November 21, 2012

L K G - சேர்க்கை பரபரப்புகள்....



ஞாயிற்றுக்கிழமை.....

”இன்னிக்கி ஹிண்டுல விளம்பரம் வந்தாச்சு, 21ந்தேதி Online-ல Applyபண்ணிடுங்க”,  மலையாளி அசோசியேசன் ஆண்டுவிழாவிற்கு போனபோது மிஸ் சொல்ல பரபரப்பு தொற்றிக்கொண்டது...... வீட்டில் வாங்குவது டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 வருடங்கள் முன் ஹிண்டுவின் மேல் இருந்த ஏதோ வெறுப்பில் அதை நிறுத்தி விட்டு TOI மாறியது தவறோ...

மறுநாள் காலையில் பேப்பர் கடையில் போய் கேட்டால், விற்காத பேப்பர்ஸ் எல்லாம் அதிகாலையிலேயே ரிட்டர்ன் போய் விட்டதென்ற பதில். தெரிந்த நண்பர் வீட்டிலிருந்து இரவலாக ஹிண்டு வாங்கி வந்து  பக்கம் பக்கமாக பொறுமையாக தேட ஆரம்பித்து, என் கண்களில் படவே இல்லை....

தங்கஸ் வாங்கி பொறுமையுடன் பக்கம் பக்கமாக பார்த்து ம்ஹூம்...., பேப்பர் கைமாறி மச்சானிடம், அவனும் மேய்ந்துவிட்டு மாம்ஸ் விளம்பரத்தைக் காணோம் என்றான். இரண்டாவது தடவையாக classified மட்டும் ஒவ்வொரு காலமாக படித்து, அதிலும் எஜுகேசன் பகுதி விளம்பரங்களை வரி வரியாக படித்ததில் கண்ணில் சிக்கியது அந்த துக்குனூண்டு விளம்பரம்.  யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாதே என்று சிரத்தை எடுத்திருக்கிறார்களோ என்ற எண்ணம் வந்து போனது.


சரி 21ந்தேதி 00:00 மணியிலிருந்து 24:00 மணிவரையான காலகட்டம் மட்டுமே Online-ல விண்ணப்பம் செய்ய அனுமதி என்று தெளிவான எச்சரிக்கை/தகவல்.

நேற்று (20ந்தேதி) இரவு 11:30 தங்க்ஸ் மொபைலில் அலார்ம் அடிக்க, இன்னேரத்துக்கு ஏன் அலாரம் உங்க குடும்பமே லூசுக்குடும்பமா என்று கொஞ்சம் அதிகப்படியாக நான் கிண்டலடிக்க... பதிலுக்கு அர்ச்சுனன் காண்டீபத்திலிருந்து புறப்பட்ட பானங்கள் போல திட்டுமழை பொழியப்பட்டது என்மேல். அந்த அலாரம் ஆன்லைன் விண்ணப்பம் செய்ய இன்னும் அரைமணி நேரம் இருப்பதை எனக்கு ஞாபகப் படுத்தவாம். 11:40 க்கு மச்சான் மொபைல் அலாரம்...

11:00 மணியிலிருந்த அந்த சைட்டை ஓப்பன் பண்ணி தேவுடு காத்துகிட்டிருந்த நான் பொறுப்பில்லாதவன் ஆகிப்போனேன் வாழ்க தங்கஸ் & தெய்வ மச்சான் :-)))

11:45 வரை இன்னும் சற்று நேரத்தில் என்று ஓடிக்கொண்டிருந்த பள்ளியின் வலைதளப் பக்கம் கானாமல் போய்...  303,404,505 error போன்ற பிழைகள் வர ஆரம்பித்து, சைட் ஒப்பன் ஆகாமல் டென்சன் ஆரம்பித்தது.....

இப்போது சைடில் ஒரு லேப்டாப்புடன் தங்க்ஸும், எதிர் வீட்டு நண்பரின் லேப்டாப் வாங்கி வந்து மச்சானும் என்கூட சேர்ந்து போராட்டத்தில் இறங்க...உனக்கு ஓப்பன் ஆச்சா...உனக்கு... ரீதியில்..... ஸ்ப்பா மணி இப்போது 1:30.  படாரென்று ஒரு சத்தம் திரும்பி பார்த்தால் மச்சான் தூங்கி வழிந்து பக்கத்தில் இருக்கும் கட்டில் சட்டத்தில்......  தலையைத் தடவுவதில் தெரிந்தது.... சரி நீ தூங்குடா நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன்.

