட்டு நல்லா இல்லை. விலை ரூ 15 ஆ இது கொள்ளைதான். நண்பர் குடுத்ததால விலை கேக்காம விட்டுட்டேன் :-)

குட்டன்ஜி said...

நன்கு பொழுதுபோக்கி விட்டீர்கள்!எனக்குத்தான் யாரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை!

வவ்வால் said...

மதராசு சிவக்குமார்,

//போங்கண்ணே.. எனக்கு வெக்க வெக்கமா வருது. //

டிரஸ்ஸே போடாமப்போனாத்தான் வெட்கப்படணும் ,அதான் தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் கிங்குகள் போட்ட ஆடை வடிவமைப்பில் டிரஸ் போட்டு கலக்கிட்டு என்னாத்துக்கு வெட்கம்?

ரெடிமேடா, இல்லை ஆர்டர் குடுத்து தச்சதா?

அந்தக்காலத்தில ராமராசர் , முன் பக்கம் லெஃப்ட் பச்சை,ரைட் ஒயிட், பின் பக்கம் ரைட் சைட் பச்சை,லெஃப்ட் சைட் ஒயிட்னு மாறுபட்ட வண்ணத்தில் சொக்கா போட்டுக்கிட்டு, கழுத்தில மப்ளர் சுத்திக்கிட்டு ,அம்மானா சும்மா இல்லைடானு பாடிகினு போறத பார்த்தாலே தாய்குலம் கண்ணுகலங்கி ,மூக்கை சிந்தும்ல :-))

பதிவுலகின் மக்கள் நாயகன் சிவக்குமார் வாழ்க :-))
---------

பட்டிக்காட்டார்,

ஓ தனியா போனதால தப்பிச்சாங்க, பெரிய கேங்க் லீடரா இருப்பிங்க போல?

கடைக்காலியானதுல கடைக்காரர் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார் , டெய்லி இதே போல பதிவர்கள் கும்பலா வரணும்னு குல தெய்வத்துக்கிட்டே வேண்டுதல் கூட செய்திருப்பார் :-))

வவ்வால் said...

ஹி..ஹி 3 ஜூஸ் குடிச்ச ஒருத்தங்க என்கிட்டே மாட்டிக்கிட்டாங்க, இனிமே பேசிக்கிறேன் :-))

பால கணேஷ் said...

இந்தப் பயபுள்ள சிவாவை ஒருநாள் அவுங்க வீட்டுக்குப் போய் மாட்டி விட்ரலாம்னு பாக்கறேன். எனக்கு சான்ஸே அமையல இன்னும். புத்தகக் கண்காட்சிக்குப் போய் வந்ததை ரசனையோட எழுதியிருக்கப்பா. ஆரூர் மூனா செந்தில் அவரை விட கனமான புத்தகங்கள் வாங்கினதைப் பாத்து நானும்ல ஆச்சரியப்பட்டேன்.

பால கணேஷ் said...

உன் ஞாபக சக்தியைக் கொளுத்த! அங்க வந்தது செல்வி தூயா இல்லப்பா... செல்வி சமீரா! தூயான்னு நீ எழுதினதை என் தங்கச்சி ராஜி பாத்தா... எனக்குத்தான் ‌டோஸ் விழும்!

பட்டிகாட்டான் Jey said...

// உன் ஞாபக சக்தியைக் கொளுத்த! அங்க வந்தது செல்வி தூயா இல்லப்பா... செல்வி சமீரா! தூயான்னு நீ எழுதினதை என் தங்கச்சி ராஜி பாத்தா... எனக்குத்தான் ‌டோஸ் விழும்! //
அவ்வ்வ்வ். இப்பம் மாத்திடுறேன். :-)))

பட்டிகாட்டான் Jey said...

// குட்டன் said...
நன்கு பொழுதுபோக்கி விட்டீர்கள்!எனக்குத்தான் யாரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை //

நாமலும் ஒரு நாள் சந்திப்போம் குட்டன் :-)))

பட்டிகாட்டான் Jey said...

// பதிவுலகின் மக்கள் நாயகன் சிவக்குமார் வாழ்க :-)) //

பதிவுலகின் மெகா பவர் ஸ்டார் மெட்ராசூ வாழ்க வாழ்க :-))))

கவியாழி said...

ஜூஸ் யாரெல்லாலம் குடித்தார்கள் என்பதை சொல்லிவிட்டு யார்?யார்? வங்கிக் கொடுத்தார்கள் என்று சொல்லவில்லையே?

பட்டிகாட்டான் Jey said...

// கவியாழி கண்ணதாசன் said...
ஜூஸ் யாரெல்லாலம் குடித்தார்கள் என்பதை சொல்லிவிட்டு யார்?யார்? வங்கிக் கொடுத்தார்கள் என்று சொல்லவில்லையே?//

சத்ரியன், குடுத்தாரு அடுத்தரவுண்ட் நீங்களும் சொன்னீங்க...நீங்க ரெண்டு பேரும்தான் பில் செட்டில் பண்ணீங்களா?

எல்லாரும் ஜூஸ் நல்லாருந்ததா இல்லையான்றதுலதான் கவனமா இருந்தோம் யார் வாங்கித் தந்தாங்கன்னு கவனிக்கலியே :-)))))

LinkWithin

Related Posts with Thumbnails