மூன்று நாள் விடுமுறயில் சொந்த கிரமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்கு செல்லும்போதெல்லாம், பால்ய நண்பர்களுடன் எங்க ஊர் டெண்ட்கொட்டாயில் படம் பார்ர்க்க செலவது வாடிக்கை ( ரிலீசாகி ப்ரிண்ட் எல்லாம் தேய்ந்து போன நிலையில் அதரப்பலசான படங்கள் தான்). இந்த தடைவை ஊருக்கு சென்ற போது மழை ஆரம்பித்திருந்ததால், பெரும்பாலான நண்பர்கள் விதை விதைக்க, களையெடுக்க, தண்ணீர் கட்ட என்று மும்முரமாக இருந்தார்கள், இவர்களை தேடிப் பிடிக்க தோட்டவெளிகளில் திரிய வேண்டியாகிவிட்டது. ஒருவழியாக சிலரை பார்த்துவிட்டு, மதியம் அவர்கள் கொண்டு வந்திருந்த கஞ்சியை(எளிமையான சாப்பாடுதான் ஆனா அந்த ருசிக்கு ஈடு கிடையாது) பகிர்ந்து சாப்ட்டிட்டு வீடு வர இரவாகிவிட்டது. சரி தூங்கலாம் என்றால், எனது அக்கா பையன் , சினிமாவுக்கு போலாம் மாமா என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.
நண்பர்கள் தோட்ட வேலைகளில் பிஸியாகி விட்டதால்( அவர்கள் பெரும்பாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் தோட்டத்திற்கு கிளம்பி விடுவார்கள்) இன்று மாறுதலுக்கு அக்கா பையனுடன் செல்ல தீர்மானித்தேன்.
ஒருவழியாக கிளம்பி கொட்டாயிக்கு முன் ரோட்டிலுள்ள கடையில் ( எல்லாம் நம்ம மாமன்,மச்சான், பங்களிகதுதான், ரெண்டு டீக்கடை, ஒரு புரோட்டா ஸ்டால் மட்டும்தான், இப்பத்தான் கவருமெண்டு புண்ணியத்துல டாஸ்மாக் ஒன்னு புதுசா வந்திருக்கு) டீ சொல்லிவிட்டு ( சென்னையில் இருப்பதால் டீ ஒசி, பதிலுக்கு சென்னை வந்தால் 4 நாலாவது வீட்டில் டேரா போடுவார்கள்) உட்கார்ந்தேன். திடீரென்று மாமா முதல் சோ விட்டுட்டாய்ங்க நான் போய் டிக்கெட் எடுக்க கியூவில் நிக்கிறேன் என்று சொல்லி அக்கா பையன் போனான். சிறிது நேரத்தில் ஓடி வந்து மாமா எனக்கு டிக்கெட் கொடுக்க மாட்டேனுட்டு டிக்கெட் கவுண்டரை மூடிட்டாங்க வந்து என்னானு கேளுங்க என்று வந்தான், எனக்கு ஒரே கொழப்பம், தக்காளி நம்மூர் கொட்டாயில நமக்கே டிக்கெட் இல்லையா, வாடா இன்னிக்கு கொடாய பிருச்சுருவோம் என்று சொல்லி ஒரே கலேபரம், ஒருவழியாக, கொட்டாய் ஓனரு பேச்சிவார்த்தக்கு வந்தார், அதெப்படி நீங்க டிக்கெட் கொடுக்க மாட்டேனு சொல்லாம்னு எகிற ஆரம்பித்தேன், அப்பதான் தெரிஞ்சது 2 வது சோ பாக்க நானும், என் அக்கா பயனும் மட்டும் தான் வந்திருக்கிறோம் ( தூரல் விழுந்து கொண்டிருந்தது காரணமா, வெவசாய வேலைகள் அதிகமாகிவிட்டது காரணமா தெரியவில்லை ). உங்க ரெண்டு பேருக்காக எப்படி படத்த ஓட்டுரது என்ற கொட்டாய் ஓனரின் வாதம் ஒரு புரம், படம் பார்க்காமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று எனது அக்கா பையனின் மன்றாடல் ஒருபுரம். அதற்குள் ரோட்டுகடை மக்கள் வாடிக்கையாளர்கள் என்று சிறு கூட்டம் சேர்ந்துவிட்டது. பங்காளி சென்னையிலிந்து நம்ம கொட்டயில் படம்பார்க்குறதுக்காகவே வந்துருக்கான்யா ஏமத்திராதயா என்று நமக்கு ரெகமெண்டேசன் வேறு. கொட்டாய் ஓனர் குறந்தது 12 பேர் ( அது என்ன 12 பேர் கணக்கு என்பது இன்ற்வரை எனக்கு தெரியாது) வந்தால்தான் படம் போடுவோம்னு ஒரே பிடிவாதம்.
கடைசியில் நான் 12 டிக்கெட்டுக்கான காசை கொடுப்பது எனவும், கொட்டயில் படத்தை ஓட்டுவது எனவும் ஒரு இன்ஸ்டண்ட் பஞ்சாயத்து தீர்ப்பு கூறப்பட்டது. ( 12 டிக்கிட்டுக்கும் சேர்த்து கொடுத்த பணம், நம்ம சென்னையில் தியேட்டரில் விற்கும் ஒரு டிக்கெட் விலையை விட ரொம்பவும் கம்மி என்பது கூடுதல் தகவல்). சரியென்று ஒருவழியாக படம் ஆரம்பித்தது, உலக அழகிகளில் நம்ம ஐஸூக்கு அடுத்த படியான அழகு இந்த படத்தின் நாயகி என்ற எண்ணம் இருந்ததால் சரி பார்ப்போமே என்று என்னை நானெ சமாதானம் செய்துகொண்டேன். படம் போட்டு 20 நிமிஷம் ஆகியிருக்கும் மெதுவாக தூக்கம் வருது வீட்டுக்கு போலாம் மாமா என்றான் அனது அக்கா பையன். எனக்கு பஞ்சாயத்தெல்லாம் கூட்டி படம் போட சொல்லிவிட்டு இப்படி தூக்கம் வருதுனு சொல்றானே, சின்னப் பய புத்திய காட்டிடானே என்று கோபமாக இருந்தாலும், கொட்டாய் ஓனர், ஆபரேட்டர், வேலை செய்யும் 2 பேர் என்று எல்லொருக்கும் விடுதலை கொடுக்கலாம் என்ற நல்லெண்ணத்தில், படத்தை நிறுத்த சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்பொதும் ஊருக்கு சென்றால் என்ன மாப்ள இன்னிக்கு 2 வது சோ போவோமா என்று என்னை கிண்டலடிக்க காரணமாக இருந்துவிட்டது இந்த நிகழ்வு.
(உங்களுக்கு ஏதும் இந்த மாதிரி அனுபவம் இருக்குங்களா?)
டிஸ்கி : பதிவு ப்டிச்சிருந்தா பின்னூட்டமும் அப்படியே ஓசில ஒரு ஓட்டும் போட்ருங்க நண்பர்களே
டிஸ்கி : பதிவு ப்டிச்சிருந்தா பின்னூட்டமும் அப்படியே ஓசில ஒரு ஓட்டும் போட்ருங்க நண்பர்களே