அடுத்து தங்க்ஸ்டமிருந்து  மாம்ஸ், என்று அழைப்பு,  புரிந்து கொண்டு சரி நீயும் தூங்குடாச் செல்லம், மாமா எப்படியும் விடிவதற்குள் அப்ளை செய்துவிடுகிறேன்.....

பாவம் F5 பட்டன் வாயிருந்தால் அழுதிருக்கும்........ சைட் ஓப்பன் ஆகும் வழியைக் காணோம், மணி 5 மணி தங்கஸ் எழுந்து சிஸ்டத்தில் உட்கார, நான் வ்டை கிடைக்காத அலுப்புடன் கட்டிலில் சாய்ந்தேன். திடீரென்று கூச்சல் சத்தம் கேட்டு எழுந்தேன் கண்கள் திரக்கமுடியாமல் ஒருவித எரிச்சல்....

வலைதளம் ஓப்பன் ஆகிவிட்டது....என்ரவுடன் தூக்கம் முற்றிலும் கலைந்து உற்சாகத்துடன் தங்ஸை ஓரம் தள்ளிவிட்டு மணிமும் ஆஜரானேன். அப்பாடா... அட்மிசம் ஃபார்ம் பக்கமும் திறந்துவிட்டது......  வேகவேகமாக பெயர்,பிறந்ததேதி, வருமானம் வகையராவை நிரப்பி, பெர்த் சர்டிஃபிகேட் & கம்யுனிட்டி சர்டிஃபிகேட் அட்டாச் செய்து சப்மிட் பட்டனை அழுத்தினால்.....

செர்வர் நாட் ஃபவுண்ட்..... என்று திரையில் மின்னல்...... மறுபடியும் ஆரம்ப நிலை....  அதன் பின் தீவிரமாக துடர்ந்து F5 படையெடுப்பு அரை மணிக்கொருதரம் ஃபார்ம் திரப்பு...ஃபில் அப்பு.... செர்வர் நாட் ஃபவுண்ட்டு.......

காலை எட்டரை ஆனது நான் கீர்த்தியை பள்ளியில் விட கிளம்ப மச்சான் கணினி முன் ஆஜரானான்......

கீர்த்தியை உள்ளே அணுப்பிவிட்டு திரும்பினால் அங்கு ஏக கூட்டம் என் வயதுதொத்த (+/-) பலர் தலைவிரிகோலமாக, கண்கள் சிவந்து, முகத்தில் அதிகப்படியான சோர்வுடன்... விசாரித்ததில்..... பாவம் என்னை மாதிரியே இரவு முழுதும் கணினியுடன் மல்லுகட்டிவிட்டு தேறாமல் பள்ளியில் வந்து விசாரிக்க வந்திருக்கிறார்கள்.

வாட்ச் மேன் அறிமுகத்தால் என்னை உள்லே விட மேனேஜரிடம் ஆன்லைன் ஒர்க் ஆகததை சொல்லி விபரம் கேட்டால், இது மும்பையிலிருந்து வலைதலம் பராமறிப்பு செய்கிறார்கள். செர்வரிம் பிரச்சினை ஆகிவிட்டதாம் 9 மணிக்கி சரியாகிவிடுமாம்... என்ரு தகவல் சொன்னார். நான் வெளியில் வர கூட்டம் மோய்த்தது எல்லாருக்கும் விபரம் சொல்லி விட்டு...வீடு வந்து 9 மணி ஆனவுடன் போராடியதில்....... விடியற்காலையில் வாங்கிய அதே அல்வா.... வலதலம் திரக்கிறது...ஃபார்ம் ஃபில் அப்பு.... அதை சம்பிட் செய்தால் செர்வரிடமிருந்து அல்வா.....

அடச்சே.... என்ற அலுப்பு வந்தாலும் பையனின் படிப்பு!!! விசயமல்லவா..... இரண்டு மடக்கு டீ குடித்துவிட்டு.... கணினியில் கடமை ஆரம்பம்..... 10,11,12 மணி என்ற இடைவெளியில் மச்சானிடம் கடமையை ஒப்படைத்து விட்டு, பள்ளிக்கி சென்று தகவல் அப்டேட்.... இன்னும் ஒரு மணிநேரத்தில் சரி செய்துவிடுவார்களென்று தகவல்....(நம்ம நாராயணசாமி பேட்டியை அடிக்கடி பார்த்திருப்பார்கல் போல) ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் அதே ஒரு மணிநேரம் ஆகும் என்ர பதில்......

12 to 2 மின்தடை ... ஜாகை பக்கத்து ஏரியா பிரவுஸிங் செண்டருக்கு..... அதே அக்கபோர் 2 மணிக்கி வீடு திருன்பி வீட்டுக் கணிணியில் அதே அக்கபோர் ஆரம்பம்.... திரையைப் பார்த்துக் கொண்டே சாப்படு.... அப்பொழுதுதான் காலையில் டிஃபன் சாப்பிடாத, மாத்திரை விழுங்காதது மண்டைக்கு உறைத்து  மாத்திரை விழுங்கிவிட்டு..... ஸ்ஸ்ஸ்ப்பா முடியலை...... இடையிடையே ஒரு நிமிடம் வலைதளம் ஓப்பன் ஆவதும்... 1 மணிநேரம் போங்கு காட்டுவதுமாய்.....

தங்க்ஸ் யாருக்கோ ரன்னிங்க் கமெண்ட்ரிஸ்... இடையிடையே மாம்ஸ் அவங்க அப்லை பண்ணியாச்சாம்..... இவங்க அப்ளை பண்ணியாச்சா.... என்று திகில் கிளப்பல்.....

மாலை 5 மணிக்கி சப்மிட் பண்ணி இங்கள் தகவல் சரியாக பதியப்பட்டது. 4 மணி நேரத்திற்குள் நீங்கள் சப்மிட் செய்த அப்ளிகேசன் உங்கள் மின்ஞ்சலுக்கு வரும் அதை பிரிண்ட் செய்து கையெழுத்திட்டு, கூடவே பிறப்புச் சான்றிதழ், சாதிச் சன்றிதழ் இனைத்து பள்ளியில் சேர்க்கவும் என்று தகவல்.

அடுத்த வாரம் அழைப்பு வந்தவுடன் பையனுடன் செல்லவேண்டும் இரண்டு மிஸ்’கள் பையனிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க பேரலல்லாக எங்களிடம் படித்த படிப்பு, மாத,வருட வரும்படிகளை கேட்டு விட்டு, தகவல் வரும் என்று சொல்லியனுப்புவார்கள்.

வாரம் கழித்து நோட்டீஸ் போர்டு பார்த்து அங்கே சிலர் உர்சாகமாக துள்ளிக் கொண்டிருக்க, சீட் கிடைக்க்காத சிலர் கண்களி கண்ணீர் முட்ட (பெரும்பாலும் அம்மாக்கள்) பரிதாப நடையில் வேறு பள்ளிக்கு இதே அக்கபோர் ஆரம்பிக்கவேண்டும்.....

ஆ...ங்... சொல்ல மறந்துவிட்டேன்..... இந்த எல்லா பாடும் முடிந்து , ரிசல்ட் வரும் நாள் கையில் சுளையாக பணக்கட்டு ரெடியாக வைத்திருக்க வேண்டும்......

ஏற்கனவே என் மகள் இதே பள்ளியில்( I Std) படிப்பதால் sibling என்கிற முறையிலும், வீடு பள்ளியின் அருகில் (50மீட்டர்) இருப்பதாலும், மகள் LKG & UKGயில் Best outgoing Student award வாங்கியிருப்பதால் கொஞ்சம் அதிகப் படியான முன்னுறிமையும் குடுக்க வாய்ப்புள்ளதாத எனக்கு நானே ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளேன். பார்ப்போம்...இல்லையெனில் அடுத்த இறண்டு பள்ளிகள் என் ஃபாலோஅப்பில் இருக்கிறது என்ன மீண்டும் ஒரு போராட்டம் நிகழ்த்த வேண்டும் :-))))

மூன்று வருடங்கள் முன் கீத்திகா அட்மிசன் போது நடந்த நிகழ்வுகள் சுருக்கமாக...

1. அக்டோபர் மாதம் பிறந்ததும்,  ஒரு நாள் விட்டு ஒருநாள் பள்ளி சென்று எப்போது சேர்க்கப் படிவம் தருவீகள் என்று விசாரித்தது...

2. விண்ணப்பம் குடுக்கும் நாள் அதிகாலை மூனரை மணிக்கி பள்ளி சென்று 109வது ஆளாக க்யூவில் நின்றது... காலை எட்டேகாலுக்கு கையில் விண்ணப்பம் வாங்கி அவசரமாகவீடுவந்து குளித்து சாப்பிட்டு ஃபாரம் பிள்லப் செய்து.... 10 மணிக்கி மறுபடியும் க்யூவில் நின்று பனிரெண்டரைக்கி சேர்த்துவிட்டு வீடு திரும்பியது...

3.வாரம் கழித்து இண்டர்வியூ, பாப்பாவுக்கு தனியா, எங்களுக்கு தனியா..... (இப்ப இந்த இண்டர் வியூ இல்லைனு சொல்ராங்க...ஜஸ்ட் நாட் இஸ் யுவர் நேம், ஃபாதர்/மதர் நேம் இந்த மாதிரி மட்டும்தான் இருக்கும்போல )

4. அடுத்த வாரம் ரிசல்ட் போர்டுல பேர் பார்த்துட்டு சதோசமா வீடு....

5, அடுத்த ரெண்டாவது நாள் பணம் கட்டணும்..... 10 லிருந்து 1 மணிக்குள்ள கட்டாதவங்களுக்கு சீட் கிடைக்காது வெயிட்டிங்க் லிஸ்ட்ல இருக்கிரவங்களுக்கு ஓயிடும்..... இதுக்குனே சில பேர் குலதெய்வத்துக்கு வேண்டிகிட்டு இருப்பாங்க யாராவது பணம் கட்ட மிஸ் பண்னனும்னு....

6. ஒன் டைம் டொனேசன் + ஃபீஸ் + யூனிபார்ம் + புக்ஸ் + பஸ்கட்டனம்-தேவையெனில்.......

பள்ளி திறக்கிற நாளிலிருந்து தினமும் காலையில் தங்க்ஸ்க்கும், பாப்பாவுக்கும் பஞ்சாயத்து ஆரம்பிக்கும்... நம்ம(தந்தை’ஸ்)தலை இடையில் உருளும்......

கிராமத்தில் இருக்கும் உறவுகள் இந்த கூத்துகள பற்றி கேள்விப் பட்டால்  ஒன்று ஆ... பள்லியில் சேர்க இந்த அக்கபோரா என்று வாய் பிளப்பார்கள்... அல்லது இவனுக அலம்பல்ஸ் தாங்கலைபா என்று காறி துப்புவார்கள்.........

ஏனென்றால் என்காலம் (நான் உட்பட...) முதல் இன்று வரை அங்கே பள்ளியில் சேர்ப்பது தானாக அதுபாட்டுக்கு நடக்கும் ஒரு செயல் . 5 வயதானவுடன் ஊர் பள்ளியில் போய் விட்டுவிட வேண்டியது..... அன்றைய நாலே முக்கால் ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக இன்றைய நூற்றி எழுபத்திஐந்து ரூபாய் கட்ட வேண்டியது... ரொம்ப எளிமை.............






24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட... வாழ்வின் சுவாரஸ்யம் ஆரம்பித்து விட்டதே...

vasu balaji said...

lkgக்கே இப்படியா. இப்பத்தான ஆரம்பம்:))

Anonymous said...

எனங்க நடக்குது இந்தியாவில். என்னக் கொடுமை இது. நான் எல்லாம் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளிக்கு போனேன். ஆனால் இப்போ LKG சேர்வதற்கு இவ்ளோ போட்டியா .. பிள்ளைங்களை எல்லாம் எப்படி இனி பெற்று வளர்த்து.. அய்யோ நினைத்தாலே தலை சுற்றுது. நாலு தென்னை, ஒரு நாய், பத்து பசுமாடு வளர்த்திடலாம் போல இருக்கே.



sriram said...

Jay, Are you serious?
இது போன்ற டெரர் செய்திகள், அப்பப்ப வரும் “சென்னைக்கு போயிடலாமா” ஆசையை நிராசையாக்குகின்றன

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எல் கே said...

பெரிய இஸ்கூலுல சேர்க்கனும்னா கஷ்டப்பட்டுதான் ஆகணும்

கோவை நேரம் said...

இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கனுமா...அதுக்கு தரம் வாய்ந்த ஒரு சில அரசு பள்ளிகள் இருக்குமே....அதில் சேர்க்கலாமே...

பட்டிகாட்டான் Jey said...

// திண்டுக்கல் தனபாலன் said...
அட... வாழ்வின் சுவாரஸ்யம் ஆரம்பித்து விட்டதே... //

தி.த. அண்ணே ஆமாம்னு சுமை,சுவரஸ்யனு வாழ்க்கை போகுது.

சுகமான சுமைகள் :-)))

பட்டிகாட்டான் Jey said...

// வானம்பாடிகள் said...
lkgக்கே இப்படியா. இப்பத்தான ஆரம்பம்:)) //

பாலாண்ணே எல்கேஜிக்கிதான் இந்த அடிதடி.... :-)))))

பட்டிகாட்டான் Jey said...

// இக்பால் செல்வன் said... //

இக்பால் ஒஎரு ஏரியாவுல பத்து பள்ளிகள் இருந்தால் அதுல 3 பள்ளிகளுக்குதான் இந்த போட்டி இருக்கிறது.

பசங்க படிப்புனு வரும்போது ஒரு எல்கேஜி சீட்டுக்கு இப்படியெல்லாம் மெனக்கெட்டு கஷ்டப்படனுமா என்ற அலுப்பச் சொல்லிகிட்டே, நாமலும் அந்த கியுவில நின்னுடறோம்.....

யதார்த்த வாழ்க்கை....

நான் பள்ளி போனது நாலைரை வயசுல....

ஒன்னாங்கிளாஸ் வாத்தியார் வீட்ல வந்து அட்மிசன் போட்டு தூக்கிட்டு போய்ட்டாரு. அரசு பள்ளி நம்மல்ல பலர் இப்படித்தான் வந்து இன்னிக்கி சென்னைலயும், உலகத்துல பல இடங்கல்லயும் கோலோச்சிகிட்டு இருக்கோம்.....

அக்டோபர் தொடக்கம் டிசம்பர் முடிய, எல்லா தனியார் பள்ளிகளும் அடுத்த கல்வி ஆண்டுக்கான அட்மிசன் முடிச்சிடுவாங்க... மீதி இருக்கிரது சில தனியார் மற்றும் அரசு பள்ளிகள்தான்.....

எருமை மாடு மேய்க்கிரது கொஞ்சம் சுளுவான வேலைதான், நான் ஒத்துக்கிடுறேன், என்னா என்னோட அனுபவம் அது :-)))))))))))))

பட்டிகாட்டான் Jey said...

// sriram said...
Jay, Are you serious?
இது போன்ற டெரர் செய்திகள், அப்பப்ப வரும் “சென்னைக்கு போயிடலாமா” ஆசையை நிராசையாக்குகின்றன //

நான் இங்கெ சொல்லியிருக்கிற விசயம் யதார்த்த நிஜம். இன்னிக்கி காலைல பாப்பாவை பள்ளியில் விட்டு திரும்பொம் போது நேற்றைய காட்சிகளே....

50 க்கும் மேல் பெற்றோர்கள், முகத்தில் கவலையுடன், அப்பாக்கல் சிலை அலுவலகத்துக்கு லீவு போட்டுட்டு வந்து விசாரிச்சிகிட்டும்...

இது எல்லா பள்ளிகளுக்கும் நடக்கிரதில்ல ஸ்ரீராம் அண்ணேன். 150 சீட்டுக்கு அப்லிகேசன் குடுக்க அளிக்கிர 24 மணி நேரத்துல 1000 அப்ளிகேசன் வருகிர பள்ளிகளில்தான் இந்த போட்டி.

ஏற்கனவே சொன்ன மாதிரி விருகம்பாக்கம் எடுத்துகிட்டா 20 பள்ளிகள் வரை இருக்கும்னா அதுல 7 பள்ளிகளுக்குதான் இந்த போட்டி நடக்குது... அதுலேயும் முதல் மூனுனு பிரிச்சி வச்சிகிட்டு எல்லாரும் அதுக்குதான் முட்டி மோதுறாங்க(என்னையும் சேர்த்து) அதான் இந்த பிரச்சினை...

1st standard -லிருந்து கொஞ்சம் லிபரலா கிடைக்க வாய்ப்பிருக்கு, ஏன்னா நெம்பர் ஆஃப் சீட்ஸ் கூட்டிடுவாங்க, ஒரு வகுப்புல இருக்கிரவங்க எண்ணிக்கையும் கூட்டிடுறதால அந்த ரிலாஸ்...

ஆனா எல்கேஜி வகுப்புக்கு 25 பேர்தான் அதான் 6 செக்சன் வச்சிகிட்டாலும் 15 க்கு மேல சேர்க்க முடியாது...

பதமாஷேசாத்ரி சேர்க்கனும்னா ப்ரீ-கேஜி-க்கே இந்த க்யூ நேரடியா எல்கேஜி சேர்க்க முடியாது.... :-)))

புள்ளையப் பெத்துட்டு இந்த காலத்துல இதுக்கெல்லாம் பயப்படலாமா அண்ணேன் :-))))))))))))))))))

பட்டிகாட்டான் Jey said...

// எல் கே said...
பெரிய இஸ்கூலுல சேர்க்கனும்னா கஷ்டப்பட்டுதான் ஆகணும் //

இது அனுபவஸ்தர் பேச்சி :-)))))))))

பட்டிகாட்டான் Jey said...

// கோவை நேரம் said...
இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கனுமா...அதுக்கு தரம் வாய்ந்த ஒரு சில அரசு பள்ளிகள் இருக்குமே....அதில் சேர்க்கலாமே... //

தரம் வாய்ந்த அரசு பள்ளிகள் எங்கே இருக்குது மச்சி.... அப்படியே எங்காவது இருந்தாலும்.... அம்புட்டு தூரத்துல போய் எப்படி சேர்க்கிறது?!!!!

மூனு வருசம் முன்னாடி, பாப்பாவை சேர்க்க, நான் என் ஏரியாவுல இருக்கிர 20 க்கும் மேல இருக்கிற பள்ளிகள் சிலதுக்கு நேரடியா விசிட் அடிச்சும், நண்பர்கள் மூலமா விசாரிச்சும் பார்த்து 5 பள்ளிகள் கணக்குல வச்சிகிட்டு அந்த பள்ளிகளுக்கு முன்னுரிமை குடுத்தேன்.

இப்ப பையனுக்கு பாப்பா படிஉக்கிர பளியிலேயே சேர்க்க விருப்பம் அதான் எம்புட்டு போட்டி இருந்தாலும் கோதாவில் :-)))))))))))))

வெளங்காதவன்™ said...

/எருமை மாடு மேய்க்கிரது கொஞ்சம் சுளுவான வேலைதான், நான் ஒத்துக்கிடுறேன், என்னா என்னோட அனுபவம் அது :-))))))))))))) ///

காலைல எழுந்து, சாணி அள்ளிக் கொட்டி, கட்டுத்தறி மாத்திக் கட்டி, பால் கறந்து, தீவனம் வச்சு, மேய்ச்சலுக்கு விட்டு, தண்ணி காட்டி, தீவனம் வெட்டி, நிழலில் கட்டி, புண்ணாக்கு கலக்கி, etc., etc....

ங்கோய்யாலே... சொல்லவே இம்புட்டு நேரம்... இப்போ சொல்லு, எருமை மேய்க்கிறது சுளுவா?

#எதுக்கும் நீ சொல்றது என்னோட மனசைக் காயப்படுத்தியிருக்கு. சோ,66A ல கேசப் போடலாம்னு இருக்கேன் வோய்! நல்ல லாயராப் பாத்து சொல்லவும்

பட்டிகாட்டான் Jey said...

// காலைல எழுந்து, சாணி அள்ளிக் கொட்டி, கட்டுத்தறி மாத்திக் கட்டி, பால் கறந்து, தீவனம் வச்சு, மேய்ச்சலுக்கு விட்டு, தண்ணி காட்டி, தீவனம் வெட்டி, நிழலில் கட்டி, புண்ணாக்கு கலக்கி, etc., etc.... //

வெளங்காதவனே, ஒரு காலத்துல இந்த வேலைகலை இஷ்டப்பட்டு, கஷ்டமில்லாத செஞ்சிட்டிருந்தேண்டா...

இதுல எருமை சவாரியும் சேர்த்துக்கோ... அதுதான் எங்க ஹார்ஸ் ரைடிங் ஒரு காலத்துல. சேஃப்டிக்கி சேனம் கட்டாம, கடிவாலமும் இல்லாம ஓடுர மாட்டுல கீழே விலாம உக்கார்ந்துகிட்டு போரது சும்மா இல்லை ...:-)))))))))))

நாடோடி இலக்கியன் said...

ரொம்ப பயனுள்ள பதிவு முக்கியமா எனக்கு. அப்படியே பீதியையும் கிளப்பிய பதிவு.

பட்டிகாட்டான் Jey said...

// நாடோடி இலக்கியன் said...
ரொம்ப பயனுள்ள பதிவு முக்கியமா எனக்கு. அப்படியே பீதியையும் கிளப்பிய பதிவு.//

அண்ணே ரொம்ப பீதியெல்லாம் வேண்டாம். இது இப்போதையா யதார்த்தம் ஆகிவிட்டது.

உங்கள் ஏரியாவில் இருக்கும் பள்ளிகளின் தகவல்கள் இப்போதே சேகரித்து அதி முன்னுரிமை அளிக்கும் பள்ளிகள் எந்த மாதங்களில் சேர்க்கை விண்ணப்பம் குடுக்கும் அல்லதி சேர்க்கை ஆரம்பிக்கும் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.

கல்வியாண்டின் ஜூன் மாதம், குழந்தைக்கி 3 1/2 வயது பூர்த்தியாகீருக்கவேண்டும் என்பது சிபிஎஸ்சி பள்ளிகளின் கண்டிசன்...
டிச. 11 டூ அடுத்த டிசெ. 10 ஆக நிர்ணயிக்கிறார்கள் பல பள்ளிகளில்.

(டிச. 11, 2008 லிருந்து டிச. 10,2009 இடையிலான பிறந்த தேதி உள்ளவர்களுக்கு தற்போது எல்கேஜி அட்மிசன் நடக்கிறது )

மெட்ரிக்பள்ளிகளில்(தற்போது சமச்சீர்) 3 வயது இருந்தாலே சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனா நம்ம் ஊர்ல மாதிரி , பள்லி சேர்க்கைதான விடுமுறை முடிந்து பள்ளி திரந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடமுடியாது என்பது உண்மைதான்....

பிள்ளையப் பெத்தா பல சுகங்களோடு, இந்த மாதிரியான சுளுக்கும் ஏற்படுகிறது என்ன செய்ய :-))))))))))

நாடோடி இலக்கியன் said...

என் மகள் 2011 மே. எல்.கே.ஜி க்கு முன் பிரிகேஜி,பிளே ஸ்கூல் அப்படின்னு என்னன்னவோ சொல்றாங்களே, அது அவசியம் சேர்க்கணுமா? இல்லை நேரடியா எல்.கே.ஜி யில் சேர்க்கலாமா?



பட்டிகாட்டான் Jey said...

// நாடோடி இலக்கியன் said...
என் மகள் 2011 மே. எல்.கே.ஜி க்கு முன் பிரிகேஜி,பிளே ஸ்கூல் அப்படின்னு என்னன்னவோ சொல்றாங்களே, அது அவசியம் சேர்க்கணுமா? இல்லை நேரடியா எல்.கே.ஜி யில் சேர்க்கலாமா? //

அண்ணே, பிளே ஸ்கூல் / பிரிகேஜி ரெண்டுக்கும் அடிப்படைல வித்தியாசம் இல்லைணே,

ஆனாலும் சின்னதா வீட்டில் நடத்தும் பக்கத்து ஏரியா ஸ்கூல் ப்ளேஸ்கூலாவும், ரெகுரல் பள்ளிகளி இருப்பது பிரிகேஜியாகவும் அடயாலப்படுத்துகிறார்கள்.

சில பள்ளிகளில் பிரி-கேஜிக்கே அட்மிசன் நடைபெறும் அந்தப் பள்ளிகளில் போய் நேரடியாக எல்கேஜி சேர்க்கமுடியாது.... உ.ம். பத்மா ஷேசாத்ரி பள்ளிகள், பொன் வித்யாஸ்ரம் போன்ற பள்ளிகள் இங்கே இரண்டரை வயதில் பிரிகேஜி அட்மிடன் பெறவேண்டும்... பணமும் அதே அளவுதான்(மயக்கம் வரலாம்!!!)..

மற்ர பள்ளிகளில் நேரடியாக எல்கேஜி அட்மிசன் நடக்கிறது.... அபோது சேர்க்கை படிவத்தில், குழந்தை ஏற்கனவே படித்த பிரிகேஜி அல்லது பிளே ஸ்கூல் விபரங்கள் கேட்கிறார்கள்....

நான் அறிந்த வறை ஏற்கனவே பிரீகேஜி/பிளேஸ்கூலில் சேர்த்திருந்தால் அது கூடதல் வாய்ப்பாக இருக்கும் என்பது....

நீங்க குழந்தையை சேர்க்க விரும்பும் பள்ளியில் நேரடியாக எல்கேஜி சேர்க்கிரார்களா அல்லது பிரிகேஜி-யிலிருந்தா என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் அண்ணே.

வேற வழியில்லை... இந்த முறைகளில் நமக்கு விருப்பமில்லை என்றாலும் யதார்த்தத்தில்... இதைதான் ஃபாலோ செய்ய வேண்டியிருக்கிறது.

நீங்கள் அடுத்த வருடம் ப்ரிகேஜியில் சேர்த்து விட்ருங்கண்ணே. அங்க மற்ற குழந்தைகளோடு விளையாட ஆர்வமாத்தான் போறாங்க. கலை 9:30 டூ 12 மணி....:-))

நாடோடி இலக்கியன் said...

இந்த சிஸ்டத்தில் உடன்பாடு இல்லை என்றாலும் ஊரோடு ஒத்து போய்தானே ஆகணும். என்ன பண்றது...

ரொம்ப நன்றிங்க, அக்கறையான கருத்துகளுக்கு.

நாய் நக்ஸ் said...

வரவர இளைக்கியதரத்துல எழுத ஆரம்பிச்சிட்டாரே....

பின்,,முன்,,நவீனத்துவும் அனைத்தும் சமைக்குராரே....

புக்கர் பரிசு வான்கிடுவாரோ...???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாய் நக்ஸ் said...
வரவர இளைக்கியதரத்துல எழுத ஆரம்பிச்சிட்டாரே....

பின்,,முன்,,நவீனத்துவும் அனைத்தும் சமைக்குராரே....

புக்கர் பரிசு வான்கிடுவாரோ...???//////

யோவ் அத வாங்குறதுக்குத்தானே உங்களை நாச்சியப்பன் பாத்திரக் கடைக்கு அனுப்பிச்சோம்.... போனமா வாங்கிட்டு வந்தமான்னு இல்லாம ஏன்யா இப்படி.....?

Avargal Unmaigal said...

அட போங்கப்பா நான் இந்தியாவில் இருந்தால் இப்படிபட்ட ஸ்கூலில் சேர்க்க கஷ்டப்படமாட்டேன் அதற்கு பதிலாக பிள்ளைகளுக்கு பணம் அதிகம் கொடுத்து கொஞ்ச்ம் கெடுத்து தமிழ் டிவி சினிமா பார்க்க வைச்ச்சு திராவிட கட்சி உறுப்பினராக்கி விட்டால் பயபுள்ளைங்க திறமையா பணம் சம்பாத்தித்து தொழில் அதிபராகி நீங்க சொன்ன ஸ்கூலில் கஷடப்பட்டு படித்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவார்கள். என்ன ஜெய் நான் சொன்னது சரிதானே?

பட்டிகாட்டான் Jey said...

// யோவ் அத வாங்குறதுக்குத்தானே உங்களை நாச்சியப்பன் பாத்திரக் கடைக்கு அனுப்பிச்சோம்.... போனமா வாங்கிட்டு வந்தமான்னு இல்லாம ஏன்யா இப்படி.....? //

கப் பள பளன்னி மின்னுற மேரி வாங்கிட்டு வரச்சொல்லிடு பன்னி :-)))

பட்டிகாட்டான் Jey said...

// Avargal Unmaigal said...
அட போங்கப்பா நான் இந்தியாவில் இருந்தால் இப்படிபட்ட ஸ்கூலில் சேர்க்க கஷ்டப்படமாட்டேன் அதற்கு பதிலாக பிள்ளைகளுக்கு பணம் அதிகம் கொடுத்து கொஞ்ச்ம் கெடுத்து தமிழ் டிவி சினிமா பார்க்க வைச்ச்சு திராவிட கட்சி உறுப்பினராக்கி விட்டால் பயபுள்ளைங்க திறமையா பணம் சம்பாத்தித்து தொழில் அதிபராகி நீங்க சொன்ன ஸ்கூலில் கஷடப்பட்டு படித்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவார்கள். என்ன ஜெய் நான் சொன்னது சரிதானே? //

அப்படினா நாம அட்லீஸ்ட் ஒரு வட்டம், சதுரம், முக்கோனம்னு ஒரு பதவியில இருக்கனுமே..... :-)))

LinkWithin

Related Posts with Thumbnails